வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Sunday, December 02, 2007

How do I change?

If I feel depressed I will sing.
If I feel sad I will laugh.
If I feel ill I will double my labour.
If I feel fear I will plunge ahead.
If I feel inferior I will wear new garments.
If I feel uncertain I will raise my voice.
If I feel poverty I will think of wealth to come.
If I feel incompetent I will think of past success.
If I feel insignificant I will remember my goals.
Today I will be the master of my emotions.

Vaazhga vaiyagam!!
Vaazhga valamudan!!

Wednesday, August 22, 2007

அனைத்து பாடல்கலும் எப்பிறப்பில் காண்பேன் இனி.....

1.இப்பாரில் பிறப்பெடுத்து இன்பமும் இன்னலுமுற்று அப்பாலுக் கப்பால் விளைந்த அருளமுதம் அறிவித்து செப்பாத் மேனிலைமேல் சிவமாக்கும் குருமேனி எப்பிறப்பில் காண்பேன் இனி.........

2. முந்தித் தவம் இருந்த புண்ணியம் இல்லாதிருந்தும் சிந்தைய்லே விந்தை விளைவித்து சாதித்தாய் ! அப்பா, அருட்குருவே, மெய்ஞான வள்ளலுனை எப்பிறப்பில் காண்பேன் இனி........
3. அறிவிற்கு இலக்கணம் அய்யனே நீ தந்தாய் அறிவை அறிவித்தாய் ; உறவை தெரிய வைத்தாய் புரிந்து, புரியவைத்து நீ பறந்து விட்டாயே ! எப்பிறப்பில் காண்பேன் இனி........
.4. விழலுக்கு நீரூற்றி வீணான வாழ்வியலை விழுமியத்துள் வளைத்து விளக்கேற்றி விளங்கவைத்து தொழுது வணங்குவதற்குள் தூரப்பற்ந்தாயே - உனை எப்பிறப்பில் காண்பேன் இனி.....
5. தந்த தவத்திற்கு ஈடு இணை ஏதுமுண்டோ ? இந்தப் பிறவிய்லே ஈடேற வழியுண்டோ ? வந்தப் பணிமுடிந்து வான்வழிக்கு சென்றாயே எப்பிறப்பில் காண்பேன் இனி.......
6. விஞ்ஞானம் விளைவித்த விளங்காத பக்கங்கள் - உன் மெய்ஞான விளக்கத்தில் மெய்சிலிர்த்த அனுபவங்கள் ஒவ்வாத குணம் நீக்கி அகதீபம் ஏற்றினையே....! எப்பிறப்பில் காண்பேன் இனி.........
7. பருமேனி பார்த்தபின்னும் மாறாமல் மறந்து விட்டேன் திருமேனி தெளிந்தபின்னும் தேராமல் இழந்து விட்டேன் முப்பாழ் விளங்கி முழுமை பெற தவழ்கின்றேன் எப்பிறப்பில் காண்பேன் இனி......
8. அழுது புலம்புதற்கு திருவடிகள் தெரியலையே......1 பழுதாகி வந்த வினை விடுதலைக்கு வழிய்லையே......! இப்பிறவி நீந்திப்பதம் அடைய வரம் வேண்டும் - அப்பா உணை எப்பிறப்பில் காண்பேன் இனி......

வாழ்க வளமுடன் சீனி. இளங்கோவன் சென்னை குயப்பேட்டை ஆன்மீக அறிவாலயம். சென்னை 600012

Tuesday, August 21, 2007

Why we are adviced to do excercise on mat?

நாம் உடற்பயிற்சி செய்யும்போது விரிப்பின் மீதுதான் செய்கிறோம். ஏனெனில், வெறும் தரையில் செய்யும்போது நமது ஜீவ காந்த ஆற்றல் வெளியேற வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, தரை மிகவும் குளிராக இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது வெறும் தரையில் பயிற்சி செய்தால், நமது ஜீவ காந்த ஆற்றல் வெளியேறும். பயிற்சியின் நோக்கமே ஜீவ காந்த ஆற்றலை கூட்துவதுதான். எனவே, நாம் ஒரு விரிப்பின் மீது செய்கிறோம். கை பயிற்சியின் போது, கைகளை சுழற்றும் போது, கைகளின் விரல்களை குவித்து கொள்வதும், ஜீவ காந்த இழப்பை தவிர்ப்பதர்க்குதான்.

Friday, August 17, 2007

அன்பும் கருணையுமாய்

அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளேகன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்.உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்... -- குரு.வேதாத்திரி மகரிஷி.

