வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, May 31, 2007

பிரம்மச்சரியமும் ஞானமும்

எப்போதும், ஆண் - பெண் உடலிணைப்பே இல்லாமல் வாழ்வது பிரம்மச்சரியம் என்று தவறாகக் கருதப்படுகிறது. இந்த வைராக்யம் கொண்டவர்கள் மிகவும் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நீங்கள் கருத வேண்டாம் என்று உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உலகமீது உருவாகி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் அனைவரும் இந்த விரதம் கெட்டபோது தான் உற்பத்தியானார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். உலக உத்தமர்கள், ஞானிகள், தீர்க்க தரிசிகள், அனைவரும் பிரம்மச்சரியம் கெட்டவிடத்தில் தான் தோன்றினார்கள்; ஆண் - பெண் நட்புடன் ஒழுக்கத்துடன், வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் என்று உதாரணம் காட்டுகிறேன். வயது வரும் வரையில் கட்டுப்பாடாக இருந்து, பின்னர் ஒழுக்கத்துடன் திருமணம் செய்து கொண்டு, அளவு முறையுடன் உடல் கலப்புக் கொண்டு வாழ்வதையே நல்ல கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறேன்.

குரு சீடர் உறவு--அன்பின் அதிர்வலை!

அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக! உலகத்தில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன்னுள் அடக்கி மறைபொருளாக நிறைந்து கொண்டு வழி நடத்தும் இறையாற்றலோடு இணைந்து இருக்கும் குரு நாதருக்கு என்றென்றும் சரணங்கள்! உலகில் நிகழும் எண்ணற்ற நிகழ்வு, நாம் மனத்தைக்கொண்டு தான் செய்கிறோம்! எந்த நிகழ்வு நிகழ வேண்டும் என்று தீர்மானிப்பது இறை நிலை ஒன்றே தான்! அதனால் தான் நம் குரு நாதர் செயல் விளைவு தத்துவத்தை நமக்கு நன்றாக விளக்கினார்கள்! கடை பிடிக்கவும் செய்தார்கள்! நாம் சில நேரங்களில் நிகழ்வதை ஏற்கவோ, ஜீரணிக்கவோ இயலாத தருணம் வரும் போது என்ன செய்வது? நம்மை புண்படுத்துகிற மாதிரி செயல் செய்பவர்கள் எல்லாம் எல்லா வசதிகளை பெற்று வாழ்கிறார்களே! என்றெல்லாம் நமக்கு தோன்றும்! உலகத்தை மாயை என்போம்! அது தரும் வசதி வாய்ப்பு அனைத்தும் கூட மாயை தான்! ஏனெனில் தனக்கு முழுமை தருவதற்காகவே ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு என்று ஒரு செயலை செய்து வருகிறார்!இதில் நாம் அறிய வேண்டியது என்னவெனில் நாம் எப்படி இருக்க வேண்டியது என்பது மட்டும் தான்! என்ன தான் வாழ்க்கையில் அவரவர் செயல் செய்து வசதிகளை அனுபவித்தாலும் அவர்களும் தனக்கு முழுமை தரும் பாதை இது தான் என்று தானே செயல்களை துணிந்து செய்கிறார்கள்? மற்றவர் செயல்களை பார்த்து நாம் ஏன் கலங்க வேண்டும்? செயலுக்கு விளைவு என்று இறை நிலை அவரவருக்கு செய்ய வேண்டியதை காலத்தோடு செய்யும் போது நாம் ஏன் பிறர் செயல்களை நோக்க வேண்டும்? எல்லாம் வல்ல குருவின் ஆற்றலானது தீயவைகளை தடுத்து நம்மை வழி நடத்துமா? நிச்சயமாக...வழி நடத்தும்! ஏனெனில் Fraction demands Totality supplies!! என்பது தான் நம் குரு நாதர் நமக்கு சொல்வது! எப்போதெல்லாம் நம்மை தாண்டி சில செயல்கள் நமக்கு நிகழ்கிறதோ அப்போதே நாம் அந்த நிகழ்வுகளை களைய முயற்ச்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது! நம் கட்டுப்பாட்டில் இல்லாத விசயங்களை இயற்கையிடம் தந்து விடுவது நமக்கு நல்லது! புத்தர் பிறந்த போது அவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்கள் கணித்தார்கள் ! முதல் ஜோதிடர்... மூன்று என்று கையை உயர்த்தினார்! இரண்டாம் ஜோதிடர்... இரண்டு என்று கையை உயர்த்தினார்! மூன்றாம் ஜோதிடர் ... ஒன்று என்று கையை உயர்த்தினார்! இதை அறிய ஆவல் கொண்ட மன்னன்... முதல் ஜோதிடரை கேட்டார்... அவர் சொன்னது .... 