வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Friday, December 29, 2006

பாவமும், புண்ணியமும் (Sins and Virtues)

நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ, அந்த விளைவைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாகப் பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் 'புண்ணியம்' என்றும், தீமையான விளைவாக இருந்தால் 'பாவம்' என்றும் கூறுகிறோம். பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால், நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? அந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. ஆகவே, செயலில் பாவம், புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது புண்ணியம் எது? பாவம் எது? என்று சிந்திக்க வேண்டும்.புண்ணியம் எது? எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.பாவம் எது? ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இயற்கைச் சட்டம் (Law of Nature)

இயற்கை அமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைச் செய்தால் அதற்கு விளைவாகத் தக்க பயன் வரும். அது நிச்சயம். இது இயற்கைச் சட்டம் (It is the Law of Nature). இறைவனுடைய திருவிளையாடலை உணர்ந்து கொள்வோமேயானால், நாம் இரண்டு வகையிலே விழிப்போடு இருந்து பெற வேண்டியதைப் பெறலாம். ஒன்று, இயற்கையின் நியதியை உணர்ந்த மாத்திரத்திலேயே இயற்கையைச் சார்ந்து விடுகிறோம். எல்லா இயக்கங்களும் எல்லா விளைவுகளும் ஒரு நியதிக்கு உட்பட்டுத் தான் நடந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்கின்ற போது, அந்த நியதிக்கு அடிப்படையாக உள்ள ஒரு பேராற்றலோடு ஒன்றி நிற்கின்றபோது அந்த நியதியை நன்றாக உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு மனநிலையும் உண்டாகும். அறிந்து கொள்வது என்பது வேறு. மறவாது இருப்பது என்பது இரண்டாவது. மூன்றாவதாக உணர்ந்ததைச் செயல்படுத்தித் தான் அதனுடைய நலனைப் பெறுவது என்பது. இந்த மூன்று வகையிலே மனிதன் முயற்சி எடுத்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ, அதை அவனாலே நிச்சயமாகப் பெற முடியும். என்ன பெற முடியாது என்று நினைக்கிறானோ அதை விட்டு விட வேண்டியது தான்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஐந்தில் அளவு முறை (Proper usage of five senses)

உணவு, உழைப்பு, உறக்கம், பாலுறவு, எண்ணம் இவற்றில் அளவோடும், முறையோடும் செயலாற்ற வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றைக் கூட அலட்சியம் செய்வது கூடாது. அதாவது அடியோடு தடைப்படுத்தவோ, மிகவும் குறைத்துவிடவோ கூடாது; மிகுதியாகவும் கொள்ளக் கூடாது; முரண்பாடாக அனுபவிப்பதும் கூடாது. விழிப்பு நிலையோடு மிதமாக உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் எனும் இவ்வைந்தோடு செயல்புரிய வேண்டும். இதனால் துன்பம் எழாமல் காக்கலாம். இயற்கையாக எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக் கொள்ளும் அனுபவமே ஒரு இன்ப உணர்வு ஆகும். இன்பத்தை நாடி மிகுதியாக இவற்றை அனுபவிக்கும்போது, உயிராற்றல் மிகுதியாகச் செலவாகி அதன் விளைவாகத் துன்பம் தோன்றும், துன்பம் மிகும். ஐம்புலன் கருவிகளின் நலமும், பொதுவாக உடல் நலமும் கெடும். மேலும், மனிதன் தனது உயிராற்றலின் மதிப்புணர்ந்து அதைப் போற்றிக் காத்து வரவேண்டும். மனிதனுக்கு உயிராற்றல் தான் ஒரு பெரும் நிதி. உடல் உறுப்புக்களாலும், ஐம்புலன்களாலும் ஆற்றும் செயல்களில் உயிராற்றலானது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்னும் பஞ்சதன் மாத்திரைகளாக மாற்றம் பெற்றுச் செலவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த உயிராற்றல் மிகுதியாகச் செலவாகாமல் காத்துவர வேண்டியது அவசியம். ஐம்புலன்கள் மூலமாக உயிராற்றல் மிகுதியாகச் செலவானால் (1) ஐம்புலன் கருவிகள் கெடும் (2) உயிராற்றலின் அளவும், அழுத்தமும் உடலில் குறைந்து உடல்நலம், மனநலம் இரண்டும் குழப்பமடையும். இதன் அவசியத்தையே திருவள்ளுவர், "சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றமென்றைந்தின்வகை தெரிவான் கட்டேயுலகு" - என்று அருளியதையும் நினைவு கூற வேண்டும். விழிப்பு நிலையோடு ஐம்புலன்களின் இயக்கத்தை அளவுபடுத்திக் கொள்வதால் துன்பம் எழாமல் காக்கலாம்; நிலையான இன்பத்தையும் அனுபவிக்கலாம். நெறியுடன் வாழும் இத்தகைய வாழ்க்கை முறையால், தானும் நலமுடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் வாழலாம்; பிறரையும் நமது உதவியால் நலமாக வாழ வைக்கலாம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தியானத்தின் நன்மைகள் (Benefits of Meditation)

விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள். உடலளவில் ஏற்படும் நன்மைகள் :-

1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன.

இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம் :

1. மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.
2. மூளையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது. 3."As a man thinketh, so he becomes it", "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்தவெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.
4. விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தி உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave-க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும்,உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Thursday, December 28, 2006

அலையின் தொடர்பு (Association of waves)

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது. அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம். நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது. நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எல்லாம் நன்மையே! (Everything is for the good)

துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும். அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை. துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்? மனிதனிடம் தானே வரவேண்டும். இடம் கொடுக்கக்கூடிய மனிதனிடம் தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும். நான் பிறந்தேன்; வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு தான் இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை; உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை; நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு; இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும்போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதிலே ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத் தான் இருக்கும். வாழ்க்கையை ஒட்டிப் பார்த்தீர்களானால், எல்லோருக்கும் நிறைவாகத் தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பதே இல்லை.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

துரியாதீத தவம் - பலன்கள் (Thuriyadeedh Meditation - Benefits)

பொறுமை, விட்டுக் கொடுத்தல், ஈகை ஆகிய மூன்று பண்புகள் குண்டலினியோகிகட்குத் தானாக அமையும். (Tolerance, Adjustment & sacrifice).
2. இயற்கையின் மறைபொருள்களை உணர முடியும்.
3. மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் ஆகிய உருவ அமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் ஆகிய ஏழையும் நல்ல நிலைக்கு மாற்றி இணைய வைக்கிறது.
4. வினைப்பதிவுகளை மாற்றுகிறது.
5. மனதின் மறுமுனையான தன்னைத் தெய்வத்தோடு இணைக்கிறது.
6. தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், வேண்டாப்பற்று என்று கூறப்படும் மும்மலங்களையும் நீக்கி விழிப்பு நிலைக்கு வரவழைக்கிறது.
7. யோகிகள் பற்றறிவினின்று விடுபட்டுக் கற்றறிவில் ஈடுபட்டு முடிவில் முற்றறிவில் லயம் ஆவர்.
8. பிரவிருக்தி மார்க்கத்தினின்று விடுபட்டு நிவர்த்தி மார்க்கத்திற்கு ஈர்க்கிறது.
9. புலனடக்கம் உண்டாகி அறிவு அமைதியடையச் செய்கிறது.
10. பிரம நிலையான உண்மை அறிவதற்கு நுண்மையறிவு ஏற்படச் செய்கிறது.
11. எல்லை கட்டிய தன்மையினின்று விடுபடச் செய்கிறது.
12. பகுதி அறிவு ஆனது முழுமையை நோக்கிப் பயணம் ஏற்க உதவுகிறது.
13. மனம் ஓடாது, தன்னை மறவாது மனதைப் பயிற்சிப்படுத்த வேண்டும். மனமே செயல்படும்.
14. எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும் நன்மையே விளைவிக்க நாட்டமாயிருக்கச் செய்யும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Peace