Thursday, August 16, 2007

soul and life

கேல்வனியின் 'விலங்கின் மின்சாரமும்' வேதாதிரியின் 'சீவகாந்தமும்'... கேல்வனி என்ற அந்த இயற்பியல் அறிஞரோடு தொடர்புடைய மின் கலம் [Battery] என்ற அந்த அற்புதமான கண்டுபிடிப்பை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் பாருங்கள், அறிவியலில் அவ்வளவு தூரம் ஆராயப் படாத அந்த கண்டுபிடிப்பின் பகுதிஒன்றும் உள்ளது. அதை ஆராயாமல் தான் அன்றைய அறிவியல் கேல்வனியை மின்கலத்துக்குள் 'கேல்வனிசமாக' நுழைத்தது. இன்றைய அறிவியல் அதையும்¦nbsp; ஆராய்ந்து கேல்வனியை உயர்த்திக் கொண்டிருக்கிறது.கேல்வனி படித்தது இயற்பியல் அல்ல. அவர் ஒரு மருத்துவர் - போலொனா மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று தன்னுடைய தந்தையை போலவே ஒரு மருத்துவராக பணியாற்றினார் அவர். அந்த கால கட்டத்தில் தான் ஒரு தவளை அவருக்கு இயற்பியல் துறைக்கு தாவ உதவி செய்தது. ஒரு முறை அவரது ஆய்வுக் கூடத்தில் ஒரு தவளையில் உடலில் தானாக தோன்றிய மின்னூடடமே அவரது கண்டுபிடிப்பின் மூலம்.¦nbsp; ¦nbsp;இதனின் original version இது தான்: "ஒரு தவளையின் தொடை நரம்பை தொடுமாறு ஒரு உலோகத்தையும் வயிற்றுப்பகுதி தசையை தொடுமாறு வேறு ஒரு உலோகத்தையும் வைத்தபோது¦nbsp; அவைகளில் மின்சாரம் தோன்றியது. இந்த மின்சாரத்துக்கு நான் 'விலங்கின் மின்சாரம் [animal electricity] ' என்று பெயர் வைக்கப் போகின்றேன்." - ; இதனின் இன்றைய இயற்பியல் பின்னணி : "இருவேறு உலோகங்கள் ஒரு மின் கடத்தும் அயனியாகும் நீர்ம ஊடகத்தில் வைக்கப்படுமாயின், ஒரு உலோக முனைக்கும் மறு உலோக முனைக்கும் இடையே நிகழும் electrons ஓட்டத் தினால் ஒரு மின்சாரம் அந்த உலோகங்களில் தோன்றுகின்றது.¦nbsp; அதனால் அந்த மின்கடத்தி¦nbsp; உலோகங்களை சுற்றி ஒரு மின் காந்த களமும் ஏற்படுகின்றது."¦nbsp; தவளையின் உடல் செல்களில் என்ன நிகழ்ந்தது என்பதை அவ்வளவாக ஆராயாத அன்றைய அறிவியல், 'உலோகத்தில் மின்னூடடம்' என்பதை மட்டும் முன்னிறுத்தி கேல்வனிஸம் தந்து அதை மின்கலமாக வெளியிட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்றைய அறிவியல் விடுபட்ட அந்த Bio-Electromagnetism என்பதையும் ஒரு துறையாக நிறுவி இப்படி ஒரு இலக்கணத்தை தருகின்றது - "Bio-Electromagnetism என்பது உயிரிகளின் செல்களில் நிகழும் மின்னூட்ட, மின் காந்த மற்றும் காந்த களம் பற்றி ஆராயும் அறிவியல்.[http://en.wikipedia.org/wiki/Biomagnetism]" அவர்களது ஆய்வுகளின் படி, ஒவ்வொரு செல்லின் மூலக் கூறுகளும் ஒரு ions தொகுப்பாக தன்னை மாற்றிக் கொண்டு electrons ஐ, அதாவது ஆற்றல் துகள்களை வெளியிட்டும் உள்வாங்கியும் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த ஆற்றல் துகள் exchanges தான் ஆற்றல் உள்வாங்கும் மற்றும் வெளியிடும் நிகழ்வாக ஒரு உயிரியில் வெளிக் காட்டப் படுகின்றது.¦nbsp; இந்த ஆற்றல் துகள் பரிமாற்றம் சிறு குடல் செல்களில் நிகழும் போது செறித்தல் என்றும் அதே ஆற்றல் துகள் பரிமாற்றம் மூளை செல்களில் நிகழும் போது 'எண்ணம் எழுதல்' என்றும் அழைக்கப்படுகின்றது. இதை ஒரு சிறு சமன்பாட்டின் மூலம் கற்று விடலாம். நாம் உடலில் உப்பு தாது எப்படி உருவாகின்றது என்று பார்ப்போம்.¦nbsp; சோடியம் என்ற அணு ஒரு ஆற்றல் துகளை [electron] தன்னுடைய வெளிக் கூட்டிலிருந்து குளொரின் என்ற அணுவுக்கு விட்டுத் தருகின்றது - இந்த நிகழ்வே உப்புத் தாது உருவாக காரணமாகின்றது.¦nbsp; ¦nbsp; hydrochloric acid + sodium hydroxide → sodium chloride + water HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H2O(l) H+(aq) + Cl−(aq) + Na+(aq) + OH−(aq) → Na+(aq) + Cl−(aq) + H2O(l) ஆனால் பாருங்கள், அறிவியல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் ஒவ்வொரு வகை துகள் வேண்டும் என்று தேடுகின்றது. வேதாதிரியம் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் இருப்பது ஒரே துகள் தான் என்று வாதிடுக்கின்றது. அந்த துகள் தான் பரம அணு.¦nbsp; ஒரு துகள் அசைந்தாலே அங்கே அது காந்த அலையாக மாறுகின்றது. அப்போது, குளொரின் என்ற அணுவின் வெளிக் கூட்‌டு electron சோடியம் என்ற அணுவுக்கு நகர்ந்தால்? அதாவது, சுழன்று ஓடிக் கொண்டு இருக்கும் ஒரு பரமஅணு ஒரு அணு கூட்டிலிருந்து இன்னொரு அணு கூட்டுக்கு நகர்ந்தால்? காந்த அலையாக, பரம அணு ஒரு அணு கூட்டிலிருந்து இன்னொரு அணு கூட்டுக்கு ஓடுவதாக¦nbsp; பொருள். இந்த ஓட்டம் தான் ஆற்றலை பரிமாற்றம் செய்கின்றது. ஏனென்றால் பரம அணுக்கள் தன்னுடைய சுழல் வேகத்தையும் சுழல்-ஓட்ட நிலையையும் பொறுத்து ஒரு சிறு ஆற்றலை உள்ளடக்கமாக கொண்டுள்ளன. இந்த ஆற்றலை தூக்கிக் கொண்டு ஒரு அணு கூட்டிலிருந்து இன்னொரு அணு கூட்டுக்கு ஓடுவதால் தான் இந்த ஆற்றல்¦nbsp; பரிமாற்றம். இது ஒரு மைக்ரோஸ்க்கோபிக் பார்வை. இதனுடைய மேக்ரோஸ்க்கோபிக் பார்வை என்ன? நம் உடலில் பல மில்லியன் செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லிலும் பல மில்லியன் மூலக் கூறுகள் உள்ளன. ஒவ்வொரு மூலக் கூறிலும் சில ஆற்றல் பரிமாற்றங்கள் எப்பொழுதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆக நம் உடல் முழுவதுமே ஒரு ஆற்றல் களம் தான். நம் உடல் முழுவதுமே பரம அணுக்கள் 1. 'அணுக்களில் சுழன்று ஓடியும்' மேலும் 2. 'மூலக்கூரு களுக்கு இடையே அங்கும் இங்கும் ஓடிய வண்ணமும் தான் உள்ளன' - ஆகவே காந்த அலைகள் உடல் முழுவதும் எப்பொழுதும் பாய்ந்த வண்ணம் தான் உள்ளன.¦nbsp; இப்படி ஓடும் பரம அணுக்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக கருதினால்? அந்த தொகுப்புக்குப் பெயர் தான் நுண் உடல். இதை தான் மகரிஷி அழகாக சொல்வார் "நம் உடல் முழுவதுமே ஆகாஷ் துகள்கள் சுழன்று ஓடிக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த துகள்களின் தொகுப்பே நுண் உடல் - இந்த ஆகாஷ் துகள்களின் இத்தகைய ஓட்டம் தான் உயிர் சக்தி அல்லது உயிர்." இப்படி ஓடிக் கொண்டே இருக்கும் அனைத்து துகள்களும் சுத்த வெளியில் பரவ முயற்சிக்கும். அதாவது உடலை விட்டு அலைகளாக விலகி ஓட முயற்சிக்கும் - இவைகளின் ஓட்டம் அதிர்ந்து அதிர்ந்து அழுத்தும் சுத்த வெளியால் தடுக்கப் படுகின்றது. சுத்த வெளி இவைகளை நெருக்குவதால் அங்கே ஒரு சுழல் இயக்க நிலை தோன்றுகின்றது. இந்த சுழல் இயக்க நிலை தான் மகரிஷியால் 'துல்ளிய சம தள சீர்மை ஆற்றல்"¦nbsp; என்று அழைக்கப் படுகின்றது. இந்த சுழல் இயக்கம் அந்த அலைகளை ஒரு மையம் நோக்கி சுழன்று அடைய செய்கின்றது. அந்த மையத்தில் அலைகள் நெருக்கமுற்று ஒரு அலைக் கூட்டமாக மாறுகின்றன - இந்த அலை கூட்டமே அல்லது wave packet / wave cluster ஏ நமது ஆன்மா.

Monday, July 30, 2007

மனிதனும் தெய்வமும்

இருப்புநிலை இறைவெளியாம் ஈர்ப்பு ஆற்றலாகும்
இயக்கம் அதன் நுண்பகுதி எதிர்த்து தள்ளும் ஆற்றல்
கருப்பொருளாம் இவ்விரண்டும் காந்தம் என்ப தாச்சு
காணுகின்றோம் பேரியக்க களத்தில் உயிர்வகையில்
திருப்பொருளாய் இயங்கும் மனம் தேர்ந்து இறையுணர
தெய்வம் ஈர்ப்பு அறிவாயும் அதன் திணிவே அலையாய்
விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் உணரும் மனம் அறிவோம்
வேண்டல் வளம் கண்டு வினை விளைவறிந்து வாழ்வோம்.

அஞ்சுவதேன் துணிந்து சொல்வோம் அறிவது நான் தெய்வம் அதுவேதான் வான்காந்தம் அகண்டமண்டலத்தில் பஞ்சமிலா விண்மையப் பகுதி இறை அறிவாம் படர்க்கைநிலை மனம் அது நாம் பகரும் சீவகாந்தம் வஞ்சமிலா சிவகாந்தம் வான் காந்தம் இரண்டே வாழ்உயிர்கள் வான்கோள்கள் வளம் ஒழுங்கு காக்கும் பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகிக்கொண்ட மனிதன் பரவசமாய் இன்பமுறப் பாடினேன் இவ்வுண்மை.

