வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, March 29, 2007

உங்களுடைய அறிவிற்கு ஒரு சிறு சிந்தனை

அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளேகன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்.உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்... -- குரு.வேதாத்திரி மகரிஷி.

நம் குருனாதர்

மோனத்தில் வாய் மூட எண்ணம் தோன்றும்முனைந்தவன் யார்?மோனத்தின் பெருமை தன்னை எளிதா சொல்ல.?மோனமே எல்லாவற்றுக்கும் அடித்தளமாம்.மிக விரிவு.எல்லை இல்லை.இவை எல்லாம் நம் குருனாதர் நமக்காக எழுதி வைத்தவைகள்.அன்புள்ள நண்பர்களே,குருவின் கவிகளை நம் சிரத்திள் வைப்போம்.வள்ளல் பெருமானார் திருவாசகத்தை தன் சிரத்தில் எப்போதும் வைத்த மாதிரி.சிரத்தில் என்றால் நம் மூளைக்குள் ஏற்றுக்கொள்வோம்.நம் குருவிற்கு நாம் செலுத்தும் அன்பின் அடையாளமாக அவரின் சொல்லை பரப்புவோம்.

உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போலஉயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு.என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன் எனக்கு?என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்....

இவ்வார்த்தைகளை நாம் நம் சிரத்தில் கொள்வோம். மிக நுணுக்கமான விசயம் என்பதால், மிக நீண்ட பயிற்சி அவசியம். வாழ்க்கை முழுவதும் நம் அப்பனிடம்(குருவினிடம்) நம் சரணாகதியை சமர்ப்பிபோம்.ஒரு நாள் வரும்... நம் வாயால் நாம்,

உன்னுள்ளே நான் அடங்க என்னுள்ளே நீ விள ங்கஉனது தன்மை ஒளிர எனது உள்ளத்தூய்மை பெற்றேன்இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேர்று பெற்ற பின்னர்எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை...

என்று நாமே நம் குருவின் பாதத்தில் விழுந்து ...அப்பா...என்னை..இப்பிள்ளையை இன்று போல் என்றும் உங்களின் குழந்தையாகவே வைத்துருங்கள் என்று ஆனந்தத்தால் உருகி அழுவோம்.தன் செயல் எண்ணி தவிப்பது தீர் ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்நின்னை சரணடை ந்தேன் ...என்று பாரதியின் கவியாய் நம் குருவின் பாதத்தில் சரண் புகுவோம்....உஙகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