1. குழந்தை புகழ் பெற்று மக்களை ஆளும் . 2. அதிகாரம் மிகுந்து நாடு முழுவது புகழ் பெற்று ஓங்கும் 3. துறவறம் மேற்கொண்டு மக்களை வழி நடத்தும்! இரண்டாம் ஜோதிடர்.... 1. புகழ் பெற்று நாட்டை ஆளும் 2. துறவறம் மேற்கொள்ளும்.மூன்றாம் ஜோதிடர் சொன்ன ஒரே கருத்து.... 1. நாட்டை விட துறவறம் மேற்கொண்டு நல்ல ஞானம் பெறும் என்பது தான்! இந்த மூன்றாம் ஜோதிடரின் ஆணித்தரமான கருத்து மன்னனை நிலைகுலைய வைத்தது... அவர் மீது கோபம் கொண்ட அரசன் அந்த ஜோதிடரை சிறையில் அடைத்தார்! இருப்பினும் முதல் ஜோதிடரின் ஆலோசனையின் படி சித்தார்த்தனை வெளி உலகை அறியாத படி வளர்த்தார் மன்னர்! ஒரு கணத்தில் வெளி உலகையும் அதில் நிலவும் செயல்களும் சித்தார்த்தனுக்கு தான் வாழ்ந்த வாழ்வே ஒரு மாயை தான் என்று உணர நாட்டை விட்டு காட்டை நோக்கி தப்பி ஓடினார்! ஞானம் பெற்ற பிறகே அவர் சீடர்களுடன் காவி உடை அணிந்து அவரின் நாட்டில் நுழைந்தாராம்! இந்த நிகழ்வை நாம் அறிவோம்! இதில் நாம் பார்க்க வேண்டியது... சித்தார்த்தன் துறவறம் தான் மேற்கொள்ளுவான் என்று உண்மையை ஆனித்தரமாக சொல்லியதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடரின் நிலை தான்! அந்த உண்மையை யாரும் ஏற்க வில்லை! யாரும் நம்பவில்லை! ஆனால் அது தானே நடந்தது? உலகில் ஒரு மகான் தோன்றுகிறார் எனில் அதற்க்கு எண்ணற்ற மக்களின் எண்ண அலைகள் தான் காரணமாக இருக்கிறது!தனி மனித அமைதியின் மூலம் உலகம் அமைதியை அடையும் என்று உண்மையை சொன்ன குரு நாதரின் முயற்ச்சியும் ஆசிர்வாதங்களும் சீடர்களாகிய நமக்கு சூக்கும நிலையிலும் கருமையத்தோடு இணைந்தும் வழி நடத்துகிறார்! குருவின் ஆற்றல் ஆனது நம்மை நிச்சயம் வழி நடத்தும். ஆனால் நாம் அந்த ஆசிகளை பெறும் நிலையில் இருக்க வேண்டும்! அமைதியில் இருந்தால் தான் உணர்வுகளை அறிய முடியும்! நம்மை புண்படுத்தும் அன்பர்கள் இருப்பினும் அவர்களையும் நாம் வாழ்த்தியாக வேண்டும்! அப்போது தான் நாம் குருவின் வழியில் வாழ முடியும்! தவத்துணையால் உயர்ந்தார்கள் தனைக்காத்தோர் நலம் செய்தோர் தாய் தந்தை குரு தனியே காப்பின்றி இருப்போர்கள் சிவத்தறிஞர் இவர்கட்கு சிறிதோ பெறிதோ துன்பம் சிந்தனையற்றோர் தந்து மனவருத்தம் விளைவித்தால் பவத்தின் பலன் அவ்வருத்த அலை மோதி அவ்வேகம் பழி செய்தோர் உடல்காந்தம் உயிர்மூளை கேடு செய்யும் அவத்தின் விளைவவருக்கு அகண்ட வான்காந்தமும் அரும் நண்பர் அனைத்து பொருள் அவர்வாழ்வில் எதிர்ப்பாகும்! இந்தக்கவியில் குரு நாதர் சொல்வதை பார்க்கும் போது, எவரும், தவம் செய்பவர்களுக்கும் தவத்தில் உயர்ந்த ஞானிகளுக்கும் துன்பமோ மன வருத்தம் ஏற்படாதவாறு வாழ வேண்டும் என்று விவரிக்கிறது! எதிரியையும் நாம் வாழ்த்த வேண்டும் என்று நம் குரு நாதர் சொன்னது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெளிவாகிறது! நாம் மனத்தை இறை நிலையில் செலுத்திக்கொண்ட நம் கடமையை தொடர்வோம்! எந்த தவறு செய்தாலும் எவருக்கும் இறை நிலையானது செயல் விளைவு தத்துவத்தின் படி தன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால் நாம் அனைவரும் குருவின் ஆற்றலோடு அவரின் வழிக்காட்டுதலை நெறியை கொண்டு செம்மையாக வாழ்வோம்! இறை நிலையின் தன்மையான கருணை நிலையில் இருந்து அன்பின் அதிர்வலைகளை அனைத்து உயிர்களுக்கும் செலுத்திக்கொண்டே இருப்போம்! வாழ்க வளமுடன்!

