வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, March 29, 2007

உங்களுடைய அறிவிற்கு ஒரு சிறு சிந்தனை

அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளேகன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்.உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்... -- குரு.வேதாத்திரி மகரிஷி.

நம் குருனாதர்

மோனத்தில் வாய் மூட எண்ணம் தோன்றும்முனைந்தவன் யார்?மோனத்தின் பெருமை தன்னை எளிதா சொல்ல.?மோனமே எல்லாவற்றுக்கும் அடித்தளமாம்.மிக விரிவு.எல்லை இல்லை.இவை எல்லாம் நம் குருனாதர் நமக்காக எழுதி வைத்தவைகள்.அன்புள்ள நண்பர்களே,குருவின் கவிகளை நம் சிரத்திள் வைப்போம்.வள்ளல் பெருமானார் திருவாசகத்தை தன் சிரத்தில் எப்போதும் வைத்த மாதிரி.சிரத்தில் என்றால் நம் மூளைக்குள் ஏற்றுக்கொள்வோம்.நம் குருவிற்கு நாம் செலுத்தும் அன்பின் அடையாளமாக அவரின் சொல்லை பரப்புவோம்.

உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போலஉயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு.என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன் எனக்கு?என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்....

இவ்வார்த்தைகளை நாம் நம் சிரத்தில் கொள்வோம். மிக நுணுக்கமான விசயம் என்பதால், மிக நீண்ட பயிற்சி அவசியம். வாழ்க்கை முழுவதும் நம் அப்பனிடம்(குருவினிடம்) நம் சரணாகதியை சமர்ப்பிபோம்.ஒரு நாள் வரும்... நம் வாயால் நாம்,

உன்னுள்ளே நான் அடங்க என்னுள்ளே நீ விள ங்கஉனது தன்மை ஒளிர எனது உள்ளத்தூய்மை பெற்றேன்இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேர்று பெற்ற பின்னர்எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை...

என்று நாமே நம் குருவின் பாதத்தில் விழுந்து ...அப்பா...என்னை..இப்பிள்ளையை இன்று போல் என்றும் உங்களின் குழந்தையாகவே வைத்துருங்கள் என்று ஆனந்தத்தால் உருகி அழுவோம்.தன் செயல் எண்ணி தவிப்பது தீர் ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்நின்னை சரணடை ந்தேன் ...என்று பாரதியின் கவியாய் நம் குருவின் பாதத்தில் சரண் புகுவோம்....உஙகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