Wednesday, March 21, 2007

அறிவியல் மனம் பற்றி என்ன சொல்லுகின்றது என்று பார்ப்போம்

பொதுவாக எல்லா விதமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களாலும் ஒப்புக் கொள்ளப் படும் கருத்து இது ஒன்று தான் : 'மனம் என்பது மூளையின் இயக்க நிலை ' . Beyond this, any definition towards reality is always debated. அறிவியல் இதற்கு மேல் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஆனால் சுவாமீஜியோ இங்கே தான் தான் மனம் பற்றிய வரையறையை துவக்குகின்றார்... and he reaches greater heights in his simpler words !நாமும் இதை சற்று ஆராய்ந்து பார்க்கலாம் . சுவாமிஜியின் காந்த தத்துவத்த்திற்கு வருவோம்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள் இப்பொழுது அந்த கிண்ணத்துக்கு க்கு என்ன பெயர்?தண்ணீர் கிண்ணம்.அதே கிண்ணத்தில் எண்ணை இருந்தால்?எண்ணை கிண்ணம்.அப்பொழுது ஒரு களத்தில் நாம் எண்ணங்கள் எல்லாம் இருந்தால்? அந்த களத்துக்கு என்ன பெயர்?எண்ணக் களம் .அப்பொழுது நாம் ஜீவ காந்த களம் முழுவதுமே எண்ணங்கள் / எண்ன அலைகள் இருந்தால்? அதை எப்படி அழைப்பது?எண்ணக் களம் என்று தான் அழைக்க வேண்டும் . இந்த ' எண்ணக் களம் ' என்ற தமிழ் சொல்லுக்கு synonym (மறு பெயர்) தான் ' மனம் ' . இப்படி தான் சுவாமிஜி ஜீவ காந்த களத்துக்கு மனம் என்று ஒரு பெயர் வைக்கிறார்கள்.சரி , அறிவியல் அறிஞர்கள் மூளை பகுதியிலேயே தான் ஆராய்ச்சியை ' பார்க் ' பண்ணி வைத்து விட்டார்களே ? கவலை படவேண்டாம் ... இருக்கவே இருக்கின்றது நாம் vethan - yogon theory. அதைக் கொண்டு விளக்கி விடலாம் !மூளை இயங்கினால் மனம் என்று ஒப்புக்கொள்கின்றார்கள் அல்லவா? மூளையின் இயக்கம் என்பது என்ன ? மூளை ஏதால் ஆக்கப்பட்டது? மூளை என்பதும் ஒரு அணு கூட்டமே! காந்தம் இல்லாத அணு உண்டா பிராபண்சததில் ? மூளை செல்களில் இருந்து காந்த அலைகள் வெளியே வந்து கொண்டே தான் இருக்கும்.இந்த காந்த அலைகள் தான் என்ன ?எண்ணங்கள் ... "Thoughts are the waves sent by brain cells " - இதை அறிவியல் மறுப்பதில்லை.இந்த இடத்தில் நாம் ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்க்கலாம்.காவேரி எங்கு உற்பத்தியாகின்றது?குடகு மலையில்.எங்கெல்லாம் பாய்கின்றது?பல மாநிலங்களில்.பாயும் எல்லா மாநிலங்களிலும் காவேரி என்று தானே அழைக்கப்படுகின்றது?ஆம்.மனம் எங்கு உற்பத்தியாகின்றது?மூளை செல்களில்.எங்கெல்லாம் பாய்ந்து பரவுகின்றது?நமது ஜீவ காந்த களம் முழுவதுமே.அப்பொழுது நாம் ஜீவ காந்த களத்தை எப்படி அழைக்க வேண்டும் ?மனம் என்று தானே அழைக்க வேண்டும் ... அப்படி தான் நாமும் அழைத்துக்கொண்டு உள்ளோம்...இது தான் நம் மனம் பற்றிய வேதததிரிய அறிவியல் கண்டுபிடிப்பு ... சுவாமிஜியின் உள்ளறிவு...அறிவியல் ஒரு நாள் வேததாதிரிய அறிவியலை எட்டிப் பிடிக்கும் என்று நம்புவோம், வாழ்த்துவோம்!