நமது உலக சமுதாய சேவா சங்கத்தின் நோக்கம் மனித வாழ்வில் அமைதி காண்பதேயாகும். தன்னில் அமைதி, சமுதாய வாழ்வில் அமைதி, உலக அமைதி என மூன்று எல்லைகளைக் குறிப்பாகக் கொண்டு, ஒன்றோடு மற்றது ஒத்தும் உதவியும் நலம் காணும் முறையில் நமது செயல் திட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. நமது நோக்கத்தில் வெற்றி பெற வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமைந்து நாம் செயலில் இறங்கும் போது சில பல முன்னேற்றமான செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறான மாற்றங்களைச் செயல்படுத்த முயலும்போது அவற்றின் உட்கருத்துக்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரவர்கள் அறிவு வளர்ச்சி பெற்றுள்ள அளவில், அவர்கள் வாழ்வில் கண்ட அனுபவங்கள் வரையில் எல்லை கட்டிக் கொண்டு, அந்த எல்லைக்குட்பட்டே எல்லாரும், எல்லா நிகழ்ச்சிகளும், செயல்முறைகளும் உருவாக வேண்டும், நடைபெற வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அத்தகையவர்களிடம் கருத்துப் பிணக்குக் கொள்ளாமல் நமது நோக்கங்களை அமைதியாக விளக்கி அவர்களையும் ஒன்றுகூட்டிச் செல்ல வேண்டும். நமது நோக்கம் உலக அமைதி, நமது செயல்முறை தொண்டு, நமது துறை ஆன்மீகம்....அருள் விளக்கம்.... யோகம். இவற்றில் பிறரைக் கட்டுப்படுத்த இடமே இல்லை. ஒவ்வொருவரும் தம்மைத் தாம் தகுதியாகவும், இனிமையாகவும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். அருள் தொண்டும், அறவாழ்வும் சிறப்புற அமையச் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் என்ற மூன்றும் விழிப்போடு பழகி இவற்றை இயல்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் நிறைவும் இருக்கும்; குறைவும் இருக்கும். அவை யாவும் காண்போர் கருத்தின் ஏற்றத்தாழ்வேயாகும். எனவே, நிறைவை நாடியே செல்வோம். இயற்கையில் அமைந்துள்ள ஆயிரமாயிரம் இன்பங்களை உணர்வோம், அனுபவிப்போம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Wednesday, December 27, 2006

இயற்கையிலேயே தியாகிகள் (Sacrificial - by nature)

நம் நாட்டின் பண்பாட்டின்படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று சொல்லலாம். ஏன் என்றால், அவர்கள் கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய், தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்து விட்டுத்தான் வருகின்றார்கள். திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்து விடுகிறது. அந்த அளவுக்குத் துறந்த பிறகு இங்கே அன்பு நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம். சேர்ந்த இடத்திலே இந்த ஒரு பெரிய உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டியது ஆண் மக்களுடைய கடமையாகும். சாதாரணமாக ஒரு மனைவி என்ற மதிப்பில் மாத்திரம் வேண்டியது அன்று. பெண்மை என்ற மதிப்பிலே, தாய்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய மதிப்பைப் போல நம் வீட்டுக்கு வந்த பெண்ணிற்குக் கூட அந்த மதிப்பு உண்டு என்று பார்த்து நடந்து கொள்ளலாம் அல்லவா? எல்லாம் சரியாகப் பார்க்கும்போது சாதாரணமாக ஆணுக்கு ஆண் என்ற நட்பிலே ஒரு எல்லை வரையில் தான் இருக்கும். ஆனால் கணவன் மனைவி உறவிலே இருக்கக்கூடிய இந்தப் பண்பாடு, தியாகம் இதைச் சரியாக உணர்ந்து நடப்பீர்களேயானால் அதைவிட ஒரு பெரிய இன்பம் இந்த உலகத்தில் வேறு இருக்க முடியாது. அதை நல்ல முறையில் காப்பாற்றிக் கொள்வதற்கு வாழ்த்தி, வாழ்த்தி அந்த வாழ்த்திலே வளம் காணலாம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இயற்கை என்ற சொல்லின் பெருமதிப்பு (Greatness of the word - Nature)

ஆதியெனும் இருப்பு நிலை (சுத்தவெளி)2. இருப்பு நிலையின் தன்னடக்க ஆற்றலால் தானே துண்டுபட்டு நுண்ணிய அளவில் தற்சுழல் அலையாக எழுச்சி பெற்று இயங்கும் பரமாணு.3. பரமாணுவின் சுழற்சி விரைவால் எழும் விரிவலை இருப்பு நிலையான சுத்த வெளியோடு இணைவதால் ஏற்படும் வான்காந்தம்.4. பரமாணுக்களின் கூட்டு இயக்கத்தால் உண்டாகிற காற்று நெருப்பு, நீர், நிலம் ஆகிய நான்கு நிலைகளோடு பரமாணு நிலையும் சேர்க்க விளங்கி நிற்கும் ஐந்து பெளதீகப் பிரிவுகள் (பஞ்ச பூதங்கள்)5. ஓரறிவு உயிரினத் தாவரங்கள் முதல் ஆறறிவுடைய மனிதன் வரையில் உள்ள உயிரினங்கள் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றுபடுத்திக் கூறப்படும் சொல் தான் இயற்கை எனும் பெரு மதிப்புடைய சொல். இயற்கையின் ஆதி நிலையான இருப்பு தனக்குள் அடங்கியுள்ள ஆற்றலால் மலர்ச்சி பெற்று, வெவ்வேறாகக் காட்சியாகும் பரிணாம சரித்திரத்தில் ஒவ்வொரு நிலையையும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் குறிப்புகளே எந்த மொழியிலும் அடங்கிய சொற்களாகும். அளவிட முடியாத ஆற்றலுடைய இப்பேரியக்கப் பெருங்களமான இயற்கையைப் பகுத்துப் பகுத்தும் தொகுத்துத் தொகுத்தும் உணரக்கூடிய சிற்றறிவு, பேரறிவு, முற்றறிவு என்ற மூன்று நிலைகளையும் அறிவின் சிறப்பாகப் பெற்றவன் மனிதன். இவ்வளவு சிறப்பையும் இயற்கையாலும், தன் செயலாற்றலாலும், சிந்தனை உயர்வாலும் பெற்ற மனிதன் ஏன் வாழ்வில் துன்பங்களையும், சிக்கல்களையும் அனுபவிக்க வேண்டும்? இந்தச் சிந்தனையின் மூலம் மனித ஆற்றலையும், பிறவியின் நோக்கத்தையும் உணர்ந்து வாழ வேண்டிய இடத்தில், காலத்தில், அளவில் தனது ஆற்றல்களைப் பெருக்கிக் கொண்டு, பயன்படுத்திச் சிறப்பாக வாழ வழி காண வேண்டும். இதற்குத் தவமும், அறமுமே உதவும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அறிந்தது சிவம்,மலர்ந்தது அன்பு

இறைவனிடம் ஏதோ பெற வேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் - அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக் கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான்; துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு. அந்த உறவை, உண்மையான உறவை, அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது? சேவையாக உண்டாகிறது. அப்பொழுது, அறிந்தது சிவம். இங்கே என்ன? காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது. அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே; பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே, நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது - அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான். எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்; எந்த நிலையிலேயும் அவனைக் காணலாம்; அவனாகவே இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால், ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது, அறத்தை உணர்த்தவல்லது தவமும், அகத்தாய்வும்; அந்த தவமும் அகத்தாய்வும் நீங்கள் பெற்று விட்டீர்கள், செய்து கொண்டு வருகிறீர்கள், அதனுடைய பலனை உணர்ந்து கொண்டும் இருக்கிறீர்கள். அதனை ஆழமாக மேலும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்தி பயனடையுங்கள். நீங்களும் பயனடைந்து மற்றவர்களுக்கும் அந்தப் பயன் வீசட்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அன்பு - பாசம் (Love and affection)