Wednesday, March 21, 2007

அறிவியல் மனம் பற்றி என்ன சொல்லுகின்றது என்று பார்ப்போம்

பொதுவாக எல்லா விதமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களாலும் ஒப்புக் கொள்ளப் படும் கருத்து இது ஒன்று தான் : 'மனம் என்பது மூளையின் இயக்க நிலை ' . Beyond this, any definition towards reality is always debated. அறிவியல் இதற்கு மேல் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஆனால் சுவாமீஜியோ இங்கே தான் தான் மனம் பற்றிய வரையறையை துவக்குகின்றார்... and he reaches greater heights in his simpler words !நாமும் இதை சற்று ஆராய்ந்து பார்க்கலாம் . சுவாமிஜியின் காந்த தத்துவத்த்திற்கு வருவோம்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள் இப்பொழுது அந்த கிண்ணத்துக்கு க்கு என்ன பெயர்?தண்ணீர் கிண்ணம்.அதே கிண்ணத்தில் எண்ணை இருந்தால்?எண்ணை கிண்ணம்.அப்பொழுது ஒரு களத்தில் நாம் எண்ணங்கள் எல்லாம் இருந்தால்? அந்த களத்துக்கு என்ன பெயர்?எண்ணக் களம் .அப்பொழுது நாம் ஜீவ காந்த களம் முழுவதுமே எண்ணங்கள் / எண்ன அலைகள் இருந்தால்? அதை எப்படி அழைப்பது?எண்ணக் களம் என்று தான் அழைக்க வேண்டும் . இந்த ' எண்ணக் களம் ' என்ற தமிழ் சொல்லுக்கு synonym (மறு பெயர்) தான் ' மனம் ' . இப்படி தான் சுவாமிஜி ஜீவ காந்த களத்துக்கு மனம் என்று ஒரு பெயர் வைக்கிறார்கள்.சரி , அறிவியல் அறிஞர்கள் மூளை பகுதியிலேயே தான் ஆராய்ச்சியை ' பார்க் ' பண்ணி வைத்து விட்டார்களே ? கவலை படவேண்டாம் ... இருக்கவே இருக்கின்றது நாம் vethan - yogon theory. அதைக் கொண்டு விளக்கி விடலாம் !மூளை இயங்கினால் மனம் என்று ஒப்புக்கொள்கின்றார்கள் அல்லவா? மூளையின் இயக்கம் என்பது என்ன ? மூளை ஏதால் ஆக்கப்பட்டது? மூளை என்பதும் ஒரு அணு கூட்டமே! காந்தம் இல்லாத அணு உண்டா பிராபண்சததில் ? மூளை செல்களில் இருந்து காந்த அலைகள் வெளியே வந்து கொண்டே தான் இருக்கும்.இந்த காந்த அலைகள் தான் என்ன ?எண்ணங்கள் ... "Thoughts are the waves sent by brain cells " - இதை அறிவியல் மறுப்பதில்லை.இந்த இடத்தில் நாம் ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்க்கலாம்.காவேரி எங்கு உற்பத்தியாகின்றது?குடகு மலையில்.எங்கெல்லாம் பாய்கின்றது?பல மாநிலங்களில்.பாயும் எல்லா மாநிலங்களிலும் காவேரி என்று தானே அழைக்கப்படுகின்றது?ஆம்.மனம் எங்கு உற்பத்தியாகின்றது?மூளை செல்களில்.எங்கெல்லாம் பாய்ந்து பரவுகின்றது?நமது ஜீவ காந்த களம் முழுவதுமே.அப்பொழுது நாம் ஜீவ காந்த களத்தை எப்படி அழைக்க வேண்டும் ?மனம் என்று தானே அழைக்க வேண்டும் ... அப்படி தான் நாமும் அழைத்துக்கொண்டு உள்ளோம்...இது தான் நம் மனம் பற்றிய வேதததிரிய அறிவியல் கண்டுபிடிப்பு ... சுவாமிஜியின் உள்ளறிவு...அறிவியல் ஒரு நாள் வேததாதிரிய அறிவியலை எட்டிப் பிடிக்கும் என்று நம்புவோம், வாழ்த்துவோம்!