மேலடுக்கு-கீழடுக்கு பதிவுகள்

சில நேரங்களில் நமக்கு இப்படி ஒரு உணர்வு தோன்றுகின்றது: "நம்ம நல்ல குணத்தோட இருக்கோமே, நம்ம பிள்ளை மட்டும் என் இப்படி குரங்கு மாதிரி இருக்கு?' - வேததாதிரியம் இது போன்ற சந்தேகங்களுக்கு அருமையான விடைகளை தருகின்றது.வேததாதிரி மகரிஷி எந்த கேள்விக்கும் தான் அகக் காட்சிகளால் உடனே பதில் அளிப்பவர் . அப்படி சொன்ன விடைகளில் ஒன்று தான் இந்த latent-patent imprints, அதாவது மேலடுக்கு-கீழடுக்கு பதிவுகள்.சற்று ஆய்வோமா?ஒரு பையில் மூன்று பந்துகளை போடுவதாகக் கொள்வோம். ஒன்று சிவப்பு; ஒன்று பச்சை; ஒன்று வெள்ளை . இப்போது ஒரு பந்தை எடுப்போம். என்ன நிறம் வரும்?பச்சை அல்லது சிவப்பு அல்லது வெள்ளை - அதாவது போட்டதில் ஒன்று தான் வரும். இப்படி போட்டதில் ஒன்று வெளியில் வருவது தான் பதிவு வெளிப்படல். அதாவது நம் எண்ன அலைகளின் மையம் ஆன கரு மையம் காலம் நேரம் எல்லாம் பார்த்து தன்னகத்தே உள்ள ஒரு என்ணத்தை சரியாக மலரச் செய்யும். அதாவது இல்லாதது வராது . இது ஒரு அடிப்படை அறிவியல் உண்மை.சரி இப்போ அந்த பையில மேலும் இன்னும் மூன்று நிறமுடைய பந்துகளை போடுவோம். போட்டு உங்கள் மகனிடம் ஒன்றும் சொல்லாமல் கொடுத்து விடுங்கள் . அவர் ஒரு பந்தை எடுக்கிறார். அவருக்கு ஒரு நிறம் கிடைக்கின்றது.அது நீங்கள் போட்ட 6 நிறங்களில் ஒன்று தானே . வேறு ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லையே ? இது தான் சன்சித் கர்மா. உங்கள் பதிவுகள் அவரிடம் வெளிப்படல்.அவரும் மேலும் மூன்று புது நிற பந்துகளை போடுவதாக கொள்ளுவோம். இப்போ மொத்தம் 9 பந்துகள் 9 நிறங்களில். இப்படியே ஒரு பத்தாயிரம் தடவை போட்டு போட்டு கொடுப்பதாக கொள்வோம். கடைசியில் ஒருவர் ஒரு பந்தை அந்த பையில் இருந்து எடுகின்றார்.இந்த சூழ்நிலையில் 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மேலாக உள்ள பந்து எளிதில் வெளியே வந்து விடும். அல்லது கீழுள்ள பந்து கூட சில நேரங்களில் பையிலிருந்து வெளி வந்து விடும்.இப்படி மிக அதிகமான காலத்துக்கு உள் இருந்து உள் இருந்து யாருக்குமே தெரியாத ஒரு பதிவு ஒரு கால கட்டத்தில் கருமையத்தில் இருந்து வெளி வருவது தான் latent imprint அல்லது கீழ் நிலைப் பதிவு. அடிக்கடி தலையைக் காட்டும் மேலுள்ள பந்து தான் 'மேல் நிலைப் பதிவு' அல்லது patent imprint.இந்த latent மற்றும் patent பதிவுகள் தான் நம்மை நல்ல மனிதனாகவும், சில சமயங்களில் நாம் மகனை சற்று தீய குணத்தொடும் உருவாக்கி விடுகின்றது.இது போன்ற கண்டுபிடிப்புகளுக்காகவே 'வேததாதிரி' என்ற மஹான் நம் மனத்தில் ஒரு உயரிய நிலையை அடைகின்றார். நம்மை வழி காட்டவும் செய்கின்றார், இது போன்ற கண்டுபிடிப்புகளால்.

இறை நிலையை நாம் ஏன் இறை நிலை என்று கருத வேண்டும் ?