அறிவு அவ்வப்போது அடையும் பலவித நிலைகளைத் தனித் தனியே குறிப்பிட்டுக் காட்ட நாம் பல சொற்களை உபயோகிக்கிறோம். அவற்றில் அன்பு, பாசம் என்ற சொற்கள் இருவித நிலைகளை குறிக்கின்றன. உருவ அளவிலே - பொருள் அளவிலே - ஞாபகம் குறுகி ஒரு பொருள் தனக்குச் சொந்தம் என்று கருதும் கற்பனை மீது எழும் பற்றுதல் நிலையைப் பாசம் என்று சொல்லுகிறோம். ஆராய்ச்சி அறிவின் எல்லையிலே - உயிர் நிலையை அறிந்த உயர்விலே - பேதங்கடந்த பேரறிவின் பெருங்கருணையிலே - ஜீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்த சிறப்பான ஞாபகத்திலே - கருத்துக்கு எட்டிய துன்பங்களைக் குறைக்க வழிகாண வேண்டும் என்ற கனிவிலே - ஏற்படும் பற்றுதலை அன்பு என்று சொல்லுகிறோம். சமுதாயத்திற்கு நான் தொண்டு செய்வேன் என்னும் போது அது அன்பு நிலையாகும். என் மனைவியை - என் குழந்தைகளைப் பாதுகாக்க முயற்சிப்பேன் என்னும் போது அது பாசம் என்னும் நிலையாகும். மனிதர்களுக்கு நிழல் கொடுக்க மரம் வைக்கிறேன் என்றால் அது அன்பின் செயலாகும். எனது கிராமவாசிகளின் சவுகரியத்திற்காக மரம் நடுகிறேன் என்றால் அது பாசம் என்று சொல்லப்படும். ஆகவே, ஒரு எல்லைக்குட்பட்ட அறிவின் குறுகிய நிலையே பாசம் எனப்படும். அறிவு என்ற தத்துவத்தையும், அதன் இன்ப துன்ப அனுபோக அனுபவங்களையும் அறிந்து பரந்த ஞாபகத்தில் செயல்புரிய எழும் ஆர்வமே அன்பு எனப்படும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நடிப்புச் சினம் (Feigned Anger)

"எந்தச் சந்தர்ப்பத்திலும் சினம் நன்மை விளைவிக்காது என்றால் அடம் பிடிக்கும் குழந்தையையும், நல்லவர்களையும் ஏமாற்றும் கபட மனம் படைத்த வேலையாளையும் எப்படித் திருத்துவது? கோபத்தைக் காட்டினால் தானே அவர்கள் ஒழுங்குக்கு வருகிறார்கள்?", என்ற கேள்விகள் எழலாம். சினத்தைப் பயன்படுத்தாவிட்டால் நற்பயன் விளையவே விளையாது என்று காணும் இடத்தில் சினம் தேவைதான். ஆனால், இந்தச் சினமானது யார்மீது செலுத்தப்படுகிறதோ, அவர்களுக்கு மட்டும் தான் அது சினமாகத் தோன்ற வேண்டும். மற்றபடி அது நமக்குச் சினமாகவே இருக்கக் கூடாது. சினம் உதட்டில் இருக்கலாம், உள்ளத்தில் இருக்கக் கூடாது. சினம் வந்தது போல் வேண்டிய அளவு, நடிக்கலாம். ஆவேசத்தை வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், அது போலியாக இருக்க வேண்டும். மனம் மட்டும் நீர்த்தளம் போல் சமமாகச் சலனமற்று இருக்கட்டும். அது எப்படிச் சாத்தியம் என்றால் சினிமாவில் பார்க்கிறோமே, வில்லனுக்குக் கதாநாயகன் மேல் என்ன கோபம் வருகிறது? அது உண்மையான கோபமா? உண்மையானது என்றால், கதாநாயகன் அல்லவா இறந்து போவான்? நம்மால் நடிக்க இயலாமல் இருக்கலாம். ஆனால், உண்மைச் சினத்தின் அபாயத்திலிருந்து தப்ப, நடிக்கக் கற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இறைநீதி (The Divine Law)

இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், 'ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே' என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், 'அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!' என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் 'இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!' என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் 'இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது' என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், 'அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இல்லற மலர்ச்சி (Blossoming of the family)

உண்மையான நிலை என்னவென்றால், நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்து கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால், நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத் தான் அதிகமான அளவு செயல்பட முடியும். விளைவு வர முடியும். அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும், இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் அவர்கள் மூலமாகத் தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும். ஆகவே, இருவருமே ஒருவருக்கு ஒருவர் இறைவனே என்னுடைய மனைவியினுடைய வடிவத்திலே வந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று எண்ணவும், இறைவனே எனக்குக் கணவன் என்ற உறவிலே வந்து உறுதுணையாக அமைந்திருக்கிறான், என்னுடைய வினையின் பயனாக ஏதோ ஆங்காங்கு சில துன்பங்கள் வந்தாலும் அதை நாம் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே, இரண்டு பேருமே ஒருவரிடத்திலே ஒருவர், உண்மையான தெய்வநிலையைக் காணக் கூடிய அளவிலே, தெய்வப் பிரசன்னத்தை அறியும் அளவிலே மனதை உயர்த்திக் கொண்டீர்களேயானால் இல்லற வாழ்க்கையிலே இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு மலர்ச்சி உண்டாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தற்சோதனை (Introspection)

எண்ணம், சொல், செயல் என்ற மூன்று பிரிவுக்குள் மனிதன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் அடங்கும். புலன் கவர்ச்சியில் சிக்கி நிற்கும் போது விளைவறியாமல் எண்ணுதலும், பேசுதலும், செயல் புரிதலும் இயல்பு. இவை பழக்கத்தால் திரும்பத் திரும்ப எழுச்சி பெற்று இயங்கும். காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்பத் தவறான எண்ணம், பேச்சு, செயல் இவற்றால் பல தீமைகள் எழுகின்றன, துன்பங்கள் விளைகின்றன. தன்னிடமிருந்து அவ்வப்போது எழும் எண்ணம், சொல், செயல் இவற்றை ஆராய்ந்து தவறானவற்றை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு தவறுகளைத் திருத்தி நலம் தரும் முறையில் எண்ணம், சொல், செயல்களை ஒழுங்கு படுத்த வேண்டும். இதற்கான உளப்பயிற்சியே தற்சோதனையாகும். முதலில் எண்ணங்களைத் திருத்தி அமைக்க ஒரு வாரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். காலை, மாலை அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து உங்களிலிருந்து எழும் எண்ணங்களின் தன்மைகளை ஆராயுங்கள். தவறானவற்றை- துன்பம் விளைக்கும் எண்ணங்களைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். "இந்த எண்ணம் எனக்கு இந்த வகையில் துன்பம் அளிக்கும். ஆகவே இது தவறு. இதற்கு நான் இடங்கொடுக்க மாட்டேன்" என்று பல தடவை அந்த எண்ணத்தோடு இணைப்பு எண்ணத்தைச் சேர்த்துவிடுங்கள். இதுபோன்றே அடுத்தவாரம் சொற்களைப் பற்றி ஆராயுங்கள். உங்களின் எந்தச் சொற்களால் உங்களுக்கோ, பிறருக்கோ வருத்தம் உண்டாகுமோ அவற்றைக் குறித்துக் கொண்டு மீண்டும் அத்தகைய சொற்களை பயன்படுத்தாதிருக்க மன உறுதி செய்து கொள்ளுங்கள். பிறரோடு பேசும்போது அத்தகைய சொற்கள் எழாமல் விழிப்போடு காத்து பழகுங்கள். மூன்றாவது வாரம் செயல்களை பற்றி ஆராயுங்கள். தவறான செயல்களைக் குறித்துக் கொண்டு அச்செயலை மீண்டும் அந்த முறையில் செய்ய மாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். நாள்தோறும் அத்தகைய செயல்களுக்குத் தொடர்பான நபரோ, தேவையோ, சூழ்நிலையோ வரும்போது மிகவும் விழிப்பாக இருங்கள். தவறு புரியாதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு உங்களை நீங்களே தற்சோதனை என்ற புடத்திலிட்டு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் அழுக்குகளை நீக்கிக் கொள்ளுங்கள். இந்த மூன்று வாரத்திய தற்சோதனைப் பயிற்சி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு விழிப்போடு இருக்கும் பழக்கத்தை அளிக்கும். வாழ்வதைத் தூய்மை ஆக்கும். வெற்றியளிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் ஓங்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எண்ணம்

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும். எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது? பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Tuesday, December 26, 2006

முன் ஏழு பிறவி, பின் ஏழு பிறவிகள் (Birth Cycle)

பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒரு முறை நம்மிடம் பதிந்து விட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும். அதாவது, ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள். ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுகள் வரை திரும்பத் திரும்பப் பிரதிலிக்கும் வேகம் உண்டு. அதன் பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்துவிடும். இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவிற்குப் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுப்பித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைகளுக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே, ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலை முறைகளிலும் விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலைமுறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப் பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலை முறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