மேலடுக்கு-கீழடுக்கு பதிவுகள்

சில நேரங்களில் நமக்கு இப்படி ஒரு உணர்வு தோன்றுகின்றது: "நம்ம நல்ல குணத்தோட இருக்கோமே, நம்ம பிள்ளை மட்டும் என் இப்படி குரங்கு மாதிரி இருக்கு?' - வேததாதிரியம் இது போன்ற சந்தேகங்களுக்கு அருமையான விடைகளை தருகின்றது.வேததாதிரி மகரிஷி எந்த கேள்விக்கும் தான் அகக் காட்சிகளால் உடனே பதில் அளிப்பவர் . அப்படி சொன்ன விடைகளில் ஒன்று தான் இந்த latent-patent imprints, அதாவது மேலடுக்கு-கீழடுக்கு பதிவுகள்.சற்று ஆய்வோமா?ஒரு பையில் மூன்று பந்துகளை போடுவதாகக் கொள்வோம். ஒன்று சிவப்பு; ஒன்று பச்சை; ஒன்று வெள்ளை . இப்போது ஒரு பந்தை எடுப்போம். என்ன நிறம் வரும்?பச்சை அல்லது சிவப்பு அல்லது வெள்ளை - அதாவது போட்டதில் ஒன்று தான் வரும். இப்படி போட்டதில் ஒன்று வெளியில் வருவது தான் பதிவு வெளிப்படல். அதாவது நம் எண்ன அலைகளின் மையம் ஆன கரு மையம் காலம் நேரம் எல்லாம் பார்த்து தன்னகத்தே உள்ள ஒரு என்ணத்தை சரியாக மலரச் செய்யும். அதாவது இல்லாதது வராது . இது ஒரு அடிப்படை அறிவியல் உண்மை.சரி இப்போ அந்த பையில மேலும் இன்னும் மூன்று நிறமுடைய பந்துகளை போடுவோம். போட்டு உங்கள் மகனிடம் ஒன்றும் சொல்லாமல் கொடுத்து விடுங்கள் . அவர் ஒரு பந்தை எடுக்கிறார். அவருக்கு ஒரு நிறம் கிடைக்கின்றது.அது நீங்கள் போட்ட 6 நிறங்களில் ஒன்று தானே . வேறு ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லையே ? இது தான் சன்சித் கர்மா. உங்கள் பதிவுகள் அவரிடம் வெளிப்படல்.அவரும் மேலும் மூன்று புது நிற பந்துகளை போடுவதாக கொள்ளுவோம். இப்போ மொத்தம் 9 பந்துகள் 9 நிறங்களில். இப்படியே ஒரு பத்தாயிரம் தடவை போட்டு போட்டு கொடுப்பதாக கொள்வோம். கடைசியில் ஒருவர் ஒரு பந்தை அந்த பையில் இருந்து எடுகின்றார்.இந்த சூழ்நிலையில் 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மேலாக உள்ள பந்து எளிதில் வெளியே வந்து விடும். அல்லது கீழுள்ள பந்து கூட சில நேரங்களில் பையிலிருந்து வெளி வந்து விடும்.இப்படி மிக அதிகமான காலத்துக்கு உள் இருந்து உள் இருந்து யாருக்குமே தெரியாத ஒரு பதிவு ஒரு கால கட்டத்தில் கருமையத்தில் இருந்து வெளி வருவது தான் latent imprint அல்லது கீழ் நிலைப் பதிவு. அடிக்கடி தலையைக் காட்டும் மேலுள்ள பந்து தான் 'மேல் நிலைப் பதிவு' அல்லது patent imprint.இந்த latent மற்றும் patent பதிவுகள் தான் நம்மை நல்ல மனிதனாகவும், சில சமயங்களில் நாம் மகனை சற்று தீய குணத்தொடும் உருவாக்கி விடுகின்றது.இது போன்ற கண்டுபிடிப்புகளுக்காகவே 'வேததாதிரி' என்ற மஹான் நம் மனத்தில் ஒரு உயரிய நிலையை அடைகின்றார். நம்மை வழி காட்டவும் செய்கின்றார், இது போன்ற கண்டுபிடிப்புகளால்.

இறை நிலையை நாம் ஏன் இறை நிலை என்று கருத வேண்டும் ?