கீதையில் 'மிக ரகசியமான ஞானம்' என்ற ஒரு தலைப்பில் இந்தக் கருத்து செய்யுள்களில் வருகின்றது."நான் [சுத்த வெளி] உங்களுக்குள்ளாகவும் புறமாகவும் இருப்பினும், உங்களை உருவாக்கியவனாகவும் உள்ளடக்கியவனாகவும் இருப்பினும், நான் உங்களுக்கெல்லாம் மேலே தனித்து இருக்கிறேன் [சிவ களமாக]."சுத்த வெளியை இறைவன் என்றும் அதுவே சிவ களம் என்றும் தன் பாடல்களில் புதைத்த வியாசர்-இன் மூளையை எப்படிப் புகழ்வது ? வேததாதிரி மகரிஷியின் அறிவியலை கொண்டு தான் ! நமக்கு தெரிந்த ஒரே தெளிவான சுத்த வெளி தத்துவம் மகரிஷி கொடுத்தது தானே?இந்த எண்ன ஓட்டங்களில் தான் வேதாதிரி ஒரு முத்திரை பதித்து விடுகின்றார். அது என்னவென்றால் 1.சுத்த வெளியை ஏன் இறை நிலை ஏன் கருத வேண்டும் ? 2.சுத்த வெளி எப்படி பொருளாக வந்தது ? என்ற இந்த இரண்டு புதிர்ககளுக்கும் விடை அளிக்கும் ஒரே மஹான் என்ற உயரிய நிலையை அவர் அடைந்து விடுகின்றார்.முதல் கேள்வியின் விடையை ஆய்வதே இந்த மடலின் உட்கருத்து.1. ஒரு பொருள் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள இயக்கங்களின் அடிப்படை அறிவு என்று கொள்வோம். பூமி சரியாய் சுழன்று ஓடி இயங்குவதும் இந்த அறிவுடைய பொருளால் தான் , நீங்கள் சரியாய் மூச்சு விடுவதும் இந்த பொருள் அறிவாய் இயங்குவதால் தான் .2.எல்லா இயக்கங்களும் அதிலிருந்தே வந்தன என்றும் கொள்வோம். நீங்கள் இருப்பது இந்த பொருளால் தான் நீங்கள் இருக்கும் இந்த பூமி இருப்பதும் இந்த பொருளால் தான் .3.எல்லா இயக்கங்களும் அதனுள்ளேயே நிகழ்கின்றன என்றும் கொள்வோம். நீங்களும் அதற்குள் தான் , பல கோடி மைல்கள் தள்ளி இருக்கும் நட்சத்திரமும் அதற்குள் தான் .இப்பொழுது, அந்த பொருளை இறை நிலை என்று கொள்ளலாம் அல்லவா?இப்படித் தான் வியாசர் தன் நிலை விளக்கம் பெறுகின்றார் வேததாதிரியத்தில் . வியாசர் தன்னை சரி என்று நிரூபிக்க எத்தனை எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டியத்தாய் இருந்திருக்கிறது.இதில் ஒரு சூத்திரம் மலர்கின்றது நம் நவீன சிததரின் மனதில்:"இறை நிலை என்பது1. வற்றா இருப்பு2. பேறாற்ரல்3. பேரறிவு4. காலம்என்ற நான்கின் இணைப்பு - இந்த நான்கும் இணைந்ததால் சுத்த வெளியை நாம் இறைவன் என்று கொள்கின்றோம்." என்பது தான் அது .சூத்திரம் புரிந்து அதை நோக்கி மனத்தை குவித்து , இறை நிலை அடைய முயற்சி செய்வோமா ?மேலும், இந்த சூத்திரம் தந்த சுவாமிஜி 'இந்த நூற்றாண்டின் இறை நிலை அறிவியல் தந்த மஹான்' அல்லவா?

'ஏன் இறை நிலை நீயாகவும் நானாகவும் வந்துள்ளது?'