ஆன்மீகப் பயிற்சியின் பயன்

நாமே முதலில் ஆன்மீகப் பயிற்சியில் விளையும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிறர் வினாவுக்குத் தெளிவான பதிலளித்து மனநிறைவு பெறலாம். திருப்தியான பதிலை அனுபவபூர்வமாக, அறிவின் தெளிவோடு அளிக்க முடியவில்லையெனில் நமக்கே சோர்வு உண்டாகிவிடும். இத்தகைய சோர்வினால் பயிற்சியைக் கைவிட்டு விடுபவர்கள் பலர். இந்தக் குழப்பமும் நட்டமும் ஏற்படாதிருக்கவும் கேள்வி கேட்போருக்கு மனத் தெளிவோடும் உறுதியோடும் பதில் சொல்லவும் இங்கு ஆன்மீகப் பயிற்சியின் நல்விளைவுகளை விளக்கிக் கூறுகிறேன். 1. முறையான உடற்பயிற்சியினால் நோய் வராமல் காத்துக் கொள்ளுகிறோம். உள்ள நோய்களும் காலத்தால் குணமாகின்றன. குறைந்தபட்சம் கொடுமை குறைகிறது. 2. மனிதனின் உடலை விட முக்கியமான பொருள் உயிர். அது விஞ்ஞானக் கருவிக்கும் எட்டாதது. அவ்வளவு நுண்மையானது. அந்த உயிரை உணர்வாகப் பெறுகிறோம். தீட்சையின் முதல் நாளன்றே உயிர்மேல் மனம் வைத்து ஒன்றி ஒன்றிப் பழகி வர, அறிவு நுண்மையும், கூர்மையும் பெறுகிறது. பயிற்சியால், அறிவு பெறும் உறுதி, நுட்பம், ஆற்றல் இவை வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் வெற்றியடையச் செய்கிறது. 3 அகத்தாய்வுப் பயிற்சியினால் எண்ணத்தின் தன்மையும் தன் முனைப்பால் அறிவு திசை மாறி பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ஆகிய ஆறு குணங்களாக அவ்வப்போது மாறுவதும் அந்த உணர்ச்சி வயப்பட்ட குணங்களின் வழியே செயல்புரிய அவற்றால் தனக்கும் பிறர்க்கும் ஏற்படும் தீய விளைவுகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது. அடுத்துப் பயிலும் ஆசைச் சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலையொழித்தல் ஆகிய பயிற்சிகள் முறையாகப் பழகும்போது மனிதன் மனிதத் தன்மையோடு அமைதியும், இன்பமும் காத்து வாழ முடிகிறது.

உணவும் எண்ணமும்

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்

எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்

எண்ணமோ உணவில் எழுச்சிபெறும் இயக்கமே

உண்பதோ எண்ணத்தால் உற்றுப்பார் உறவையறி

Master Course

I attended Master course in SKY meditation. This was my dream for past 3 years.It was simply amazing.I should say my responsibility increased.weather was too cool in aliyar.

Tuesday, July 24, 2007

குரு தானாக வருவார்

நாம் அறிவு வளர்ச்சி பெற்று சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கின்றவரையிலே இந்த ஐந்து புலன்களிலேயே இயங்கி நாம் எதைப் பார்க்கின்றோமோ அதனுடைய பதிவு அதிலே ஏற்படக்கூடிய இன்ப துன்பப் பதிவுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகையினால் அந்த மெய்ப்பொருளாக உள்ள ஆதி நிலையானது அறிவுக்குப் பிடிபடவில்லை. நாம் எங்கேயிருந்து வந்தோம், எதற்காகப் பிறந்திருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வரவில்லை. சூதாட்டத்தில் இறங்கிவிட்ட ஒருவனுக்கு, அந்த மயக்கத்திலே செயல்பட்டுக்கொண்டு இருக்கக்கூடிய ஒருவனுக்கு, எப்படிக் குடும்பத்தைப் பற்றியோ லாப நஷ்டத்தைப் பற்றியோ எண்ணம் வராதோ, அதுபோல இந்த இன்ப துன்பம் என்ற ஒரு சூதாட்டத்திலே நம்மைப் பற்றியே நினைப்பே எழுவதில்லை. இந்த இடத்திலேதான் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு, குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. இங்கே ஒரு கேள்வி ? குரு என்றால் யார் ? குரு என்றால் அவர் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும், தேடி இருக்க வேண்டும். நான் பிறந்து வந்துள்ளேனே, என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டும், என்று இவனாக நினைத்திருந்தாலும் சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி, அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்துவிடும். வெளியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதைவிட, ஒரு மனிதனுடைய கர்மா, அவனுடைய செயல், அவனுடைய சிந்தனை, அவனுடைய தெளிவு, அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்துவிடும் காலத்தாலே. அதுவே குருவையும் கொண்டுவந்து கொடுத்துவிடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை, சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் துõண்டிவிடுகிறது.

Thursday, May 31, 2007

பிரம்மச்சரியமும் ஞானமும்

எப்போதும், ஆண் - பெண் உடலிணைப்பே இல்லாமல் வாழ்வது பிரம்மச்சரியம் என்று தவறாகக் கருதப்படுகிறது. இந்த வைராக்யம் கொண்டவர்கள் மிகவும் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நீங்கள் கருத வேண்டாம் என்று உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உலகமீது உருவாகி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் அனைவரும் இந்த விரதம் கெட்டபோது தான் உற்பத்தியானார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். உலக உத்தமர்கள், ஞானிகள், தீர்க்க தரிசிகள், அனைவரும் பிரம்மச்சரியம் கெட்டவிடத்தில் தான் தோன்றினார்கள்; ஆண் - பெண் நட்புடன் ஒழுக்கத்துடன், வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் என்று உதாரணம் காட்டுகிறேன். வயது வரும் வரையில் கட்டுப்பாடாக இருந்து, பின்னர் ஒழுக்கத்துடன் திருமணம் செய்து கொண்டு, அளவு முறையுடன் உடல் கலப்புக் கொண்டு வாழ்வதையே நல்ல கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறேன்.

குரு சீடர் உறவு--அன்பின் அதிர்வலை!

அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக! உலகத்தில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன்னுள் அடக்கி மறைபொருளாக நிறைந்து கொண்டு வழி நடத்தும் இறையாற்றலோடு இணைந்து இருக்கும் குரு நாதருக்கு என்றென்றும் சரணங்கள்! உலகில் நிகழும் எண்ணற்ற நிகழ்வு, நாம் மனத்தைக்கொண்டு தான் செய்கிறோம்! எந்த நிகழ்வு நிகழ வேண்டும் என்று தீர்மானிப்பது இறை நிலை ஒன்றே தான்! அதனால் தான் நம் குரு நாதர் செயல் விளைவு தத்துவத்தை நமக்கு நன்றாக விளக்கினார்கள்! கடை பிடிக்கவும் செய்தார்கள்! நாம் சில நேரங்களில் நிகழ்வதை ஏற்கவோ, ஜீரணிக்கவோ இயலாத தருணம் வரும் போது என்ன செய்வது? நம்மை புண்படுத்துகிற மாதிரி செயல் செய்பவர்கள் எல்லாம் எல்லா வசதிகளை பெற்று வாழ்கிறார்களே! என்றெல்லாம் நமக்கு தோன்றும்! உலகத்தை மாயை என்போம்! அது தரும் வசதி வாய்ப்பு அனைத்தும் கூட மாயை தான்! ஏனெனில் தனக்கு முழுமை தருவதற்காகவே ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு என்று ஒரு செயலை செய்து வருகிறார்!இதில் நாம் அறிய வேண்டியது என்னவெனில் நாம் எப்படி இருக்க வேண்டியது என்பது மட்டும் தான்! என்ன தான் வாழ்க்கையில் அவரவர் செயல் செய்து வசதிகளை அனுபவித்தாலும் அவர்களும் தனக்கு முழுமை தரும் பாதை இது தான் என்று தானே செயல்களை துணிந்து செய்கிறார்கள்? மற்றவர் செயல்களை பார்த்து நாம் ஏன் கலங்க வேண்டும்? செயலுக்கு விளைவு என்று இறை நிலை அவரவருக்கு செய்ய வேண்டியதை காலத்தோடு செய்யும் போது நாம் ஏன் பிறர் செயல்களை நோக்க வேண்டும்? எல்லாம் வல்ல குருவின் ஆற்றலானது தீயவைகளை தடுத்து நம்மை வழி நடத்துமா? நிச்சயமாக...வழி நடத்தும்! ஏனெனில் Fraction demands Totality supplies!! என்பது தான் நம் குரு நாதர் நமக்கு சொல்வது! எப்போதெல்லாம் நம்மை தாண்டி சில செயல்கள் நமக்கு நிகழ்கிறதோ அப்போதே நாம் அந்த நிகழ்வுகளை களைய முயற்ச்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது! நம் கட்டுப்பாட்டில் இல்லாத விசயங்களை இயற்கையிடம் தந்து விடுவது நமக்கு நல்லது! புத்தர் பிறந்த போது அவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்கள் கணித்தார்கள் ! முதல் ஜோதிடர்... மூன்று என்று கையை உயர்த்தினார்! இரண்டாம் ஜோதிடர்... இரண்டு என்று கையை உயர்த்தினார்! மூன்றாம் ஜோதிடர் ... ஒன்று என்று கையை உயர்த்தினார்! இதை அறிய ஆவல் கொண்ட மன்னன்... முதல் ஜோதிடரை கேட்டார்... அவர் சொன்னது .... 1. குழந்தை புகழ் பெற்று மக்களை ஆளும் . 2. அதிகாரம் மிகுந்து நாடு முழுவது புகழ் பெற்று ஓங்கும் 3. துறவறம் மேற்கொண்டு மக்களை வழி நடத்தும்! இரண்டாம் ஜோதிடர்.... 1. புகழ் பெற்று நாட்டை ஆளும் 2. துறவறம் மேற்கொள்ளும்.மூன்றாம் ஜோதிடர் சொன்ன ஒரே கருத்து.... 1. நாட்டை விட துறவறம் மேற்கொண்டு நல்ல ஞானம் பெறும் என்பது தான்! இந்த மூன்றாம் ஜோதிடரின் ஆணித்தரமான கருத்து மன்னனை நிலைகுலைய வைத்தது... அவர் மீது கோபம் கொண்ட அரசன் அந்த ஜோதிடரை சிறையில் அடைத்தார்! இருப்பினும் முதல் ஜோதிடரின் ஆலோசனையின் படி சித்தார்த்தனை வெளி உலகை அறியாத படி வளர்த்தார் மன்னர்! ஒரு கணத்தில் வெளி உலகையும் அதில் நிலவும் செயல்களும் சித்தார்த்தனுக்கு தான் வாழ்ந்த வாழ்வே ஒரு மாயை தான் என்று உணர நாட்டை விட்டு காட்டை நோக்கி தப்பி ஓடினார்! ஞானம் பெற்ற பிறகே அவர் சீடர்களுடன் காவி உடை அணிந்து அவரின் நாட்டில் நுழைந்தாராம்! இந்த நிகழ்வை நாம் அறிவோம்! இதில் நாம் பார்க்க வேண்டியது... சித்தார்த்தன் துறவறம் தான் மேற்கொள்ளுவான் என்று உண்மையை ஆனித்தரமாக சொல்லியதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடரின் நிலை தான்! அந்த உண்மையை யாரும் ஏற்க வில்லை! யாரும் நம்பவில்லை! ஆனால் அது தானே நடந்தது? உலகில் ஒரு மகான் தோன்றுகிறார் எனில் அதற்க்கு எண்ணற்ற மக்களின் எண்ண அலைகள் தான் காரணமாக இருக்கிறது!தனி மனித அமைதியின் மூலம் உலகம் அமைதியை அடையும் என்று உண்மையை சொன்ன குரு நாதரின் முயற்ச்சியும் ஆசிர்வாதங்களும் சீடர்களாகிய நமக்கு சூக்கும நிலையிலும் கருமையத்தோடு இணைந்தும் வழி நடத்துகிறார்! குருவின் ஆற்றல் ஆனது நம்மை நிச்சயம் வழி நடத்தும். ஆனால் நாம் அந்த ஆசிகளை பெறும் நிலையில் இருக்க வேண்டும்! அமைதியில் இருந்தால் தான் உணர்வுகளை அறிய முடியும்! நம்மை புண்படுத்தும் அன்பர்கள் இருப்பினும் அவர்களையும் நாம் வாழ்த்தியாக வேண்டும்! அப்போது தான் நாம் குருவின் வழியில் வாழ முடியும்! தவத்துணையால் உயர்ந்தார்கள் தனைக்காத்தோர் நலம் செய்தோர் தாய் தந்தை குரு தனியே காப்பின்றி இருப்போர்கள் சிவத்தறிஞர் இவர்கட்கு சிறிதோ பெறிதோ துன்பம் சிந்தனையற்றோர் தந்து மனவருத்தம் விளைவித்தால் பவத்தின் பலன் அவ்வருத்த அலை மோதி அவ்வேகம் பழி செய்தோர் உடல்காந்தம் உயிர்மூளை கேடு செய்யும் அவத்தின் விளைவவருக்கு அகண்ட வான்காந்தமும் அரும் நண்பர் அனைத்து பொருள் அவர்வாழ்வில் எதிர்ப்பாகும்! இந்தக்கவியில் குரு நாதர் சொல்வதை பார்க்கும் போது, எவரும், தவம் செய்பவர்களுக்கும் தவத்தில் உயர்ந்த ஞானிகளுக்கும் துன்பமோ மன வருத்தம் ஏற்படாதவாறு வாழ வேண்டும் என்று விவரிக்கிறது! எதிரியையும் நாம் வாழ்த்த வேண்டும் என்று நம் குரு நாதர் சொன்னது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெளிவாகிறது! நாம் மனத்தை இறை நிலையில் செலுத்திக்கொண்ட நம் கடமையை தொடர்வோம்! எந்த தவறு செய்தாலும் எவருக்கும் இறை நிலையானது செயல் விளைவு தத்துவத்தின் படி தன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால் நாம் அனைவரும் குருவின் ஆற்றலோடு அவரின் வழிக்காட்டுதலை நெறியை கொண்டு செம்மையாக வாழ்வோம்! இறை நிலையின் தன்மையான கருணை நிலையில் இருந்து அன்பின் அதிர்வலைகளை அனைத்து உயிர்களுக்கும் செலுத்திக்கொண்டே இருப்போம்! வாழ்க வளமுடன்!

குரு சீடர் உறவு--குரு என்ற கருணை நிலை!