கீதையில் 'மிக ரகசியமான ஞானம்' என்ற ஒரு தலைப்பில் இந்தக் கருத்து செய்யுள்களில் வருகின்றது."நான் [சுத்த வெளி] உங்களுக்குள்ளாகவும் புறமாகவும் இருப்பினும், உங்களை உருவாக்கியவனாகவும் உள்ளடக்கியவனாகவும் இருப்பினும், நான் உங்களுக்கெல்லாம் மேலே தனித்து இருக்கிறேன் [சிவ களமாக]."சுத்த வெளியை இறைவன் என்றும் அதுவே சிவ களம் என்றும் தன் பாடல்களில் புதைத்த வியாசர்-இன் மூளையை எப்படிப் புகழ்வது ? வேததாதிரி மகரிஷியின் அறிவியலை கொண்டு தான் ! நமக்கு தெரிந்த ஒரே தெளிவான சுத்த வெளி தத்துவம் மகரிஷி கொடுத்தது தானே?இந்த எண்ன ஓட்டங்களில் தான் வேதாதிரி ஒரு முத்திரை பதித்து விடுகின்றார். அது என்னவென்றால் 1.சுத்த வெளியை ஏன் இறை நிலை ஏன் கருத வேண்டும் ? 2.சுத்த வெளி எப்படி பொருளாக வந்தது ? என்ற இந்த இரண்டு புதிர்ககளுக்கும் விடை அளிக்கும் ஒரே மஹான் என்ற உயரிய நிலையை அவர் அடைந்து விடுகின்றார்.முதல் கேள்வியின் விடையை ஆய்வதே இந்த மடலின் உட்கருத்து.1. ஒரு பொருள் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள இயக்கங்களின் அடிப்படை அறிவு என்று கொள்வோம். பூமி சரியாய் சுழன்று ஓடி இயங்குவதும் இந்த அறிவுடைய பொருளால் தான் , நீங்கள் சரியாய் மூச்சு விடுவதும் இந்த பொருள் அறிவாய் இயங்குவதால் தான் .2.எல்லா இயக்கங்களும் அதிலிருந்தே வந்தன என்றும் கொள்வோம். நீங்கள் இருப்பது இந்த பொருளால் தான் நீங்கள் இருக்கும் இந்த பூமி இருப்பதும் இந்த பொருளால் தான் .3.எல்லா இயக்கங்களும் அதனுள்ளேயே நிகழ்கின்றன என்றும் கொள்வோம். நீங்களும் அதற்குள் தான் , பல கோடி மைல்கள் தள்ளி இருக்கும் நட்சத்திரமும் அதற்குள் தான் .இப்பொழுது, அந்த பொருளை இறை நிலை என்று கொள்ளலாம் அல்லவா?இப்படித் தான் வியாசர் தன் நிலை விளக்கம் பெறுகின்றார் வேததாதிரியத்தில் . வியாசர் தன்னை சரி என்று நிரூபிக்க எத்தனை எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டியத்தாய் இருந்திருக்கிறது.இதில் ஒரு சூத்திரம் மலர்கின்றது நம் நவீன சிததரின் மனதில்:"இறை நிலை என்பது1. வற்றா இருப்பு2. பேறாற்ரல்3. பேரறிவு4. காலம்என்ற நான்கின் இணைப்பு - இந்த நான்கும் இணைந்ததால் சுத்த வெளியை நாம் இறைவன் என்று கொள்கின்றோம்." என்பது தான் அது .சூத்திரம் புரிந்து அதை நோக்கி மனத்தை குவித்து , இறை நிலை அடைய முயற்சி செய்வோமா ?மேலும், இந்த சூத்திரம் தந்த சுவாமிஜி 'இந்த நூற்றாண்டின் இறை நிலை அறிவியல் தந்த மஹான்' அல்லவா?

'ஏன் இறை நிலை நீயாகவும் நானாகவும் வந்துள்ளது?'

"இறை நிலை பேரறிவை தனது உள்ளடக்கமாக கொண்டது. அந்த பெரும் அறிவின் ஒரு சிறு பகுதியை நாம் 'இயல்ப்பூக்கம்' என்றும் அழைக்கலாம் . அதாவது 'இயல்பு' ஊக்கம் பெறுவது என்று பொருள்.சுத்த வெளியின் 'இயல்பு' எது ?'தன் அதிர்வு' நிலையும் அதன் விளைவாக 'தன் இறுக்க சூழ்ந்து அழுத்தும் ஆற்றலும்'.'சூழ்ந்து அழுத்தும் ஆற்றல்' என்னும் 'இயல்பு' ஊக்கம் பெற்றால் என்ன வரும்? தினிவு அடைந்து ஒரு இடத்தில் சற்றே உடைந்து துகள்-ஆக வெளிவரும்.அப்பொழுது இறை நிலை துகள்-ஆக வந்தது எப்படி?இறை நிலையின் பேரறிவு, இயல்பூககமாக செயல் படடதால் தானே.சர்க்கரை ஏன் இனிக்கின்றது?அதன் இயல்பு ஆகிய காந்தம் சுவையாக ஊக்கம் பெறுவதால். இதுவும் இயல்ப்பூககமே!பாகற்காய் ஏன் கசகின்றது?அதன் இயல்பு ஆகிய காந்தம் சுவையாக ஊக்கம் பெறுவதால். இதுவும் இயல்ப்பூககமே!இப்பொழுது சொல்லுங்கள்:இறை நிலை என் நாமாக வர வேண்டும் ?பேரறிவு உள்ள அந்த இறைநிலை எப்படி சும்மா இருக்க முடியும்? அதனால் தான் அதன் உள்ளே இருந்த இயல்பூகக நியதிப்படி எழுச்சி பெற்று நீயாகவும்

DNA and கருமையம்

நான்: இந்த DNA என்பது வேததாதிரிய அறிவியலில் என்ன ஐய்யா?நம் வேததாதிரிய

அன்பர் : அது ஒண்ணும் இல்லப்பா. கருமையம் மாதிரி தான் ...

நான்: சும்மா சொல்லாதீங்கயா...