"இறை நிலை பேரறிவை தனது உள்ளடக்கமாக கொண்டது. அந்த பெரும் அறிவின் ஒரு சிறு பகுதியை நாம் 'இயல்ப்பூக்கம்' என்றும் அழைக்கலாம் . அதாவது 'இயல்பு' ஊக்கம் பெறுவது என்று பொருள்.சுத்த வெளியின் 'இயல்பு' எது ?'தன் அதிர்வு' நிலையும் அதன் விளைவாக 'தன் இறுக்க சூழ்ந்து அழுத்தும் ஆற்றலும்'.'சூழ்ந்து அழுத்தும் ஆற்றல்' என்னும் 'இயல்பு' ஊக்கம் பெற்றால் என்ன வரும்? தினிவு அடைந்து ஒரு இடத்தில் சற்றே உடைந்து துகள்-ஆக வெளிவரும்.அப்பொழுது இறை நிலை துகள்-ஆக வந்தது எப்படி?இறை நிலையின் பேரறிவு, இயல்பூககமாக செயல் படடதால் தானே.சர்க்கரை ஏன் இனிக்கின்றது?அதன் இயல்பு ஆகிய காந்தம் சுவையாக ஊக்கம் பெறுவதால். இதுவும் இயல்ப்பூககமே!பாகற்காய் ஏன் கசகின்றது?அதன் இயல்பு ஆகிய காந்தம் சுவையாக ஊக்கம் பெறுவதால். இதுவும் இயல்ப்பூககமே!இப்பொழுது சொல்லுங்கள்:இறை நிலை என் நாமாக வர வேண்டும் ?பேரறிவு உள்ள அந்த இறைநிலை எப்படி சும்மா இருக்க முடியும்? அதனால் தான் அதன் உள்ளே இருந்த இயல்பூகக நியதிப்படி எழுச்சி பெற்று நீயாகவும்

DNA and கருமையம்

நான்: இந்த DNA என்பது வேததாதிரிய அறிவியலில் என்ன ஐய்யா?நம் வேததாதிரிய

அன்பர் : அது ஒண்ணும் இல்லப்பா. கருமையம் மாதிரி தான் ...

நான்: சும்மா சொல்லாதீங்கயா...

நம் வேததாதிரிய அன்பர் : நம்ப மாட்டியா? அப்போ இப்படி வெச்சிக்கலாம், நான் ஐந்து கேள்வி கேக்குறேன், DNA ன்னா என்னான்னு உன் வாயிலிருந்தே வரும், தெரியுமா?இந்த deal எனக்கு பிடிச்சிருந்தது சரி என்று சொல்லி விட்டேன். கேள்விகள் வந்தன , நம் வேததாதிரிய அன்பரிடம் இருந்து. ஒரு பிடி பிடித்து விட்டார் என்னை !நம் வேததாதிரிய அன்பர் : கேள்வி 1 - ஒரு செல் உயிரி யில் காந்தம் உண்டா ?

நான் : உண்டு, அதுவும் அணு கூட்டமே, அதனால் உண்டு.

அன்பர் : கேள்வி 2 - சரி காந்தம் இருந்தால், அந்த ஒரு செல் உயிரி யில் காந்தம் தினிவு பெற்ற மையம் ஒன்று உண்டா ?

நான் : உண்டு, காந்தம் இருக்கும், அது துல்ளிய சம தள சீர்மை ஆற்றலினால் ஒரு மையத்தை பெற்று இருக்கும். சுவாமிஜி இதை specific gravity principle என்று கூட அழைகின்றார்களே!நம் வேததாதிரிய

அன்பர் : சரி தான் . இப்போ கேள்வி 3 - காந்தம் , தான் தினிவு பெற்ற மையத்தில் ஒரு அழுத்த புள்ளியை , அதாவது ஒரு காந்த பதிவை (magnetic imprint) ஏற்படுத்துமா இல்லயா?

நான் : ஏற்படுத்தத் தான் செய்யும். அப்படித் தானே சுவாமிஜி சொல்றாங்க...

நம் வேததாதிரிய அன்பர் : அப்படி வாய்யா வழிக்கு , இப்போ கேள்வி 4 - அந்த காந்த பதிவை பெற்ற ஒரு சிறு பகுதி அந்த செல்லின் blue print மாதிரி செயல் படத் தானே செய்யும். சரி தானே?

நான் : நிச்சயமாக. அப்படித் தானே சுவாமிஜி சொல்லி இருக்காங்க!நம் வேததாதிரிய அன்பர் : கேள்வி 5 - ரொம்ப எளிமையான கேள்வி இது : அறிவியலில் ஒரு செல்லின் blue print ன்னு எதை அழைக்கிறார்கள் ?நான் : DNA யை.