குரு சீடர் உறவு--குரு என்ற கருணை நிலை!

அன்புள்ள நண்பர்களே எல்லாம் வல்ல குரு அருளின் துணையுடன் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வாழ்க வளமுடன். அன்பு என்றால் என்ன? இறை நிலை கருணை நிலையானதா? இறை நிலை -இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா? இப்படி நாம் பல கேள்விகளை கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம்! உண்மையில் நாம் கேள்வியில் நிலைத்தால் அது அறிவிற்க்கு அசைவே ஆகும். எல்லா கேள்விகளையும் கேட்கும் நாம் அந்த கேள்விக்கான பதில்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் அதற்க்கு நாம் தயாராக வேண்டும்! உதாரணத்திற்க்கு, எப்படி நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் எனில் நீரில் இறங்கித்தான் ஆக வேண்டுமோ அது போலத்தான் ! வெறும் கேள்வி- ஞானம் என்பது நீச்சல் அடிக்க உதவாதோ அது போலத்தான் இறை நிலையை பற்றி அறிய கேள்விகள் மட்டும் உதவாது! விரக்தி தான் மிஞ்சும்! எந்த விவாதங்கள் எதற்க்கு உதவும் என்பதை அறிவது கூட நமக்கு பல விசயங்களை கற்றுக்கொடுக்கும்! நம் குரு நாதர் சொன்ன மாதிரி, நாம் எந்த மன நிலையில் இருக்கிறோம் என்பதை அறிவது மிக முக்கியம்! நம் குரு நாதர் சொன்ன மாதிரி, இறை நிலை அடைய விரும்பாமை கூட நாம் இறைனிலையில் இல்லாததற்க்கு ஒரு காரணம் தான்! அடைய விரும்பாத ஒரு விசயத்திற்க்காக, கற்றுக்கொள்ள விரும்பா ஒரு விசயத்திற்க்காக நாம் மணிக்கணக்கில் விவாதிக்கிறோமா? உண்மையிலேயே நாம் இறை நிலையின் தன்மையை ஏற்றுக்கொள்ளத்தயாரா? இருப்பு நிலையில் மனதை செலுத்தினால் நாம் அதன் தன்மையை ஏற்கும் நிலையில் நாம் இல்லை என்று தெரிய வரும்! இவற்றை ஏன் எழுதுகிறேன் என்றால்... நாம் இறை நிலையையோ அல்லது இறை வடிவான குருவிடம் உலக, சமூகக்குறைகளை தெரிவித்துக்கொண்டே தான் இருக்கிறோம் என்பதால்! சரி..... இறைனிலை என்பது இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா அல்லது அன்பும் கருணையுமானதா? இறை நிலையில் நம் மனதை வைத்து தியானிக்கும் போது நாம் மெல்ல மெல்ல அசையா நிலைக்குச் செல்ல நேரும். அப்போது தான் கேள்வி என்பது மௌனத்தில் இருந்து வருவது என்பதும், கேள்வி என்பது எண்ணமாக வடிவம் பெறுவதும் புரியும்! ஆக எண்ணம் என்பது தான் மௌனத்தில் நாம் அசைவதை உணர்த்துகிறது!