அன்புள்ள நண்பர்களே எல்லாம் வல்ல குரு அருளின் துணையுடன் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வாழ்க வளமுடன். அன்பு என்றால் என்ன? இறை நிலை கருணை நிலையானதா? இறை நிலை -இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா? இப்படி நாம் பல கேள்விகளை கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம்! உண்மையில் நாம் கேள்வியில் நிலைத்தால் அது அறிவிற்க்கு அசைவே ஆகும். எல்லா கேள்விகளையும் கேட்கும் நாம் அந்த கேள்விக்கான பதில்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் அதற்க்கு நாம் தயாராக வேண்டும்! உதாரணத்திற்க்கு, எப்படி நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் எனில் நீரில் இறங்கித்தான் ஆக வேண்டுமோ அது போலத்தான் ! வெறும் கேள்வி- ஞானம் என்பது நீச்சல் அடிக்க உதவாதோ அது போலத்தான் இறை நிலையை பற்றி அறிய கேள்விகள் மட்டும் உதவாது! விரக்தி தான் மிஞ்சும்! எந்த விவாதங்கள் எதற்க்கு உதவும் என்பதை அறிவது கூட நமக்கு பல விசயங்களை கற்றுக்கொடுக்கும்! நம் குரு நாதர் சொன்ன மாதிரி, நாம் எந்த மன நிலையில் இருக்கிறோம் என்பதை அறிவது மிக முக்கியம்! நம் குரு நாதர் சொன்ன மாதிரி, இறை நிலை அடைய விரும்பாமை கூட நாம் இறைனிலையில் இல்லாததற்க்கு ஒரு காரணம் தான்! அடைய விரும்பாத ஒரு விசயத்திற்க்காக, கற்றுக்கொள்ள விரும்பா ஒரு விசயத்திற்க்காக நாம் மணிக்கணக்கில் விவாதிக்கிறோமா? உண்மையிலேயே நாம் இறை நிலையின் தன்மையை ஏற்றுக்கொள்ளத்தயாரா? இருப்பு நிலையில் மனதை செலுத்தினால் நாம் அதன் தன்மையை ஏற்கும் நிலையில் நாம் இல்லை என்று தெரிய வரும்! இவற்றை ஏன் எழுதுகிறேன் என்றால்... நாம் இறை நிலையையோ அல்லது இறை வடிவான குருவிடம் உலக, சமூகக்குறைகளை தெரிவித்துக்கொண்டே தான் இருக்கிறோம் என்பதால்! சரி..... இறைனிலை என்பது இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா அல்லது அன்பும் கருணையுமானதா? இறை நிலையில் நம் மனதை வைத்து தியானிக்கும் போது நாம் மெல்ல மெல்ல அசையா நிலைக்குச் செல்ல நேரும். அப்போது தான் கேள்வி என்பது மௌனத்தில் இருந்து வருவது என்பதும், கேள்வி என்பது எண்ணமாக வடிவம் பெறுவதும் புரியும்! ஆக எண்ணம் என்பது தான் மௌனத்தில் நாம் அசைவதை உணர்த்துகிறது!எண்ணம் தான் நமக்கு முக்கியம் எனில் நாம் அசையா நிலையை அடைந்து அதுவாக ஆக வேண்டும் என்ற நிலையில் இல்லை என்பது தெளிவு! இருப்பு நிலை என்பதை மனது அறிய முயற்ச்சிக்கும் போது, மெல்ல எண்ணமற்ற, கேள்வியற்ற நிலையை அடையும். அப்போது இருப்பு நிலையின் தன்மையாக மனது வடிவெடுக்கும். பூரண அமைதியை நோக்கி செல்லும் போது மனது இருப்பு நிலையில் சென்று ஒடுங்கிப்போகும்! அப்போது இறைனிலையின் தன்மையே மிஞ்சும்! மனதோ கேள்வியை கடந்திருக்கும்! இறை நிலை முழுமையான ஈர்ப்பு நிலை என்று அப்போது பூரண அறிவு சொல்லும்! இவை எல்லாம் அனுபவங்களாக தெரியும் போது மட்டும் தான் நம் அறிவிற்க்குள் நிலைக்கும்! இறைனிலை என்பது இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா என்றால் ஆமாம்.... இறை நிலை அடையும் வழியில் நம் ஆன்மாவை சுற்றி நாம் கட்டியிருக்கும் எண்ணற்ற கட்டுக்களை அறுத்து எறிய நம்மிடம் அனுமதி கேட்கும்! இறை நிலை என்பது உறக்க நிலை அல்ல! அதன் மீது கொண்டுள்ள பற்று மட்டும் தான் மற்ற எல்லா பற்றுக்களையும் விடும் அனுமதியை நாம் தரும் பாக்கியம் பெறுவோம்!குருவின் மேல், இறை நிலையின் மேல் அன்பு இருந்தால் மட்டுமே அந்த அனுமதி நமக்குக்கேட்கும்!குருவின் முன் எல்லாவற்றையும் உதறிவிடும் போது நம் அறிவு விரியும் நிலையை எய்தும்! அப்பேற்ப்பட்ட அறிவு என்பதை விளக்க நேரும் போது, அன்பு என்ற வார்த்தையை மட்டும் தான் சொல்ல முடியும்! ஆனால் அதுவே பற்றுக்களை நெறித்த இடம்! எல்லா பற்றுக்களை விட்டு விட்டு நிர்மூலமாக விரிந்து விளங்கும் அறிவாக இருக்கும் நிலையில் உறக்கத்திற்க்கு இடமேது? அதுவே தான் பூரண விழிப்பு நிலை! அந்த நிலையில் நாம் குருவோடு இணைந்திருக்கும் போது நமக்கு உலகம் என்றும் உணர்ச்சி என்றும் வேறு எந்த நிலையும் அண்ட முடியாது போகும்! குருவின் முன் எனக்கு ஏற்படும் உணர்வுகளையும் வீசி எறிந்து விடுகின்றேன்! அப்பா! உலகம் என்று எனக்கு எதுவுமில்லை! இன்பம் துன்பம் என்ற உணர்வு எதுவுமில்லை! வாழ்க்கை என்ற போராட்டத்தில் நீந்தும் என்னைப்போன்ற பிள்ளைகளை எப்போதும் தாயைப்போல அரவணைக்கும் குருவே, உங்களிடம் கேள்வி கேட்டு, என்னை அசையவைத்து உங்களிடம் இருந்து என்னை பிரிக்காத வரம் வேண்டும்! உங்களை அண்டும் போதெல்லாம் என்னை ஆட்கொள்ளும் தூய சத்குருவே! சொல்லிலடங்கா உணர்வுகளை புரிய வைக்கும் ஆனந்தமான வடிவம் நீங்களன்றோ! உங்கள் கருணை நிலையை என்னவென்று சொல்வேன்? வார்த்தைகள் மீதமில்லையே! குருவே சரணம்! வாழ்க வளமுடன்!

குரு சீடர் உறவு--குரு என்ற தாய்மை!