அறுகுணச் சீரமைப்பு

அறுகுணம் என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற பெயர்களில் வடநூலார் குறிப்பிட்டுள்ள ஆறுவகை மனோ நிலைகள். இவை தமிழ் மொழியில் முறையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என விளக்கப்படுகின்றன. இவை எல்லா உயிர்களிடத்தும் அமைந்துள்ளன. மனிதனிடம் இந்த மனோ நிலைகள் எழுச்சி பெறும் போது தீய செயல்களைச் செய்து விடுவான். அதனால் பொருள் அழிவும், மகிழ்ச்சி இழப்பும் விளையும்.
தெளிந்த அறிவோடும், விழிப்போடும் இருந்தால் இந்த ஆறு மனோ நிலைகளில் பேராசையை - நிறை மனமாகவும்; சினத்தைப் - பொறுமையுடமையாகவும்; கடும் பற்றை - ஈகையாகவும்; முறையற்ற பால் வேட்பைக் கற்பாகவும்; உயர்வு - தாழ்வு மனப்பானமையை - நேர் நிறையுணர்வாகவும்; வஞ்சத்தை - மன்னிப்பாகவும் சீரமைத்துக் கொள்ளலாம். தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிற்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம். தேவையும், பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன. அனுபவ நினைவுகளும், சிந்தனையும், தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே "அறிவு" எனப்படும். உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை "மயக்கம்" அல்லது "மாயை" என்று கூறுகிறோம். அறிவு நிலை குலைந்த மயக்கத்தில் தான் தீய செயல்கள் விளைகின்றன.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Friday, December 22, 2006

Erode Manavalakkalaignan magazines

http://vethathiri.org/forum/index.php/topic,751.0.html
find the softcopy .

சிந்தையில் தோன்றியவை...

மின்னலும் இடியும் ஒருசேர தோன்றிய போதிலும் மின்னலை முதலிலும் இடியை பிறகும் உணர்கிறோம் மின்னல் வந்ததும் இடி வருவது உறுதி, அது போலவேசெயல் விளைவு தத்துவமும், ஆராய்ந்து உணர்வோம்.


Regards,Ramesh

அறிவேதான் தெய்வம்

அறிவினது நிறைநிலையை ஆதியாகஅமைதி நிலையில் அறிந்து அதுவாம்போதுஅறிவு உயர்ந்தகன்றமைதிப் பேரின்பத்தில்அணுமுதலாய் அண்டகோடி தானேயாகி அறிவே அவ்வந்நிலையில் ஒழுங்கியக்கஅமைப்பாகி முறை பிறழாதியங்கும் மேலாம்அறிவின் பெருமையுணர்ந்த இன்ப வெள்ளத்தானந்தத்தில் திளைக்க வாரீர் வாரீர்.

அருட்தந்தை வேதத்திரி மகரிஷி அவர்கள் "ஞானமும் வாழ்வும் "என்ற புத்தகத்தில் 14 வது செய்யுளில் மனிதருள் ஏன் வேறுபாடு வருகிறது என்பதை மிகவும் எளிமையாக ஏற்புடையதாகவும் வழங்கியிருக்கிறார்:

கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்பஉருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி,உடல் வலிவு, சுகம், செல்வம், மனிதர்கட்குவரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்பவாழ்க்கை நிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்"

Siddar's images

I like to know abt Siddar's .really happy to atleast images.
find the pictures here.
http://vethathiri.org/forum/index.php/topic,876.0.html
http://vethathiri.org/forum/index.php/topic,1055.0.html

9planets picture

http://vethathiri.org/forum/index.php/topic,790.0.html

found the part of totality.

Thursday, December 21, 2006

குருவிடம் சரணடைவோம்

நமக்கு இன்ப துன்பம் எல்லாம், உடல் வரைக்கும் தான்! இந்த உடல் அழியக்கூடியது என்பதை மறக்கும் கணத்தில், தன்முனைப்பு எழுகிறது! குருவானவர் எல்லாம் உணர்ந்தவர் என்றால் அவரை அவராலேயே காப்பாற்றிக்கொள்ள முடியாதா? மரணத்தை தள்ளிப்போட முடியாதா? என்று ஒருவர் என்னிடம் கேட்டார்! இந்த கேள்வி உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனதால் தான் கேட்க முடியும்! குருவானவர் என்ன தான் பேசினாலும், மனதை அந்த அமைதியான பேரருளின் மீது என்றும் வைத்திருப்பவர்! இறை நிலையின் நிறைவில் என்றும் இருக்கும் குருவானவர் தான் இயற்கையில் தன் வாழ்வில் நிகழும் எதையும் ஏற்கும் தன்மையுடன் இருக்கிறார்! பிறந்து விட்ட உடலுக்கு இறப்பு நிச்சயம் ஆகிறது!மனிதனாக பிறந்து நிறைவை , பிறவிப்பயனை அனுபவத்த பிறகு இந்த உடல் தேவையில்லாத பாரமாகிப்போகும்!எப்போது உன்னுடன் நிம்மதியாக இருப்பது என்று இறைவனை நோக்கி பேச ஆரம்பித்து விடுவோம்!ரமணர் தன் இறுதி நாளில், சீடர்கள் புற்று நோயின் தீவிரத்தைப் பார்த்து அழுதார்களாம்! அவரோ எப்போதும் போல், கடுமையான வலியிலும் சிரித்துக்கொண்டே இருந்தாராம்! சீடர்களிடம்............ நீங்கள் இந்த உடலுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்! என்னைப் பொறுத்தவரை மிக நிறைவாக இருக்கிறேன்! இவ்வுடல் என்பது நாம் பயணம் செய்யும் ரயில் வண்டியைப்போல... இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் ரயிலை விட்டு போய்விடுகிறோம் அல்லவா! அது போலத்தான்... ஆன்மாவின் நிலை என்பது பேரறிவாகிய இறைவன் என்று உணரும் போது, அந்த இறைவனுடன் கலந்து விட கணத்திற்கு கணம் நாம் துடிப்போம்! ரயிலில் ஏறியவுடன் நம் மூட்டைகளை நம் தலை மேலேயே வைக்காமல் இறக்கி வைப்பது போல, இறைவனின் மேல், நாம் நம் பாரத்தை இறக்கி வைத்து விட்டு சுகம் காண்பது தான் சமாதி நிலை! நம் குரு நாதர் 30 ஆண்டுக்கு முன்பே, அருள் நிறைந்த பெருஞ்சோதி எனை அரவணைத்துக்கொள்ளும் அந்தப் பெருநந்நாளை எதிர்பார்த்து உள்ளேன்! என்று கவிதையில் எழுதினார்! இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, இயற்கையாக தங்களுக்கு வரும் மரணத்தை மகான்கள் ஏற்றார்கள்!எதிர்ப்பே இல்லை! இயேசு, ராகவேந்திரர், வள்ளலார், ரமணர், குருநாதர் என்று எல்லாரும் தங்களுக்கு மரணம் நேர்வதை தடுக்கவே இல்லை! ஏனெனில், அது தான் இயற்கை, இறைவன் தரும் கருணையாக ஏற்றுக்கொண்டார்கள்! உடலுக்கு என்னதான் ஆனாலும், அதுவும் கூட இறைவன் தரும் பரிசாக ஏற்றார்கள்! திருவாசகத்தில், ஒரு அதிகாரம் முழுதும் கூட, தன் உயிரை ஏற்குமாறு ஈசனை உணர்ந்தோர்கள் உருகுவார்கள் என்று இருக்கிறது! நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்! ஒரு குறையும் இல்லை! எதுவும் ஈசன் அருளே! இந்த உடலுக்கு, மனதிற்கு நிகழும் எதுவும் இறைவனின் கருணையே! அவனிடமிருந்து பிரிய வேண்டிய அவசியமே இல்லை! இவ்வுடலுக்கு என்ன தான் ஆனாலும், அவனை விட்டு பிரியாத நிலை போதும்! அந்த நிலை அடைய குருவிடம் சரணடைவோம்!வாழ்க வளமுடன்!