நம் வேததாதிரிய அன்பர் : நம்ப மாட்டியா? அப்போ இப்படி வெச்சிக்கலாம், நான் ஐந்து கேள்வி கேக்குறேன், DNA ன்னா என்னான்னு உன் வாயிலிருந்தே வரும், தெரியுமா?இந்த deal எனக்கு பிடிச்சிருந்தது சரி என்று சொல்லி விட்டேன். கேள்விகள் வந்தன , நம் வேததாதிரிய அன்பரிடம் இருந்து. ஒரு பிடி பிடித்து விட்டார் என்னை !நம் வேததாதிரிய அன்பர் : கேள்வி 1 - ஒரு செல் உயிரி யில் காந்தம் உண்டா ?

நான் : உண்டு, அதுவும் அணு கூட்டமே, அதனால் உண்டு.

அன்பர் : கேள்வி 2 - சரி காந்தம் இருந்தால், அந்த ஒரு செல் உயிரி யில் காந்தம் தினிவு பெற்ற மையம் ஒன்று உண்டா ?

நான் : உண்டு, காந்தம் இருக்கும், அது துல்ளிய சம தள சீர்மை ஆற்றலினால் ஒரு மையத்தை பெற்று இருக்கும். சுவாமிஜி இதை specific gravity principle என்று கூட அழைகின்றார்களே!நம் வேததாதிரிய

அன்பர் : சரி தான் . இப்போ கேள்வி 3 - காந்தம் , தான் தினிவு பெற்ற மையத்தில் ஒரு அழுத்த புள்ளியை , அதாவது ஒரு காந்த பதிவை (magnetic imprint) ஏற்படுத்துமா இல்லயா?

நான் : ஏற்படுத்தத் தான் செய்யும். அப்படித் தானே சுவாமிஜி சொல்றாங்க...

நம் வேததாதிரிய அன்பர் : அப்படி வாய்யா வழிக்கு , இப்போ கேள்வி 4 - அந்த காந்த பதிவை பெற்ற ஒரு சிறு பகுதி அந்த செல்லின் blue print மாதிரி செயல் படத் தானே செய்யும். சரி தானே?

நான் : நிச்சயமாக. அப்படித் தானே சுவாமிஜி சொல்லி இருக்காங்க!நம் வேததாதிரிய அன்பர் : கேள்வி 5 - ரொம்ப எளிமையான கேள்வி இது : அறிவியலில் ஒரு செல்லின் blue print ன்னு எதை அழைக்கிறார்கள் ?நான் : DNA யை.

நம் வேததாதிரிய அன்பர் : இப்போ சொல்லுங்க, ' DNA என்பது ஒரு செல் உயிரியின் கரு மையம் ' என்று சொன்னால் அது சரி தானே!

நான் : நூற்றுக்கு நூறு சதவீதம் சரி தான் ஐயா!நம் வேததாதிரிய அன்பர் : நாம எல்லாருமே அந்த ஒரு செல் உயிரின் பரிணாம தோற்றங்கள் தானே...செல்கள் multiphy ஆனதால் தானே நாம் வந்தோம். அப்பொழுது நம்முடைய எல்லா செல்களிலுமே DNA இருக்கத் தானே செய்யும்.நான்: சரி தான் ஐய்யா. எப்படி ஐயா இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க ?நம் வேததாதிரிய அன்பர் : நல்லா ஆழமா தவம் செய்யுங்க தம்பி - இதை எல்லாம் சுவாமிஜி ரொம்ப நல்லாவே குடுப்பாங்க - எல்லாருக்கும்.நான் :நன்றி ஐய்யா ! மிக்க நன்றி!! உரையாடலை படித்து முடித்து விட்டீர்களா, இதையெல்லாம் சொல்லக் கூடிய மகான் நம் கரு மையத்திலும் வர வேண்டும் ன்னு ஒரு ஆசை எழுகின்றது அல்லவா...வாங்க ஐய்யா தவம் ஆழமா செய்யலாம்...

வா ழ் க வ ள மு ட ன் .

Thursday, March 15, 2007

Kayakalpa Yoga

Restructuring the body in a natural way, Kaya Kalpa helps cure and prevent diseases.
It relieves the practitioner of many of the troubles of aging.Kayakalpa Yoga is an ancient wonderful technique of the Siddhas(saints) of South India for the enhancement of life energy.