நம் வேததாதிரிய அன்பர் : இப்போ சொல்லுங்க, ' DNA என்பது ஒரு செல் உயிரியின் கரு மையம் ' என்று சொன்னால் அது சரி தானே!

நான் : நூற்றுக்கு நூறு சதவீதம் சரி தான் ஐயா!நம் வேததாதிரிய அன்பர் : நாம எல்லாருமே அந்த ஒரு செல் உயிரின் பரிணாம தோற்றங்கள் தானே...செல்கள் multiphy ஆனதால் தானே நாம் வந்தோம். அப்பொழுது நம்முடைய எல்லா செல்களிலுமே DNA இருக்கத் தானே செய்யும்.நான்: சரி தான் ஐய்யா. எப்படி ஐயா இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க ?நம் வேததாதிரிய அன்பர் : நல்லா ஆழமா தவம் செய்யுங்க தம்பி - இதை எல்லாம் சுவாமிஜி ரொம்ப நல்லாவே குடுப்பாங்க - எல்லாருக்கும்.நான் :நன்றி ஐய்யா ! மிக்க நன்றி!! உரையாடலை படித்து முடித்து விட்டீர்களா, இதையெல்லாம் சொல்லக் கூடிய மகான் நம் கரு மையத்திலும் வர வேண்டும் ன்னு ஒரு ஆசை எழுகின்றது அல்லவா...வாங்க ஐய்யா தவம் ஆழமா செய்யலாம்...

வா ழ் க வ ள மு ட ன் .

Thursday, March 15, 2007

Kayakalpa Yoga

Restructuring the body in a natural way, Kaya Kalpa helps cure and prevent diseases.
It relieves the practitioner of many of the troubles of aging.Kayakalpa Yoga is an ancient wonderful technique of the Siddhas(saints) of South India for the enhancement of life energy.

In Sanskrit, the term "Kaya" means "body and "Kalpa" means "immortal". The Science of Kayakalpa delineates the manner in which the human body can be immortalised.It has a three fold objective1
1. Maintaining youthfulness and physical health;
2. Resisting and slowing down the aging process;
3. postponing death until one reaches spritual perfection.

Benefits
Activates the brain cells to its fullest functional levels.* Increases memory power and grasping ability.* Develops the immunity system.* Reduces the effect of hereditary diseases.* Intensity of chronic diseases like piles, diabetes, asthma and skin diseases is reduced and cured.* Strengthens the uterus. Menstrual problems are reduced to a great extent.* Brings about proper arrangement of polarity of body cells.* Brings about reformation of character.* Helps in removing unwanted thoughts and habits.

Kayakalpa gives significant physical, mental as well as spiritual benefit by intensifying our life-force. As this practice is a restructuring process of the body in a natural way, no medicines or herbs are involved. Significant results have been observed in various types of chronic diseases and in overall improvement of general health. Kaya Kalpa helps cure and prevent diseases and relieves the practitioner of many of the troubles of aging.

Learning* The Kayakalpa can be learnt by those who have attained physical maturity (age above 14).* We need to spend only 3 minutes every morning and evening.*

These exercises is taught in about 3 hours time by the SKY Professors.

Tuesday, March 06, 2007

கடமை

நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள். உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Thursday, March 01, 2007

Choose Feelings

If your days seem filled with unwanted negative feelings, there is only one cure. When they come, choose them. Don't ask why, don't wonder how, don't fight them and never put yourself down for having them. But most of all never blame someone else for how you feel. If you do, it means you are still fast asleep and your choice is to be a victim. When the feelings come, even big disturbing emotional feelings say, "I choose this feeling" and know it comes because of something you have thought or done in the past, perhaps a certain belief that you have learned or an attachment that is threatened. Choice does not mean you want the feelings, but it does mean you are taking responsibility for them. And that is the beginning of self mastery. It is the first step to the healing and resolving of your emotions. But only the first step. Try this today and then ask yourself what the next step might be. If you are really interested to know, you will come to know!