E-BOOKS ON MAHARISHI'S PHILOSOPHY

Find the books in the below link.
http://vethathiri.org/forum/index.php/topic,917.0.html

செம்பு (அ) செப்பு எனும் உலோகம்

வான் காத்தம் என்பது ஒருவகையான Energy தான். பொருட்களில் அது (Electro Magnet)மின் காந்தம். உயிரினங்களில் அது ஜீவ காந்தம்(Bio-energy)உஙளுக்கே தெரியும் இன் in electricity why copper wires are always used because it is a good conoductor of receiving current (மின்சாரம் )அதாவது So called மின் காந்தம் எளிதில் பாயும் தன்மை அந்த உலோகத்துக்கு மட்டுமே என்பது இயற்கையின் அரிய தன்மை.அதனால் கோயில்களில் பூஜை செய்வது என்பது passing of good bio energy mixed with universal energy through copper items like utensils as you mentioned mixed with bio energy. ஒரு சூசகமான உண்மை என்னவென்றால் அந்தக்கால ஞானிகள் விண் சக்தியை அதாவது வான் கந்த சக்தியை செவ்வனே வாங்கிக்கொண்டு தனது ஜீவ ஆற்றல்களைக்கொண்டு செம்பின் மூலம் (சிலைமோலம் )அந்த சக்தியை வீணாக்காகமல் தக்கவைத்துக்கொண்டால் அதைப்பற்றி அறியாதவர்களுக்கு கோவிலுக்குப் போகும்பொது அந்த சக்தியினால் உண்டாகும் காந்த அதிர்வு(Energy vibration)மோதி ப்ரதிபலித்து பொருட்களிடையே பாயும் பாய்மப்பொருளக இருக்கும் தன்மையில் பூஜை செய்யும் அன்பர்கள் அமைதியான மனச்சுழலில் இருக்கும்போது அந்த சக்தியை பெற்றுக்கொள்ளுவதற்கு உதவியாக இந்த யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள். சாத்திரம் எப்படி விஞானத்தோடு இணைகிறது என்பது நமக்குத்தெளிவாகும். எந்த சாத்திரமும் உபயோகம் தான். ஆனால் இப்போது வ்யாபார ரீதியாகும்போது மக்களுக்கு சரிவர எதுவும் பயனற்றுப் போய்விடுவதால் விரக்தி ஏற்பட்டு கடவுள் இருக்கிறாரா இல்லையா என் வாதம் புரிந்து உள்கடக்கும் நிலையும் கிடைக்காமல் பல துன்பங்களை மனித இனம் அனுபவித்து வருகின்றது.

பெண்மையின் பெருமை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளேசில மூடர் - நல்ல
மாத ரறிவை கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடுங் காணீர்.

இதையேத்தான் மகரிஷி வேதாத்ரி அவர்கள் இன்னும் உறுதியாக,பெண்கள் ஆண்களைவிட சக்தி வாய்ந்தவர்கள் என்கிறார்."உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளாகட்டும்,படைப்பாளிகளாகட்டும்,கண்டுபிடிப்பாளர்களாகட்டும்,ஒரு துளி வித்தை வைத்து ஒரு அழகான குழந்தையை உருவாக்க முடியுமா? முடியாது......ஏனெனில் அது பெண்மைக்கே உரிய தாய்மையெனும் அரிய பொக்கிஷம்.வேறெந்த சக்தியாலும் ஈடு செய்ய முடியாதது.ஆகவே பெண்மையை போற்றுவோம் மகரிஷிகளின் விளக்கத்திற்கு மறுபேச்சு தரமுடியுமா?!

world peace.

ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம்பார் முழுதும் பொருள் துறையில் சம நேர் நீதி முறைபல நாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம்சீர்திருத்த சிக்கனமாம் சிறந்ததோர் வாழ்வுதெய்வநிலை அகத்துணரும் இறைவணக்கம்நேர்வழியில் விஞ்ஞானம் பயனாய்க்கொள்ளூம்நெறி முறைகள் இவை இணைந்த வாழ்வு காண்போம்.

The advantages of AGNA Thavam:

1.ஆக்கினையில் தவம் (அதாவது இதற்கு ஸ்பரிச தீக்ஷை என்ப்பெயர்)செய்யும் போது (குண்டலினி யோகத்தின் முதல் படி இது) உயிருக்கு விழிப்பு நிலை கிடைக்கிறது
2. 5 புலன்களை கடந்து நிற்கும் வல்லமையும் கூடும்
3. அறிவின் திறமை நாளுக்கு நாள் அதிகமாகும்
4. ஆராய்ச்சி செய்யும் அறிவு அதிகரிக்கும்
5. தேவையில்லாதது அதுவே வடிகட்டி விட்டு தேவையானதை உங்களுக்கு உணர்த்தும்
6.உடல் நலம், மன நலம் ஓஒங்கும்.
7. முகம் பொலிவு பெறும்.
8. மெய்ஞ்ஞானம் என்ற அருட்கோவிலின் வாயில் தான் ஆக்கினைச்சக்கரம் ஆகும்.
9. தற்சோதனை முறையில் ஆக்கினையில் பழக்கி வைத்து கூட எண்ணங்களை ஆய்வதற்கு இத்தவம் உதவும்.It is a receiving point of any thing and everything. எவராவது சொன்னால் கூட ஆக்கினையில் மனதை செலுத்திக்கேட்டால் தேவையில்லாததை பேச வராது.

அடுத்த கட்ட தவத்திற்கு இது முதன்மையானதும் தலையாயதுவும் கூட.மொத்தத்தில் இது கிடைப்பதற்கரிய பொக்கிஷம்.

Wednesday, December 20, 2006

worship & rituals

எந்த ஒன்று அறிந்திடில் இறைவன் முதல் உயிர்வரை எல்லாவற்றையும் உணர்த்துமோ அதுவே காந்தமாம்முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும் மொழிவதற்கு உவமையின்றி முட்டிமோதி நின்றனர்இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை இயங்கிடும் மின்சாரம் மூலம் எல்லார்க்கும் உணர்த்தலாம்அந்தமாம் மெய்ஞானத்தோடு அணு விண்ஞானம் இரண்டையுமே அறிந்துய்ய பாலம் போன்ற ஆக்க ஞானம் காந்தமே.கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார்கடவுளாய் கருத்தே காட்சியாய் காண்பாய் ஆங்கே- மகரிஷி.

Some frequent Tamil verses for postings:

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
குருவே துணை

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.உங்களின் வாழ்வில் மகிழ்ச்சி பூக்க வாழ்த்துக்கள்.

தாங்கள் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, வெற்றி பெற்று மேன்மேலும் சிறப்பாய் வாழ என் மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.

அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உருதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக.

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க.

உடல் நலம் அறிவோடு செல்வம் கீர்த்திஉயர்வடைந்து மேன்மேலும் சிறப்பாய் வேதாத்திரிய வழியில் வாழ்க வளமுடன்!

Be blessed by the Divine...

தவத்தின் மகிமை

தவம் என்றால் த = தன், வ = வசப்படுத்துதல், ம்.= அம்மாகிய மனது(இங்கு மெய்ப்பொருளே உயிராகவும் அதுவே மனமாகவும் செயல்படுவதால்,) அதாவது தவத்தில் நாம் நம் மனதை அதன் (5 புலன்) வயத்திலிருந்து 6வது அறிவாகிய மெய்யறிவை அறியும் பயணத்திற்கு கொண்டு சென்று எந்த இடத்திலிருந்து வந்ததோ அந்த "மாபெறும் " இடத்திற்குச்செல்லும் மார்க்கத்தை"கண்காட்சி மூலம் அதாவது நெற்றிக்கண் காட்சி வழியாக் காணுவது தான் தவம் ஆகும்.