வாழ்க வளமுடன்அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக! வாழ்க வளமுடன்!எங்கும் நிறைவாக இருக்கும் நிலையான இறை நிலையுடன் எப்போதும் உறைந்திருக்கும் குருவின் பாதத்தில் சரணடைதலை சமர்ப்பிக்கிறேன்.இந்த உலகம் நிறைவாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று எப்படி அறிவது?உலகமென்பது நமக்கு நம் மனதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.எல்லாமே நிறைவாக இருக்கிறதா? என்று நமக்கு என்றும் ஒரு கேள்வி எழவே செய்கிறது! இதற்கு காரணம் ஆராய்கையில் நமது மனதில் இருக்கும் அசைவுதான் முதலாக இருக்கிறது! இந்த உலகம் நிறைவாக இருக்கிறதா? என்பது நாம் நிறைவாக இருக்கிறோமா? என்றைய கேள்வியின் மறு முனை! நாம் முதலில் நிறைவாக இருக்கிறோமா என்று நாம் அறிய வேண்டும்! எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும் எனில் நாம் என்ன செய்ய வேண்டும்? நிறைவான நிலையுடன் இணைய வேண்டும்! நிறைவாக விளங்கும் குருனாதரிடம் சரணடைய வேண்டும்! எல்லாம் நிறைவாகவே தான் இருக்கிறது என்ற அமைதியானது நமக்கு உணர்வாக வேண்டும்! நமது மனமானது எதனை நோக்கி இருக்கிறது என்ற புரிந்து கொள்ளல் நமக்கு அவசியம் வேண்டும்! குருனாதரின் மலரடியான இறைனிலையில் நாம் லயித்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் அவரவர் அளவில் சரியாக இருக்கிறோம்! ஆனால் அனைவரின் ஆற்றலுக்கும் அனைத்துக்கும் மூலமான இறைனிலை என்ற சரியான வழியில் நாம் இருக்கிறோமா என்று நாம் ஆராய வேண்டும்! நமக்கு மட்டும் நாம் சரியாக இல்லாமல், நமது மனதிற்கு மூலமான இறைனிலையோடு இணைந்து, நம்மை நாம் ஆராய்கையில் நமக்கு எந்த தவறும் எந்த குழப்பமும் இல்லாத நிலையை அடைந்திருப்போம்! அந்த நிலையில் மனமானது, நமக்கு நிகழும் எதற்க்கும் காரணம் செயல் விளைவு என்றாகிய தெய்வ திருச்சட்டம் தான் என்று புரிந்து அமைதியை அடைந்து இருக்கும்! "என் வாழ்வில் எனக்கு அமைதியே இல்லை" என்று நிற்கின்ற அனைவருக்கும் இறைவனின் திருச்சட்டமாகிய செயல் விளைவை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்து விடும்! எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் நமக்கு என்றும் அமைதி தான்! எப்படி எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது? அது தான் நிறைவு! " நிறைவு" என்பதை சொல்வது யார்? எது? ஏன்? நிறைவு என்பதை உணர்வது ஆறாவது அறிவாகிய "மனது". நிறைவு என்பது மனதின் மூலமாகிய அந்த "பேரறிவு"! இறைவன் என்றதும் நாம் உணர வேண்டியதை வார்த்தையாகச்சொன்னால் அது தான் " நிறைவு" ! ஏன் எனில் நிறைவு தான் எப்போதும் இருக்கிறது! இந்த உலகம் சரியாகத்தான் போகும்! நிறைவின்றி வேறு ஏது இறை நிலையின் தன்மையாக நமக்கு சொல்வதற்க்கு இருக்கும்? எண்ணற்ற விசயங்கள் இதற்க்கு எதிராக இருக்கிறது! முதலில் இந்த சமுதாயம், இந்த உலகம் அமைதியாக இல்லை. சுற்றி இருக்கும் எதுவும் சரியாக இல்லை என்ற நிலை நமக்கு முன்! ஆனால்....இதை எல்லாம் நமக்கு சொல்லும் மனதானது, நடப்பதை செயல் விளைவாக ஏற்காத தன்மையுடன் இருக்கிறது! இதை நாம் தன்முனைப்பு என்றும் சொல்லலாம்! ஆனால் மறைவாக இருக்கும் உண்மை எதுவெனில், ஏற்றுக்கொள்ளாத நிலை என்பது "சரணடையாத" நிலை! சரணடைதல் என்பது, எதையும் ஏற்கிற தன்மை தான்! எதையும் மனதால் நாம் எதிர்க்கும் வரை தான் அது நம் முன் நிற்கும்! நிறைவான இறை நிலையுடன் நாம் நிறைந்து நிற்கும் பழக்கம் பெற்றால் நமக்கு எதிலும் என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு வந்து விடும்! அந்த சரணடைதலுக்குத்தான் நமக்கு " குரு" என்ற தாய்மை தேவைப்படுகிறது! தாயிடம் தஞ்சம் புகும் பிள்ளைக்கு எப்படி தேவையானதை தருகிறாளோ, அது போலத்தான் குருவின் கருணையும்! குருவின் முன் " உள்ள " சரணாகதி தான் நமக்கு எல்லாவற்றையும் உணர வைக்கும்! "உள்ள" சரணாகதி எல்லாவற்றையும் தரும் என்றால் எதிர்ப்பார்ப்பு ஆகிவிடாதா?........என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும்! குருவானவரின் முன் நிற்கின்ற சீடனுக்குத்தான், செயல் விளைவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் இறைவன் எல்லாவற்றையும் முறையாக நடத்துகிறான் என்ற உணர்வு மிஞ்சி நிற்கிறது! அந்த பாக்கியம் பெறும் சீடன் எப்போதும், தாயின் மடியில் தலையை சாய்த்து ஆனந்தம் பெறுகிறான்! இறை நிலையின் தன்மையாய் தான் எந்த நிகழ்வும் நடக்கிறது என்ற தன்மை நமக்கு வரவேண்டும்! இறை நிலையை தாண்டி எதுவும் நிகழ வாய்ப்பில்லை! இயற்கைக்குள் எல்லாம் அடங்கிப்போகும்! இயற்கையைத்தாண்டி எதுவும் நிகழாத வகையில் இயற்கை சக்தியுடன் எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது! எல்லாம் சரியாக நிறைவாகவே இருக்கிறது என்ற பேருண்மையை நாம் உணர இறை நிலை தவத்தில் குருவின் ஆனந்தத்தில் உறைய வேண்டும்! குரு என்ற தாய்மையிடம் நாம் முழுவதுமாக சரணடைவோம்! தாயிடம் சரணடைந்த எண்ணற்ற புதல்வர்களில் நாமும் ஒருவராக மாறுவோம்! தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவும் பெறும் வண்ணம் நின்னை சரணடைந்தேன்!என்ற பாரதியின் வரியாய் நம் தாயிடம் சரணடைவோம்!வாழ்க வளமுடன்!

Tuesday, May 29, 2007

குரு சீடர் உறவு--அன்பின் அதிர்வலை!