எண்ணம் தான் நமக்கு முக்கியம் எனில் நாம் அசையா நிலையை அடைந்து அதுவாக ஆக வேண்டும் என்ற நிலையில் இல்லை என்பது தெளிவு! இருப்பு நிலை என்பதை மனது அறிய முயற்ச்சிக்கும் போது, மெல்ல எண்ணமற்ற, கேள்வியற்ற நிலையை அடையும். அப்போது இருப்பு நிலையின் தன்மையாக மனது வடிவெடுக்கும். பூரண அமைதியை நோக்கி செல்லும் போது மனது இருப்பு நிலையில் சென்று ஒடுங்கிப்போகும்! அப்போது இறைனிலையின் தன்மையே மிஞ்சும்! மனதோ கேள்வியை கடந்திருக்கும்! இறை நிலை முழுமையான ஈர்ப்பு நிலை என்று அப்போது பூரண அறிவு சொல்லும்! இவை எல்லாம் அனுபவங்களாக தெரியும் போது மட்டும் தான் நம் அறிவிற்க்குள் நிலைக்கும்! இறைனிலை என்பது இருப்பு நிலை என்றால் அது விழிப்பு நிலையா என்றால் ஆமாம்.... இறை நிலை அடையும் வழியில் நம் ஆன்மாவை சுற்றி நாம் கட்டியிருக்கும் எண்ணற்ற கட்டுக்களை அறுத்து எறிய நம்மிடம் அனுமதி கேட்கும்! இறை நிலை என்பது உறக்க நிலை அல்ல! அதன் மீது கொண்டுள்ள பற்று மட்டும் தான் மற்ற எல்லா பற்றுக்களையும் விடும் அனுமதியை நாம் தரும் பாக்கியம் பெறுவோம்!குருவின் மேல், இறை நிலையின் மேல் அன்பு இருந்தால் மட்டுமே அந்த அனுமதி நமக்குக்கேட்கும்!குருவின் முன் எல்லாவற்றையும் உதறிவிடும் போது நம் அறிவு விரியும் நிலையை எய்தும்! அப்பேற்ப்பட்ட அறிவு என்பதை விளக்க நேரும் போது, அன்பு என்ற வார்த்தையை மட்டும் தான் சொல்ல முடியும்! ஆனால் அதுவே பற்றுக்களை நெறித்த இடம்! எல்லா பற்றுக்களை விட்டு விட்டு நிர்மூலமாக விரிந்து விளங்கும் அறிவாக இருக்கும் நிலையில் உறக்கத்திற்க்கு இடமேது? அதுவே தான் பூரண விழிப்பு நிலை! அந்த நிலையில் நாம் குருவோடு இணைந்திருக்கும் போது நமக்கு உலகம் என்றும் உணர்ச்சி என்றும் வேறு எந்த நிலையும் அண்ட முடியாது போகும்! குருவின் முன் எனக்கு ஏற்படும் உணர்வுகளையும் வீசி எறிந்து விடுகின்றேன்! அப்பா! உலகம் என்று எனக்கு எதுவுமில்லை! இன்பம் துன்பம் என்ற உணர்வு எதுவுமில்லை! வாழ்க்கை என்ற போராட்டத்தில் நீந்தும் என்னைப்போன்ற பிள்ளைகளை எப்போதும் தாயைப்போல அரவணைக்கும் குருவே, உங்களிடம் கேள்வி கேட்டு, என்னை அசையவைத்து உங்களிடம் இருந்து என்னை பிரிக்காத வரம் வேண்டும்! உங்களை அண்டும் போதெல்லாம் என்னை ஆட்கொள்ளும் தூய சத்குருவே! சொல்லிலடங்கா உணர்வுகளை புரிய வைக்கும் ஆனந்தமான வடிவம் நீங்களன்றோ! உங்கள் கருணை நிலையை என்னவென்று சொல்வேன்? வார்த்தைகள் மீதமில்லையே! குருவே சரணம்! வாழ்க வளமுடன்!