"அறிவதனை கருவினிலே இணைத்து தவம் ஆற்ற ஐம்புலனும் அமைதி பெறும் அறுகுணமும் சீறாம்",

என்றும்

"அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க ஆதியாம் மெய்ப்பொருளாம் அரும் பிறவித்தொடரே"

என்றும் மகரிஷி பாடியிருக்கிறார்.அத்தகைய அரிய தவத்தின் மகிமையை நாம் எளிதில் விரித்துரைக்க முயல்வது சற்று கடினமே. என்றாலும் இறைநிலையோடு எண்ணத்தைக்கலக்கவிடும்போது அதாவது மண்ணின் ஆழம் போகப்போக தன்ண்ணீர் கிடைப்பது போல மனதின் ஆழமான துரியாதீதத்திற்குப் போகப் போக நம் உடலில் செல்களின் வேன்டாத பழக்கப்பதிவுகளை மாற்றி நற்பழக்கப்பதிவுகளாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். நம் மகரிஷி , " தன்னை அறிந்து இன்புற ஒரு அருமையான தந்திரமான "தவத்தை நமக்கு ஆன்மீகப்பரிசாக அளித்துள்ளார்கள்.அந்தக்காலத்தில் தவசிகளை காட்டில் வாழும் கொடிய விலங்குகள் கூட ஒன்றும் செய்யாது என்பார்கள். தவசிகள் இறைவனோடு கலக்கின்றனர். அதுபோல் இறையே விலங்குகளாகவும் வந்துள்ளது எனும்போது அதனுள்ளிருக்கும் உண்மையான இறைவனுக்கு இறைவனை அடையாளம் காண்பது எப்படி முடியாமல் போகும்? அதுதானே தவ மகிமையும் கூட. சிறிப்பாயும் புலிகூட சிறு பூனையாகிவிடுமே தவசிகளின் காந்த சக்தியால். இனம் இனத்தைக்கண்டுகொள்ளும் செயலாகும்.அதாவது விலங்குகளுக்குக் கூட அந்த நேரத்தில் பாயும் குணம் நீங்கி பணியும் குணம் வந்துவிடும். அத்தகைய சிறப்பைப்பெற்றது தவம்.அத்தகைய அகத்தவத்தால் நாம் உள்ளுணர்வுகளையும், விஞ்ஞான நுட்பங்களையும் கூட உணரலாம் என்கிறார் நம் அருட்தந்தை. "உருமாறி பிறப்பென்னும் கடல் வீழ்ந்து கரை கணாது உழலும் மந்தன் கருமாறி அருட்தெப்பம்தனில் ஏற்றி முக்தி எனும் கரை சேர்க்கும் பெருமாளே"என்ற் ஆழ்வார் பாடலுக்கேற்ப முக்தி அடைய கருவை(from MOOLADHAARAM TO AAGNA) மேலேற்றி அகத்தவம் என்ற தோணியிலே அறநெறி என்ற துடுப்பைக்கொண்டு பிறவிக்கடலை நாம் நீந்த அருமையான வழியை நம் அருட்தந்தை அவர்கள் கொடுத்த தவத்தினை கடைபிடித்து அதன் பயனை நாம் அனைவரும் என்னாளும் எப்பொழுதும் பயனடைவோமாக. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

ஞானக் களஞ்சியம்

தண்டனையில் நீதி வேண்டும்
----------------------------------------
கொலை செய்தான் ஒரு மூர்க்கன் அறிவிழந்து
கொலையுண்டான் நீதிபதி அளித்த தீர்ப்பால்
கொலைக்குக் கொலை நீதியென்றும் குற்றம்
செய்த கொடுமைக்கே தண்டனைகள் என்றும் சொன்னால்
கொலையுண்டோர் மனைவிமக்கள் பெற்றோர் செய்த
குற்றமென்ன? குடும்பத்தின் தலைவன் ஆங்கே
கொலையுண்ட நிகழ்சி அன்னார் வாழ்வில் என்றும்
கொடுந்துன்பம் தரவில்லையா? நீதி எங்கே?

குற்றங்கள் ஒழிய வழி
-----------------------------

சமுதாய அமைப்பினிலே உள்ள குறைபாடே
தனிமனிதன் குற்றங்கள் அனைத்திற்கும் மூலம்
சமுதாயம் தனியாரைத் தண்டித்து மேலும்
தவறிழைக்கும் செய்கையினை நீதியெனில் நன்றோ?
சமுதாய அமைப்புமுறை சீர்திருந்தி பொருட்கள்
சமத்துவமாய் அனைவருக்கும் கிட்டுமெனில் உலக
சமுதாயத்தில் குற்றம் நிகழ இடமேது?
தண்டனைக்கு எனவகுத்த சட்டங்கள் ஏனோ?

அருள் தொண்டு
--------------------

குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்து செயலாற்றி உய்வோம்:
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்.
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மா நிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

பேரின்பக்களிப்பு

Find this link, Here kalyani madam has described well abt பேரின்பக்களிப்பு
http://vethathiri.org/forum/index.php/topic,906.0.html

எது தெய்வம்

திக்கெட்டிலும் திரிந்து
திகட்டா பேரின்பன்
அறிந்தவர்க்கு அழியா அரூபன்
அறியாதவர்க்கு அறிவித்த ரூபன்
பக்த்தியில் பரவி ஞான
முக்தியில் முடிவானவன்
மோனத்திலே முத்ர்பவன்
முதிர்ச்சியில் மோனமானவன்
அணுவிலே உயிரானவன்
உயிரே அவனானவன்
அவனே மாயையாகி
அதிலே அவனியாகி
அவனிக்குள் அவனாகி
அவனே அறிவாகி
அடைவதில் பேரின்பன் - என்றும்
அவனே பேரின்பன்

எண்ணத்தின் வலிமை

எண்ணியவன் உறங்கி விடலாம் ஆனால் யெண்ணங்கள் உறங்குவதில்லை

மகரிஷி

துரியாதீதம்

இறை நிலையோ டெண்ணத்தை கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க.
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்

உறைந்து உறைந்திந்நிலையில் பழகிக் கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கரை நீங்கி அறிவு மெய்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு காணும் தெய்வம்.

வேதாத்திரி பதிப்பகம்

ஞானமும் வாழ்வும்

முள் எடுத்து ஒருவர் பிறர் மீது குத்த
முனிவரெனினும் துன்பம் நிச்சயம் ஆம்.
எள் அளவும் பிறர் தீங்கு நினையா ஞானி
எனினும் அவர் துன்ப அலை சாபமாகும்.

உள் உணர்ந்தோர் அது கூட நிகழா வண்ணம்
ஒறுத்து அவர் திருந்தி வாழ வாழ்த்துவார்கள்.
கொள் அன்பா இக்குணத்தை மெய் விளக்க
குழுவினிலே உண்மை உறுப்பினர் நீயானால்.

Guru vaazhga Guruve thunai

Tuesday, December 19, 2006

இல்லற மலர்ச்சி

உண்மையான நிலை என்னவென்றால், நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்து கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால், நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத் தான் அதிகமான அளவு செயல்பட முடியும். விளைவு வர முடியும். அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும், இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் அவர்கள் மூலமாகத் தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும்.

ஆகவே, இருவருமே ஒருவருக்கு ஒருவர் இறைவனே என்னுடைய மனைவியினுடைய வடிவத்திலே வந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று எண்ணவும், இறைவனே எனக்குக் கணவன் என்ற உறவிலே வந்து உறுதுணையாக அமைந்திருக்கிறான், என்னுடைய வினையின் பயனாக ஏதோ ஆங்காங்கு சில துன்பங்கள் வந்தாலும் அதை நாம் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே, இரண்டு பேருமே ஒருவரிடத்திலே ஒருவர், உண்மையான தெய்வநிலையைக் காணக் கூடிய அளவிலே, தெய்வப் பிரசன்னத்தை அறியும் அளவிலே மனதை உயர்த்திக் கொண்டீர்களேயானால் இல்லற வாழ்க்கையிலே இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு மலர்ச்சி உண்டாகும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Vethathirian Principles for the world

1. One world Government.
2. One world Economy.
3. One world Justice.
4. One world Army (Protecting borders of all Nations) & Ban all Wars.
5. One world Religion; Universal agreement on Truth (God), acceptable to all.
6. Reformation of culture.
7. Living under the guidance of Intellectuals.
8. Respecting womanhood and giving full equal rights.
9. Living in tune with law of nature.
10. Avoiding unnecessary rituals and festivals.
11. Sports to be made non commercial and only for children.
12. Education to include teaching of Laws of cause and effect.
13. Disseminating the philosophy of Magnetism.
14. Food and Water to be globalized and made available to all.

Why Ladies should not exercise or meditate on mesural cycle?