உலகத்தில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன்னுள் அடக்கி மறைபொருளாக நிறைந்து கொண்டு வழி நடத்தும் இறையாற்றலோடு இணைந்து இருக்கும் குரு நாதருக்கு என்றென்றும் சரணங்கள்! உலகில் நிகழும் எண்ணற்ற நிகழ்வு, நாம் மனத்தைக்கொண்டு தான் செய்கிறோம்! எந்த நிகழ்வு நிகழ வேண்டும் என்று தீர்மானிப்பது இறை நிலை ஒன்றே தான்! அதனால் தான் நம் குரு நாதர் செயல் விளைவு தத்துவத்தை நமக்கு நன்றாக விளக்கினார்கள்! கடை பிடிக்கவும் செய்தார்கள்! நாம் சில நேரங்களில் நிகழ்வதை ஏற்கவோ, ஜீரணிக்கவோ இயலாத தருணம் வரும் போது என்ன செய்வது? நம்மை புண்படுத்துகிற மாதிரி செயல் செய்பவர்கள் எல்லாம் எல்லா வசதிகளை பெற்று வாழ்கிறார்களே! என்றெல்லாம் நமக்கு தோன்றும்! உலகத்தை மாயை என்போம்! அது தரும் வசதி வாய்ப்பு அனைத்தும் கூட மாயை தான்! ஏனெனில் தனக்கு முழுமை தருவதற்காகவே ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு என்று ஒரு செயலை செய்து வருகிறார்!இதில் நாம் அறிய வேண்டியது என்னவெனில் நாம் எப்படி இருக்க வேண்டியது என்பது மட்டும் தான்! என்ன தான் வாழ்க்கையில் அவரவர் செயல் செய்து வசதிகளை அனுபவித்தாலும் அவர்களும் தனக்கு முழுமை தரும் பாதை இது தான் என்று தானே செயல்களை துணிந்து செய்கிறார்கள்? மற்றவர் செயல்களை பார்த்து நாம் ஏன் கலங்க வேண்டும்? செயலுக்கு விளைவு என்று இறை நிலை அவரவருக்கு செய்ய வேண்டியதை காலத்தோடு செய்யும் போது நாம் ஏன் பிறர் செயல்களை நோக்க வேண்டும்? எல்லாம் வல்ல குருவின் ஆற்றலானது தீயவைகளை தடுத்து நம்மை வழி நடத்துமா? நிச்சயமாக...வழி நடத்தும்! ஏனெனில் Fraction demands Totality supplies!! என்பது தான் நம் குரு நாதர் நமக்கு சொல்வது! எப்போதெல்லாம் நம்மை தாண்டி சில செயல்கள் நமக்கு நிகழ்கிறதோ அப்போதே நாம் அந்த நிகழ்வுகளை களைய முயற்ச்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது! நம் கட்டுப்பாட்டில் இல்லாத விசயங்களை இயற்கையிடம் தந்து விடுவது நமக்கு நல்லது! புத்தர் பிறந்த போது அவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்கள் கணித்தார்கள் ! முதல் ஜோதிடர்... மூன்று என்று கையை உயர்த்தினார்! இரண்டாம் ஜோதிடர்... இரண்டு என்று கையை உயர்த்தினார்! மூன்றாம் ஜோதிடர் ... ஒன்று என்று கையை உயர்த்தினார்! இதை அறிய ஆவல் கொண்ட மன்னன்... முதல் ஜோதிடரை கேட்டார்... அவர் சொன்னது .... 1. குழந்தை புகழ் பெற்று மக்களை ஆளும் . 2. அதிகாரம் மிகுந்து நாடு முழுவது புகழ் பெற்று ஓங்கும் 3. துறவறம் மேற்கொண்டு மக்களை வழி நடத்தும்! இரண்டாம் ஜோதிடர்.... 1. புகழ் பெற்று நாட்டை ஆளும் 2. துறவறம் மேற்கொள்ளும்.மூன்றாம் ஜோதிடர் சொன்ன ஒரே கருத்து.... 1. நாட்டை விட துறவறம் மேற்கொண்டு நல்ல ஞானம் பெறும் என்பது தான்! இந்த மூன்றாம் ஜோதிடரின் ஆணித்தரமான கருத்து மன்னனை நிலைகுலைய வைத்தது... அவர் மீது கோபம் கொண்ட அரசன் அந்த ஜோதிடரை சிறையில் அடைத்தார்! இருப்பினும் முதல் ஜோதிடரின் ஆலோசனையின் படி சித்தார்த்தனை வெளி உலகை அறியாத படி வளர்த்தார் மன்னர்! ஒரு கணத்தில் வெளி உலகையும் அதில் நிலவும் செயல்களும் சித்தார்த்தனுக்கு தான் வாழ்ந்த வாழ்வே ஒரு மாயை தான் என்று உணர நாட்டை விட்டு காட்டை நோக்கி தப்பி ஓடினார்! ஞானம் பெற்ற பிறகே அவர் சீடர்களுடன் காவி உடை அணிந்து அவரின் நாட்டில் நுழைந்தாராம்! இந்த நிகழ்வை நாம் அறிவோம்! இதில் நாம் பார்க்க வேண்டியது... சித்தார்த்தன் துறவறம் தான் மேற்கொள்ளுவான் என்று உண்மையை ஆனித்தரமாக சொல்லியதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடரின் நிலை தான்! அந்த உண்மையை யாரும் ஏற்க வில்லை! யாரும் நம்பவில்லை! ஆனால் அது தானே நடந்தது? உலகில் ஒரு மகான் தோன்றுகிறார் எனில் அதற்க்கு எண்ணற்ற மக்களின் எண்ண அலைகள் தான் காரணமாக இருக்கிறது!தனி மனித அமைதியின் மூலம் உலகம் அமைதியை அடையும் என்று உண்மையை சொன்ன குரு நாதரின் முயற்ச்சியும் ஆசிர்வாதங்களும் சீடர்களாகிய நமக்கு சூக்கும நிலையிலும் கருமையத்தோடு இணைந்தும் வழி நடத்துகிறார்! குருவின் ஆற்றல் ஆனது நம்மை நிச்சயம் வழி நடத்தும். ஆனால் நாம் அந்த ஆசிகளை பெறும் நிலையில் இருக்க வேண்டும்! அமைதியில் இருந்தால் தான் உணர்வுகளை அறிய முடியும்! நம்மை புண்படுத்தும் அன்பர்கள் இருப்பினும் அவர்களையும் நாம் வாழ்த்தியாக வேண்டும்! அப்போது தான் நாம் குருவின் வழியில் வாழ முடியும்! தவத்துணையால் உயர்ந்தார்கள் தனைக்காத்தோர் நலம் செய்தோர் தாய் தந்தை குரு தனியே காப்பின்றி இருப்போர்கள் சிவத்தறிஞர் இவர்கட்கு சிறிதோ பெறிதோ துன்பம் சிந்தனையற்றோர் தந்து மனவருத்தம் விளைவித்தால் பவத்தின் பலன் அவ்வருத்த அலை மோதி அவ்வேகம் பழி செய்தோர் உடல்காந்தம் உயிர்மூளை கேடு செய்யும் அவத்தின் விளைவவருக்கு அகண்ட வான்காந்தமும் அரும் நண்பர் அனைத்து பொருள் அவர்வாழ்வில் எதிர்ப்பாகும்! இந்தக்கவியில் குரு நாதர் சொல்வதை பார்க்கும் போது, எவரும், தவம் செய்பவர்களுக்கும் தவத்தில் உயர்ந்த ஞானிகளுக்கும் துன்பமோ மன வருத்தம் ஏற்படாதவாறு வாழ வேண்டும் என்று விவரிக்கிறது! எதிரியையும் நாம் வாழ்த்த வேண்டும் என்று நம் குரு நாதர் சொன்னது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெளிவாகிறது! நாம் மனத்தை இறை நிலையில் செலுத்திக்கொண்ட நம் கடமையை தொடர்வோம்! எந்த தவறு செய்தாலும் எவருக்கும் இறை நிலையானது செயல் விளைவு தத்துவத்தின் படி தன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால் நாம் அனைவரும் குருவின் ஆற்றலோடு அவரின் வழிக்காட்டுதலை நெறியை கொண்டு செம்மையாக வாழ்வோம்! இறை நிலையின் தன்மையான கருணை நிலையில் இருந்து அன்பின் அதிர்வலைகளை அனைத்து உயிர்களுக்கும் செலுத்திக்கொண்டே இருப்போம்! வாழ்க வளமுடன்!