In Sanskrit, the term "Kaya" means "body and "Kalpa" means "immortal". The Science of Kayakalpa delineates the manner in which the human body can be immortalised.It has a three fold objective1
1. Maintaining youthfulness and physical health;
2. Resisting and slowing down the aging process;
3. postponing death until one reaches spritual perfection.

Benefits
Activates the brain cells to its fullest functional levels.* Increases memory power and grasping ability.* Develops the immunity system.* Reduces the effect of hereditary diseases.* Intensity of chronic diseases like piles, diabetes, asthma and skin diseases is reduced and cured.* Strengthens the uterus. Menstrual problems are reduced to a great extent.* Brings about proper arrangement of polarity of body cells.* Brings about reformation of character.* Helps in removing unwanted thoughts and habits.

Kayakalpa gives significant physical, mental as well as spiritual benefit by intensifying our life-force. As this practice is a restructuring process of the body in a natural way, no medicines or herbs are involved. Significant results have been observed in various types of chronic diseases and in overall improvement of general health. Kaya Kalpa helps cure and prevent diseases and relieves the practitioner of many of the troubles of aging.

Learning* The Kayakalpa can be learnt by those who have attained physical maturity (age above 14).* We need to spend only 3 minutes every morning and evening.*

These exercises is taught in about 3 hours time by the SKY Professors.

Tuesday, March 06, 2007

கடமை

நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள். உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Thursday, March 01, 2007

Choose Feelings

If your days seem filled with unwanted negative feelings, there is only one cure. When they come, choose them. Don't ask why, don't wonder how, don't fight them and never put yourself down for having them. But most of all never blame someone else for how you feel. If you do, it means you are still fast asleep and your choice is to be a victim. When the feelings come, even big disturbing emotional feelings say, "I choose this feeling" and know it comes because of something you have thought or done in the past, perhaps a certain belief that you have learned or an attachment that is threatened. Choice does not mean you want the feelings, but it does mean you are taking responsibility for them. And that is the beginning of self mastery. It is the first step to the healing and resolving of your emotions. But only the first step. Try this today and then ask yourself what the next step might be. If you are really interested to know, you will come to know!

Wednesday, February 07, 2007

SKY Exercises

Yogiraj Shri Vethathiri Maharishi after years of intense research has systematized a series of exercises that is suitable for all climates and all sections of the human community in the contemporary age.In the human physical system, the subtle life-force and the gross body are linked by three media: blood, heat and air. If the normal quantity and quality of these media and their circulation are adversely affected, the harmony between the body and life-force is disturbed and the result is pain.For maintaining good health one must guard against disturbances in the body, life-force and the three media of blood, heat and air.Neglect, improper or over-indulgence in food, sleep, work, sex and use of thought-force cause disturbance to the normal functioning of the body in various ways. Natural causes such as climatic changes, hereditary imprints and changes in the planetary configurations and radiation also can disturb the health and mind. It is not possible to change any of these natural forces, but we can always be cautious in our own actions and thus avoid harmful results, and practice regular exercise to maintain the required fitness.If spiritual development is to take place, the body must be free of diseases and pain to the maximum extent. Therefore, all spiritual aspirants are first and foremost advised to take up this system of physical health that would enable one to reap much more benefits in spiritual practices.The benefits of different stages of Simplified Physical Exercise are as follows

Hand Exercise

* Hands and shoulders are strengthened.* Arthritis, Numbness, Trembling of hands, pain in the joints etc. are reduced in a few days and cured with prolonged practice.* Improves the functioning of lungs.

Leg Exercises*
Legs are strengthened and flexible.* Blood circulation is regulated in the lower abdomen.* Curative and preventive for sciatica and arthritis in feet and legs.* Foot reflexology activates and benefits all the organs of the body.

Neuro-muscular breathing exercises*

Regulates the endocrine system and oxygenates the blood.* Ventilates the lungs fully, purifies the blood and increases vital energy.* Helps cure chronic headache, migraine, asthma, allergies and sinus conditions.

Eye Exercise

Helps correct and prevent defective eyesight by toning the muscles around the eyes.Prevents strain and other eye ailments.