குரு சீடர் உறவு--குரு என்ற தாய்மை!

வாழ்க வளமுடன்அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக! வாழ்க வளமுடன்!எங்கும் நிறைவாக இருக்கும் நிலையான இறை நிலையுடன் எப்போதும் உறைந்திருக்கும் குருவின் பாதத்தில் சரணடைதலை சமர்ப்பிக்கிறேன்.இந்த உலகம் நிறைவாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று எப்படி அறிவது?உலகமென்பது நமக்கு நம் மனதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.எல்லாமே நிறைவாக இருக்கிறதா? என்று நமக்கு என்றும் ஒரு கேள்வி எழவே செய்கிறது! இதற்கு காரணம் ஆராய்கையில் நமது மனதில் இருக்கும் அசைவுதான் முதலாக இருக்கிறது! இந்த உலகம் நிறைவாக இருக்கிறதா? என்பது நாம் நிறைவாக இருக்கிறோமா? என்றைய கேள்வியின் மறு முனை! நாம் முதலில் நிறைவாக இருக்கிறோமா என்று நாம் அறிய வேண்டும்! எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும் எனில் நாம் என்ன செய்ய வேண்டும்? நிறைவான நிலையுடன் இணைய வேண்டும்! நிறைவாக விளங்கும் குருனாதரிடம் சரணடைய வேண்டும்! எல்லாம் நிறைவாகவே தான் இருக்கிறது என்ற அமைதியானது நமக்கு உணர்வாக வேண்டும்! நமது மனமானது எதனை நோக்கி இருக்கிறது என்ற புரிந்து கொள்ளல் நமக்கு அவசியம் வேண்டும்! குருனாதரின் மலரடியான இறைனிலையில் நாம் லயித்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் அவரவர் அளவில் சரியாக இருக்கிறோம்! ஆனால் அனைவரின் ஆற்றலுக்கும் அனைத்துக்கும் மூலமான இறைனிலை என்ற சரியான வழியில் நாம் இருக்கிறோமா என்று நாம் ஆராய வேண்டும்! நமக்கு மட்டும் நாம் சரியாக இல்லாமல், நமது மனதிற்கு மூலமான இறைனிலையோடு இணைந்து, நம்மை நாம் ஆராய்கையில் நமக்கு எந்த தவறும் எந்த குழப்பமும் இல்லாத நிலையை அடைந்திருப்போம்! அந்த நிலையில் மனமானது, நமக்கு நிகழும் எதற்க்கும் காரணம் செயல் விளைவு என்றாகிய தெய்வ திருச்சட்டம் தான் என்று புரிந்து அமைதியை அடைந்து இருக்கும்! "என் வாழ்வில் எனக்கு அமைதியே இல்லை" என்று நிற்கின்ற அனைவருக்கும் இறைவனின் திருச்சட்டமாகிய செயல் விளைவை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்து விடும்! எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் நமக்கு என்றும் அமைதி தான்! எப்படி எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது? அது தான் நிறைவு! " நிறைவு" என்பதை சொல்வது யார்? எது? ஏன்? நிறைவு என்பதை உணர்வது ஆறாவது அறிவாகிய "மனது". நிறைவு என்பது மனதின் மூலமாகிய அந்த "பேரறிவு"! இறைவன் என்றதும் நாம் உணர வேண்டியதை வார்த்தையாகச்சொன்னால் அது தான் " நிறைவு" ! ஏன் எனில் நிறைவு தான் எப்போதும் இருக்கிறது! இந்த உலகம் சரியாகத்தான் போகும்! நிறைவின்றி வேறு ஏது இறை நிலையின் தன்மையாக நமக்கு சொல்வதற்க்கு இருக்கும்? எண்ணற்ற விசயங்கள் இதற்க்கு எதிராக இருக்கிறது! முதலில் இந்த சமுதாயம், இந்த உலகம் அமைதியாக இல்லை. சுற்றி இருக்கும் எதுவும் சரியாக இல்லை என்ற நிலை நமக்கு முன்! ஆனால்....