comparision of WCSC

வாழ்க வளமுடன். நம்முடைய மனவளக்கலை மன்றம் ஒரு மிகச்சிறந்த முறை. ஏனெனில் ஒரு விதத்திலும் அறிவிற்க்குப்புறம்பான செயல்களில் ஈடுபடாமல் ஆன்மாவை பேரறிவோடு இணைக்க உதவுகிறது. ஒவ்வோர் மகான் வாழ்ந்த போது அவரவர் சுற்றத்தாரின் மன நிலைக்கு ஏற்ப அந்த மகான்களின் உபதேசம் இருப்பதைக் காணலாம்! இது சமுதாயத்தோடு இணைந்து அவர்களை தங்களின் வழிக்கு திருப்பி விடுவது தான் குருவின் நோக்கமாக இருந்தது. ஆனால் வள்ளலார், ரமண மகரிஷி மற்றும் குரு வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்கள் எல்லாம் எந்த விதத்திலும் உண்மையின் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்ததில்லை! மௌனம் என்றும் அத்வைதம் என்றும் அசையாமல் அறிவை பேரறிவில் இணைத்து இந்த மகான்கள் சமுதாயத்தில் இருந்து கொண்டே தான் இருந்தார்கள்! மற்ற ஆன்மீக மார்க்கங்கள் எல்லாம் செல்ல வேண்டிய கடைசி வழியை நமக்கு நேரடியாக தந்தது ஒரு வகையில் ஒரு பாக்கியம் என்றாலும், அதை பெறும் தகுதி என்பது எல்லோருக்கும் இருக்க வில்லை! இதனால் தான் வள்ளல் பெருமான் " கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்றார்கள். ரமண மகரிஷி அவர்களிடம் நீங்கள் ஏன் எப்போதும் அத்வைத நோக்கிலேயே உங்கள் பதிலை சொல்கிறீர்கள் என்று கேட்ட போது, " என்ன செய்வேன், என் புத்தி இருக்கும் இடத்தைப் பொறுத்துத்தானே என்னால் பேச முடியும்! " என்றாராம். நம் குரு நாதரோ, " இறைவெளியோடு எண்ணத்தை கலக்கவிட்டு ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க்க நிறை நிலையே தானாக உணர்வதாகும் " என்றார். இது தான் சமுதாய்த்திற்க்கு இறை நிலை காட்டும் கருணை நிலை! நம் குருனாதரின் கருணை நிலையே தான் நமக்கு நிறைய கவிகளும் தத்துவங்களும் கிடைத்திருக்கின்றன. இவை எல்லாம் புரிந்து கொள்ளும் போது சமுதாயம் அமைதியை பற்றி விடும்! ஆனால் நமது மன்றத்திலோ, வள்ளலார் மற்றும் ரமண மகரிஷி அவர்களின் ஆன்மீக நிலையத்திலோ மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாததற்க்குக் காரணம் குரு நாதர்கள் எல்லாம் பேரறிவில் இருந்து விலகி நில்லாமல் இருந்தது தான் என்று தோன்றுகிறது! இறை நிலையானது, எதை நிகழ்த்துகிறதோ அதாவது நம்மை சுற்றி எது நடக்கிறதோ அது தான் இறைவன் இயற்கையாக இருந்து நடத்துகிறான் என்று ஏற்கும் தன்மை நமக்கு வர வேண்டும். இயேசு நாதர் தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொண்டதைப்போல நம்மை சுற்றி நிகழ்வதை ஏற்கும் தன்மை என்பது, இயற்கையோடு ஒத்து வாழும் தன்மை... நமக்கு கிடைக்கும்! இது கோழைத்தனம் அல்ல! இது எதையும் சந்திக்கும் திறன்! அது நமக்கு அவசியம் வேண்டும்! காலம் தானாக நம் முயற்சிக்கு சரியான பலனைத்தரும்! வாழ்க வளமுடன்.

what is the difference between love and attachment

வாழ்க வளமுடன்.அன்பு என்பது உணரப்படுவது மட்டுமில்லாது செயலில் வருவது இறை தவத்தில் தான்!"பாசமாம் பற்றறுத்து என்னை பாரிக்கும் ஆரியனே" என்று திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்! மனது கொண்டுள்ள எல்லா பற்றுக்களில் இருந்து மனதை விடுவிக்கும் போது மனது என்பது எளிதாக இறைனிலையில் நுழைகிறது! எதுவும் இன்றி எல்லாமாகி விரிந்து இருக்கும் நிலை தானே இறை நிலை!"அன்பே சிவம்" என்ற திருமூலரின் வாக்கு மிக உண்மை!

ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை
பாசத்துள் வைத்து பரிவு செய்வார்களை
!தேசுற்றறிந்து செயலற்று இருந்திடில்
ஈசன் வந்தெம்மிடை ஈண்டி நின்றானே!

இப்படி பார்க்கும் போது ஈசன் மீது கொண்டுள்ள பாசம் மட்டும் தான் மனித சமுதாயத்திற்க்கு தேவை!அது மட்டும் தான் அன்பை உணர உதவும்! நம்முடைய பெற்றோர் மட்டும் குடும்பத்தின் மீதான பாசம் என்பது பற்று தான்! அதை வைத்துக்கொண்டு நாம் இறைவனை உணர முடியாது! நம் குருனாதர் சொன்ன மாதிரி " நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம் ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும் நுழையா! இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்? " வாழ்க வளமுடன்.

How to identify a true Vethathirian?

1. He will be very clear in Vethathirian philosophy.
2. He will be physically, mentally, socially and spiritually healthy.
3. He will lead a life of knowing the purpose of his birth.
4. He will bless this world for peace and every individual he meets, whole heartely.
5. Sense of love, compassion and respect for others will be in nature.
6. He will be a person with adjustment, tolerance and sacrifice.
7. He will never comment, command (or) demand any body.
8. He will never find faults in others.
9. He will accept people as they are.
10. He will not be egoistic. {He knows very well that if a person has EGO then Everything Goes Out}.
11. He will follow limit and method in everything.
12. His sense organs will be under the control of his consciousness.
13. He will introspect himself each and every minute in his life.
14. He will do an action foreseeing its results before hand (His thought, word and action will be good because he knows that GOD comes as result for every action)
15. He always enjoys in the ocean of ecstasy through deep meditation.
16. He will sacrifice the name and fame which he gets from the society to GURU.
17. He will do his duties properly in such a manner that one duty is not affected by another.
18. He will spread Vethathiriam not only through his selfless service but also being himself a ROLE MODEL OF VETHATHIRIAM.

“LET US ALL BE TRUE VETHATHIRIANS AND SOW THE SEEDS FOR WORLD PEACE”“WIN THE WORLD WITH PEACE”

Thursday, April 05, 2007

மனம் என்பது என்ன

நம் எண்ன அலைகளின் கூட்டுத் தொகுப்பே. அலை என்பது எண்ன ? நிலை அசைந்தால் அது அலை ! நிலை என்பது எண்ன ? சுத்த வெளி, அதாவது நம்மில் அறிவாக இயங்கும் அந்த சுத்த வெளி. இவ்வளவுதான் விளக்கம் - வேதாதிரியம் என்ன அழகாக ஆதி சங்கரருக்கு விளக்க உரை தருகின்றது பாருங்கள்.
இதில் இனிமை என்னவென்றால் CPS என்று சொல்லக் கூடிய மன அலைச் சுழல் அலகைக் கொண்டும் இந்த உண்மைகளை ஆராய்கின்றது வேதாதிரியம். உங்கள் மன அலைச் சுழல் 15 CPS என்று கொள்வோம். அப்பொழுது உங்களுக்கும் சுத்த வெளிக்கும் உள்ள தூரம் எவ்வளவு? 15 CPS அவ்வளவு தான் - ஏனென்றால் சுத்த வெளியை அறிவாக உணர 0 CPS வரை நீங்கள் செல்ல வேண்டும் . இது தான் இறை நிலைக்கும் உங்களுக்கும் இடையே உள்ள தூரம் வேதாதிரிய இறைப் பாதையில்.

சில சூத்திரங்கள்

1.இறை நிலை என்பது பேரறிவு.
2. இது பருப் பொருட்களில் பரிணாமம், இயல்ப்பூக்கம், செயல்-விளைவு என்ற விதங்களில் தன்னை வெளிப் படுத்துகின்றது .
3. பேரறிவு உயிரற்ற பொருட்களில் 1.pattern 2.precision 3.regularity என்ற மூன்றாக செயல் படுகின்றது .
4. பேரறிவு உயிரினங்களில் 1. Discrimination 2. Experience 3. Cognizance என்ற மூன்றாக செயல் படுகின்றது .
5. மனிதனில் பேரறிவு கரு மையம் என்ற செயலுக்கு ஏற்ற விளைவத் தரும் ஒரு அறிவு மையமாக தன்னை வெளிப் படுத்துகின்றது .


இந்த அறிவியல் விளக்கங்கள் தான் 'இந்த நூற்றாண்டின் தத்துவ ஞானி' தந்த அறிவு களஞ்சியங்கள் . இவை தான் வேதாதிரியத்தை 'logical spritual path' ஆக அடையாளம் காட்டுகின்றன .
இறைவனை அடையாளம் காண்பது வேதாதிரியத்தில் மிக எளிது என்பதை மகரிஷியின் வழி நின்றோர் அறிவார். அவரின் வழி நின்ற மனித மனங்கள் தம் வாழ்வில் உயரும் என்பது மட்டும் திண்ணம்.
வா ழ் க வை ய கம் ! வா ழ் க வ ள மு டன் !