அன்புள்ள நண்பர்களே,

இந்த சமுதாயத்தில், ஆண்களே தான் தியானம் செய்து இறை நிலையை அடைய முடியும் என்று ஒரு நிலை இருந்தது! வேதத்தையே சொன்ன சான்றோர்கள் வாழும் காலத்தில் கூட பெண்கள் தவத்தில் ஈடுபட தடை இருந்தது! உண்மையை, வேதமாக சொன்னவர்கள் ஏன் பெண்களை இப்படி ஒதுக்க வேண்டும் என்று எனக்கு ஒரு சிந்தனை இருந்தது! இருப்பினும் ஏதாவது காரணம் பார்த்தால், மாத விலக்கு மட்டும் தான் பெண்களுக்கு ஒரு தடையாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது! அதனால் தானோ என்னவோ பெண்களில் ஞானிகள் மிக மிக குறைவாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது! சரி... மாத விலக்கு ஏற்படும் போது ஏன் தவம் செய்யக்கூடாது? தியானம் செய்வதால் நமக்கு நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி உயிர் சக்தி சேமிக்கப்படுகிறது! அதனால் உயிர் சக்தி சேமிக்கப்படுவது மட்டுமின்றி தொடர்ந்து நாம் த்வம் செய்வதால், உடலில் சக்தி அதிகமாகிறது! அதைத்தான் நாம் சாந்தி தவம் செய்து உடல் சக்தியாக மாற்றிக்கொள்கிறோம்! மேலும் மாதவிலக்கு உள்ள பெண்களுக்கு அந்த காலத்தில், இயற்கையாகவே உடலில் உள்ள ரசாயன மாற்றத்தால் உடலில் உபரியாக உள்ள சக்தியானது வெளிப்படுகிறது! அதோடு மட்டுமின்றி உடலைச்சுற்றி அந்த உயிர்சக்தியானது அதிர்வாகிறது(vibration)! எனவே அந்த காலத்தில் தவம் செய்வதால் பெண்களின் உடலில் மீண்டும் உயிர்சக்தி சேமிக்க முயலும் போது, உபரியான சக்தியுடன் தவத்தின் சக்தியும் சேர்ந்து சிலவாக நேரிடும் அபாயம் இருக்கிறது! இதனால் தான் மாத விலக்கு உள்ள பெண்கள் தவம் செய்யக்கூடாது என்று ஒரு கட்டாயம் உள்ளது! தவிர இந்த கட்டாயம் பெண்களுக்கு ஒரு தடை அல்ல! இந்த தடை பெண்களுக்கு இயற்கையாகவே தேவைப்படுகிறது! முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஏறு படி தவம் மட்டும் தான் இருந்தது! அதனால் தான் பெண்கள் ஒதுக்கப்பட்ட்னர்! இப்போது நம் குரு நாதர் தான் இறங்கு படி தவம் கற்றுத்தந்து பெண்களும் கூட தாராளமாக தவத்தை மாத விலக்கு தவிர மற்ற காலத்தில் செய்து சாதனையாக ஞானம் அடையலாம் என்று அருள் செய்து இருக்கிறார்!பெண்களுக்கு மாத விலக்கு உள்ள காலத்தில் அவர்கள் மிக அருகில் ஆண்கள் செல்ல நேர்ந்தால் மூலாதாரத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பெண்கள் சமைத்த உணவை உண்ணும் ஆண்கள் மூலாதாரத்திலேயே இருக்க வேண்டும் என்று நம் குரு நாதர் கூறியிருப்பது எல்லாருக்கும் நன்மைக்காகவே அன்றி யாரையும் உயர்த்துவதோ அல்லது தாழ்த்துவதோ காரணம் அல்ல! அம்மா என்றழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமாயி அவர்களுக்கு சிறு வயதிலேயே மாதவிலக்கு நின்று விட்டதாக அவரின் சரிதையில் சொல்லியிருக்கிறார்கள்!ஆனால்,இயற்கையாக மாதவிலக்குடன் இருக்கும் பெண்களும் தவத்தை மாதவிலக்கு தவிர மற்ற காலத்தில் செய்து மாதா அமிர்தானந்தமாயி மாதிரி, ஞானம் அடைய வேண்டும். அது தான் நம் குரு நாதருக்கு பெருமை! பெண்களுக்கு ஞானம் தடையே அல்ல! ஆண்களுக்கு மட்டுமே ஞானம் சொந்தமல்ல!ஒரு புதிய வரலாறு பெண்களால் படைக்கப்பட வேண்டும்! நம் குருவிற்கு மேலும் ஒரு பெருமையைத் தேடித்தர வேண்டும்! !

Monday, December 18, 2006

சங்கற்பம் / வாழ்த்து

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!!

சங்கற்பம் / வாழ்த்து :

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வேன்

உலக நல வேட்பு:

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்.
உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்.
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்.
உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்.

ஐந்தொழுக்கப் பண்பாடு:

புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்.
போதை, போர், பொய், புகை ஒழித்துப் பொறுப்போடமுல் செய்வோம்அதிகசுமை ஏதுமில்லை
1) அவரவர் தம் அறிவின் ஆற்றலினால்
உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்,
2) மதிப்பிறழ்ந்து மற்றவர்கள் மனம் உடல் வருத்தா மாநெறியும்,
3) உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்,
4) பொதுவிதியாய்ப் பிறர்பொருளை வாழ்க்கைச்
சுதந்திரத்தை போற்றிக் காத்தும்,
5) பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.

இறை வணக்கம்:

எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ல்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவுமவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய் காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீஅவனில்தான் நீ, உன்னில் அவன் அவன்யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அதுமுக்தி.

Be Blessed By the Divine!

திருமண பந்தம்

ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள் நாம்
அன்பே ! அன்பே !

Kavignar.Arivumathi

பேரின்பக்களிப்பு

முன்னம் ஒரு துளியான மூலவிந்து நாதத்தால்
முழுமையாய் எனது உடல் முற்றறிவன் திருவருளால்
ஆட்சியின்றி ஆளுகின்ற அய்யன் திருவருளல்
அன்னைக்கருப்பை விடுத்து அடைந்து அடைந்துவிட்டேன்

மண்ணுலகை"உலகப்பொருள் உடலுக்கும் உண்மைப்பொருள் உயிருக்கும் உயர் கலைகள் அறிவிற்கும் ஒழுக்க நெறி வாழ்வதற்கும்
நலமளித்தல் நானுணர்ந்தேன் நடு நின்று வாழுகின்றேன்
நாடனைத்தும் ஊடுருவி நல்லறிவின் தொண்டாற்றி"

அருட்தந்தை

மோனத்தின் பெருமை

மோன நிலையின் பெருமை யார் எவர்க்கு
முன் படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்.
மிக விரிவு. எல்லையில்லை. காலமில்லை.
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன் வினையும் பின் வினையும் நீக்கக்கற்கும்
மோன நிலை மறவாது கடமையாற்ற
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்!

வேதாத்திரி மகரிஷி

My verses about Our Guruji

குரு சரணம் ஞான குரு சரணம்
குல அமைதி காக்க குண்டலினி யோகம் தந்த (குரு)

உடல் உயிர் உளப்பயிற்சி உவப்புடனே இருபால்
உள்ளங்களுக்குவந்தளித்த உமைப்பணிவோம்
உலகப்பொதுமறைக்கு உட்பொருள் விளக்கம் காட்டி
ஊழ்வினைகள் களைய நல் மன வள கலை தந்தாய் (குரு)

சினம் வேரறுத்து சிந்தனை ஆராய்ந்திட்டு
சீரமைத்த இச்சையினால் சித்தம் உய்யும் வழி
றிந்துஉன்னதக்கோட்பாட்டிலே உலகமைதி காக்க நல்
வேதாத்ரியம் என்ற புது வேத நூல் ஈந்த
வேத மகா குருவே உமை பணிவோம் (குரு)

பஞ்ச பூத தத்துவத்தை பாங்காய் உணர்த்திட்ட
பாமர ஞானியே உம் பதம் பணிவோம்
காந்தத் தத்துவம் மூலம் பிரணவ பொருள்
உரைத்துகடவுள் விளக்கம் காட்டிய கற்பக தருவே
கரம் குவித்தே உங்கள் சிரம் பணிவோம் (குரு)

பிரபஞ்ச தன் மாற்றமாய் பூரண பொருளே
உயிர் முதல் ஆறாக உயர்ந்துள்ளது என்ற
அற்புத தத்துவத்தை அகத்தவத்தின் மூலம்
அவனி முழுதும் ஈந்த அருமருந்தே
எங்கள்அருட் சுடரே ஞான ஒளி விளக்கே

kalyani Madam.