Kapaalabhati*

Clears the congestion in the nasal passage.* Helps to cure sinusitis.

Makarasana*

Regulates the endocrine system.Massages the abdominal organs gently – liver, spleen, intestines, kidneys, pancreas.* Reduces the excessive sugar in urine and blood* Reduces kidney stones.* Relieves menstrual discomfort.* Keeps the spine and spinal nerves flexible and healthy.* Strengthens the backbone and the spinal cord.* Removes unwanted flesh and strengthens the body.* Regulates the menstrual system.

Acu-Pressure*

Blockages due to short-circuit of electrical energy are removed.* A preventive for heart ailments.* Helpful in alleviating insomnia.

Massaging*

Refreshes and tones the sense organs, facial nerves and vital organs.

Relaxation*
Removes tension and relaxes muscles all over the body.* Brings down blood pressure.* Removes recurrence of heart trouble.* Gives a wholesome rest to the entire system.

Wednesday, January 24, 2007

வேண்டியதெல்லாம் கிடைக்கும்

நீ எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி பிறர் மூலமாகக் கிடைக்காது. ஒவ்வொரு மாற்றத்திலும் பிணக்குற்று, பிணக்குற்று ஏமாற்றத்திற்கு ஆட்பட்டு அதனாலே துன்பமானது பெருகிக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்ட பின்னர் "எதிர்பார்த்தல்" என்பதை விட்டு விடுவது நல்லது எனத் தெரிகிறதல்லவா? தொடக்கத்தில் ஒரு வார காலம் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்ற முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளுங்கள். (Do not expect anything from anyone for one week to start with and then extend the period to one month). அதற்குரிய விளைவு நிச்சயமாக உண்டு. நீ எதிர்பார்த்தாலும், எதிர் பார்க்காவிட்டாலும் நீ என்ன செயல் செய்கிறாயோ, அந்தச் செயலுக்குத் தக்க விளைவு வந்துதான் ஆக வேண்டும். நல்லதை எண்ணி, நல்லதை விளங்கிக் கொண்டு, பயனை உணர்ந்து கொண்டு இப்பொழுது செய்கிறேன்; வருவதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் - இந்த அளவு வரும் எனக்கூட எதிர்பாராது நல்லதைச் செய்யும்போது நிச்சயமாக நன்மை பிறக்கும் என்று செய். அவ்வாறு செய்வதற்கு முன்னதாக இன்னொரு ஆராய்ச்சியும் தேவை. அதாவது உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். நீ எங்கே இருக்கிறாய், என்னவாய் இருக்கிறாய்? (What you are, where you are and how you are?) உடல் நலத்திலே, வலுவிலே, வயதிலே, அறிவாற்றலிலே அல்லது விஞ்ஞான வளர்ச்சியிலே, பொருள் உற்பத்தி செய்யும் திறமையிலே, அதிகாரத்திலே, சூழ்நிலையிலே உள்ள ஒரு வாய்ப்பிலே நீ எங்கே இருக்கிறாய், எப்படி இருக்கிறாய்? இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு, சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன். செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு; செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய். இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தன்னிறைவுத் திட்டம்

நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும், திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவ முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அமைதியாக உட்கார்ந்து நீங்கள் 'எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்?' என்று கணித்துக் கொள்ளுங்கள். அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில், சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்த அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும்? தான் குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன. உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக்கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும் ஆற்றலைச் செலவிட வேண்டும். இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச்சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்மயோகம்" இதில் அடங்கியிருக்கிறது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

கருவில் திரு உடையார்

ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நிற்கும் போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது. ஓர் ஏற்புத் தன்மை இருந்தால் குருதானே இங்கே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர்நிலையில் பக்குவப்படட்டும். குரு தானாக வருவார். மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? அது பிரம்மத்தினுடைய சாயை தானே? இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியதுதானே? (Fraction demands and Totality Supplies).நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம் அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம்; அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும் போது அதை நமது தமிழகத்துப் பெரியவர்கள் "கருவில் திரு உடையார்" என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

தெய்வீகப் புதையல்

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும், அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன. ஆகையால் தான், நான் கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் என்று சொல்கிறேன். அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது. ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வதோடு, அதை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் 'ஆன்மா' எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது. வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்

மனித வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Faith) என்றால் "ஒரு பெரிய சக்தியானது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது; அது என்னுள்ளும் இருக்கத்தான் வேண்டும்; நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னாலேயும் இருக்கும். அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்" - இவ்வாறு நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி முழுமையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் "மதம்" (Religion) என்பதாகும். அதற்கும் மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மாறாத ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான் "ஞானம்".
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Tuesday, January 23, 2007

விலங்கினப் பதிவு

ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :- 1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல். 2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல். 3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன் இன்பத்துக்காகவோ பறித்தல்.என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.