குருவின் வாழி திருநாமம்

அன்புடன் வேதாத்ரியம் அருளினான் வாழியே!
அழகாரும் ஆழியாறில் அமர்ந்துள்ளான் வாழியே !
இன்பமிகு ஆடிஉத்த்ரட்டாதி அவதரித்தான் வாழியே !
எழிற்சந்தம் ஈராயிரம் ஈந்தோன் வாழியே !
முன்னம்குரவோர் மொழிந்த வசனங்கள் தெளிவித்தோன் வாழியே !
ம்றையதனின் உட்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே !
நற்புவிதழைக்க காயகல்பம் உகந்தருள்வோன் வாழியே !
நங்கள் வேதாத்ரிமகரிஷி இருநற்பதங்கள் வாழியே !

குற்றம் என்பது என்ன?

எண்ணம், சொல், செயல்களைதன் விளைவைக்கொண்டு
எவருக்கோ, எப்போதோ துன்பம் நேர்ந்தால்
மண்ணுலகில் அத்தகைய செயல்கள் தம்மை
மதிக்கின்றோம் குற்றம் என்று அனுபவத்தால்
விண்ணறிவு அதிகரித்து, மக்கள் பெற்ற வசதிகளை
நன் முறையில் பயன்படுத்தி,உண்ண உடுக்க வாழ மனிதர்க்கெல்லாம் உரிமை சமமாக அமைத்தால் குற்றம் ஏது?

வேதாத்திரி மகரிஷி

Why Guru

எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைதரத்தில்
உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.

I stongly believe in this,,,We need guru in life .

Paths to the Almighty

தன்முனைப்பு நீங்க ஒரு குரு அடைந்து
தவமாற்றும் சாதனையால் உயரும்
போதுநன்முனைப்பாம். அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்.
உன்முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல
உயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு.
"என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன் எனக்கு?"
என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்.

விழிப்பு வேண்டும்

நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேரா. நித்தியமாம்
மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப்பொருள் கவர்ச்சி உணர்ச்சி
ஏதும் உள் நுழையா. இப்பேறு தவத்தால் அன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி.
அதுவே தான் மெய்ப்பொருள் என்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப்பற்றை
செதுக்கிக் கொண்டே இருக்கும் விழிப்பு வேண்டும்

வேதாத்திரி மகரிஷி

ஞானமும் வாழ்வும்

எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்!
மௌனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன் வினையும் பின் வினையும் நீக்கக்கற்கும்!
உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல்
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு

Foot Massage

Find Foot massage photo here.
http://vethathiri.org/forum/index.php/topic,499.0.html

ஞானமும் வாழ்வும்

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை இதையுணர
இருள் நிலைக்கு மனமடங்கி ஈசனோடு ஒன்றாகி இணைந்த பின்னே உணர்வது தான் மெய்ப்பொருள் உணர்வாம்.
இருள் நிலையை உணர்வதற்கும் பொருள்வடிவம் மனம் கொண்டால் எவ்வாறு பொருந்துமது எண்ணமின்றி மனம் ஒடுங்கி
இருளாகி பழகுவதற்கு ஏற்ற வழி உயிர் உணர்வே
இந்த மறை பொருள் உணர்த்த குரு அடி தொடர்வீர்....

எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில்
எதிர்ப்பின்றி தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும்
எச்செயலும் மன வலுவு நுட்பத்தோடு ஆகும்
எதிர்காலம் வாழ்க்கைத்துறை அனைத்திலும் புத்துணர்வும்
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும்
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலை தாண்டி
எப்போதும் வளம் நிறைந்த மன நிறைவு உண்டாம்!

-- ஞானமும் வாழ்வும் கவி எண் 277

Friday, December 15, 2006

Good Start

இறைநிலையோ எண்ணத்தைக் கலக்க விட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்
நித்தமம் நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறைநீங்கி அறிவு மெய்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.

Vethathiriyan Universe Model

find Vethathiriyan Universe Model
http://vethathiri.org/forum/index.php/topic,262.0.html
and related information
http://vethathiri.org/forum/index.php/topic,266.0.html

திருமூலர் திருமந்திரம்

வாழ்க வளமுடன்

நாம் நம் குருவின் திருவாயால் கேட்ட இந்த வரிகள்...

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே!!!

அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளேகன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்.உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்...

நம் குருனாதர்

உன்னுள்ளே நான் அடங்க என்னுள்ளே நீ விள ங்கஉனது தன்மை ஒளிர எனது உள்ளத்தூய்மை பெற்றேன்இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேர்று பெற்ற பின்னர்எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை...

How to bring World peace?

"Peace in three angles is necessary for mankind
  • Individual peace
  • Peace among society
  • Peace among all nations


Individual peace can be obtained by self-realisation, peace among society can be maintained by duty-consciousness and peace among all nations can be obtained only by the establishment of One World Government. The aim and activities of our Centre, the World Community Service Centre, is to serve for inculcating in the minds of people of all nations, the necessity of such peace."

swamiji.

Bliss Beyond Words & Verses.

http://vethathiri.org/forum/index.php/board,17.20.html
http://vethathiri.org/forum/index.php/board,19.0.html
find swamiji's thoughts.

What is the suitable food for mankind?

Thoughts by swamiji
--------------------

By the process of killing an animal, a sudden shock is imprinted in the cells of all its muscles. This becomes a morbid poison in the flesh which will result in physical ailments and mental disturbances to those who consume it. This is Nature's law of cause and effect.

Some may say that the vegetables also have a life and also will feel the pain when we cut them for food. Of course, vegetables have life. However, there is a great difference in the body chemistry of vegetables and animals.

Feeling pain is the symptom of short-circuit of bio-magnetism in any part of the organism. When you cut a plant, the short-circuit is at once balanced by the earth, because, all the plants have their roots only in the ground. Therefore, whatever their pain may be, it is immediately neutralised by the earth.

Beyond all these reasons, every living being has the birth-right of survival. So, animals eat other animals without feeling the pain of others. Man has his consciousness liked with the spirit which makes him understand the feelings of other living beings.

Ages ago, some tribes happened to live in places where there was no edible vegetables because of the climate. They were unavoidably forced to eat meat. This habit is being followed today even though there is no lack of opportunity to get vegetables and dairy products.

In this age of enlightenment of consciousness, man has to change food habits gradually, from meat to vegetarian and dairy derivatives. If this is practised from the childhood, it will be easy.

Thursday, December 14, 2006

எனது வாழ்க்கை விளக்கம்

We can find swamiji's Life History....
http://www.vethathiri.org/forum/index.php/board,2.0.html

Anboli

You can get softcopy of anboli in this following URL.
http://www.vethathiri.org/anboli
This is another link where you can find past newsletters http://vethathiri.org/forum/index.php/topic,752.htmlIt is good.
scanned pages of "Naal Oru Narsindhanai" is available in http://www.cse.iitb.ac.in/~mnitya/Meditation/ThoughtForTheDay/
and also here,
http://vethathiri.org/forum/index.php/board,16.0.html
எப்பொருளை எச்செயலை எக்குணத்தைஎவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ற்றல்அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்;இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்

I like this above poem written by maharishi

Good Photo collections

I came across a photo collections good.
http://in.pg.photos.yahoo.com/ph/mndheenathayalan/my_photos

Cause and Effect System Cannot be Changed

The life span of man is limited. He can make masses of several kinds with multifarious shapes, but he cannot produce an energy particle, which is the basic ingredient of all the masses.

Almighty, the Unified Force, is existing in everything, whether it is animate or inanimate, in a specific form of characterized magnetic force which will react and result in an appropriate effect when exposed to any kind of clash or force.

It is Natural Law. There is no bias or prejudice here. This is otherwise called Cause and Effect System of Nature. Man should know the Cause and Effect System and respect it in dealing with anything in Nature and everything in the society.

Man can do several things, but he cannot change the Cause and Effect System. He should understand it, to the extent of this understanding, respect and obey. A man can exploit Nature to the optimum limited benefits of self and for the whole society, present and to come for ever.

To get Divine Knowledge, one has to know the existence and functions of the above said three subjective phenomena of nature, i.e. Unified Force, Life Force (radical energy particle) and Magnetic Wave.

These three phenomena can be understood clearly by understanding the philosophy of universal magnetism. By inner travel meditation and introspection practices, I am gifted by Nature with the revelation of Universal Magnetism and its divine function. I wish to spread this truth to all spiritual aspirants of the society who will enable everybody in the world to get such knowledge easily. And I wish also to bring this truth into the Educational Curriculum.