Thursday, January 11, 2007

World Peace Prayer

Rain may pour timely and sufficiently.Farmers may enthusiastically work to produce grains abundantly.Those who are labouring to produce articles for the use of all may prosper.In addition to specialised research, the holistic knowledge may be spread through the educational system.Competition, enmity and quarrels may be eradicated from politics.The three curses of illiteracy, debt and poverty may be erased.Realization of Truth and Self may blossom to give the light of wisdom to all people.Our duty may be focused on the virtuous way of living.

The Main objective of WCSC is to realize World Peace

World Peace does not come from the world or from the leaders of the world, scientists, doctors, engineers, etc.. It comes from the individuals of the world. When an individual is at peace it spreads to his family, his neighbours, his city, his country and finally to the world.How does an individual get his peace? This is obtained through the concept of holistic health comprising of1. Physical health through simple yogic excercises.2. Mental health through SKY practices.3. Social health through Introspection4. Spiritual health through concept of Unified Force ( Brahama Gnana )

How is the karma registered in our Aanma , that is soul, otherwise called the Genetic Centre ?

Karmas are actions done by the karmendriyas (limbs of the body) and gnanendriyas (sense organs). Every action one does, whether good or bad, disturbs the bio-magnetism of the doer or others. Such actions characterize the magnetic wave and are shrunk by the compressive force of Almighty to become one with the genetic centre. Such added characters become one's own character.
So, whatever the sin or virtue, one does, all are characterizing the genetic centre which is the condensation of one's own magnetism that enlivens and runs the body.
In this way, whatever one does by the limbs and senses, the enjoyment of pleasure and pain, and whatever one plans to do - all characterize one's genetic centre appropriately.
In this way, from the first living being throughout all the generations of the different species, through which humanity has evolved, the characterization of the genetic centre has continued without break. This accumulated character is working as sanjitha karma (hereditary karma) in the genetic centre. Praraptha karma is present life karma: the quality of such thought and action from whatever one has done during the lifetime.
The qualities of the two aspects of karmas, sanjitha and praraptha will induce the person to do new karmas and he has to enjoy or suffer from it. This action done out of combined sanjitha and praraptha karma is called aakamya karma. Aakamya means inducing the person to act and incur new karma.
The characteristic qualities which are potential in the genetic centre - which is other-wise called soul - need not be suffered or enjoyed for purification, because the genetic centre itself is nothing but characterized, intensified bio-magnetism situated in the centre of the body.
As such, all the qualities in the genetic centre can be changed or reformed by the mind without any need of physical action, if one realizes his own self and what is the nature of the genetic centre and its character. By changing one's mental concept, whatever the nature of one's sanjitha or praraptha karmas, one can neutralize the negative karmas by the development of knowledge in the spiritual field.
When one realizes the Truth about God, its transformation as universe and all about the living beings, he is capable of reforming all his unwanted qualities by spiritual understanding and practice. It is a longstanding wrong concept that human karmas must be neutralized only through suffering. As much as, he realizes the Truth, one is getting mental strength to change his bad karma accordingly.
The realization of self as the transformation of Almighty itself completely divinizes the mind which appropriately purifies the genetic centre (soul). When you help another person, the help you give is also part of that person's good karma.
This will be good karma for you also, because you are working to fulfill the order of Almighty as its messenger. Therefore, the age old concept that karmas can be purified or eradicated only through mental or physical suffering is to be changed; one should have only good thoughts and actions by mind and body. Then neutralization of all unwanted karma will take place in daily life, finally enabling one to absorb the self with Almighty.
This is Mukti or liberation of man.
This is the good spiritual news for all people of the world.
Be blessed by the Divine.