இதை எல்லாம் நமக்கு சொல்லும் மனதானது, நடப்பதை செயல் விளைவாக ஏற்காத தன்மையுடன் இருக்கிறது! இதை நாம் தன்முனைப்பு என்றும் சொல்லலாம்! ஆனால் மறைவாக இருக்கும் உண்மை எதுவெனில், ஏற்றுக்கொள்ளாத நிலை என்பது "சரணடையாத" நிலை! சரணடைதல் என்பது, எதையும் ஏற்கிற தன்மை தான்! எதையும் மனதால் நாம் எதிர்க்கும் வரை தான் அது நம் முன் நிற்கும்! நிறைவான இறை நிலையுடன் நாம் நிறைந்து நிற்கும் பழக்கம் பெற்றால் நமக்கு எதிலும் என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு வந்து விடும்! அந்த சரணடைதலுக்குத்தான் நமக்கு " குரு" என்ற தாய்மை தேவைப்படுகிறது! தாயிடம் தஞ்சம் புகும் பிள்ளைக்கு எப்படி தேவையானதை தருகிறாளோ, அது போலத்தான் குருவின் கருணையும்! குருவின் முன் " உள்ள " சரணாகதி தான் நமக்கு எல்லாவற்றையும் உணர வைக்கும்! "உள்ள" சரணாகதி எல்லாவற்றையும் தரும் என்றால் எதிர்ப்பார்ப்பு ஆகிவிடாதா?........என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும்! குருவானவரின் முன் நிற்கின்ற சீடனுக்குத்தான், செயல் விளைவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் இறைவன் எல்லாவற்றையும் முறையாக நடத்துகிறான் என்ற உணர்வு மிஞ்சி நிற்கிறது! அந்த பாக்கியம் பெறும் சீடன் எப்போதும், தாயின் மடியில் தலையை சாய்த்து ஆனந்தம் பெறுகிறான்! இறை நிலையின் தன்மையாய் தான் எந்த நிகழ்வும் நடக்கிறது என்ற தன்மை நமக்கு வரவேண்டும்! இறை நிலையை தாண்டி எதுவும் நிகழ வாய்ப்பில்லை! இயற்கைக்குள் எல்லாம் அடங்கிப்போகும்! இயற்கையைத்தாண்டி எதுவும் நிகழாத வகையில் இயற்கை சக்தியுடன் எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது! எல்லாம் சரியாக நிறைவாகவே இருக்கிறது என்ற பேருண்மையை நாம் உணர இறை நிலை தவத்தில் குருவின் ஆனந்தத்தில் உறைய வேண்டும்! குரு என்ற தாய்மையிடம் நாம் முழுவதுமாக சரணடைவோம்! தாயிடம் சரணடைந்த எண்ணற்ற புதல்வர்களில் நாமும் ஒருவராக மாறுவோம்! தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவும் பெறும் வண்ணம் நின்னை சரணடைந்தேன்!என்ற பாரதியின் வரியாய் நம் தாயிடம் சரணடைவோம்!வாழ்க வளமுடன்!

Tuesday, May 29, 2007

குரு சீடர் உறவு--அன்பின் அதிர்வலை!

உலகத்தில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன்னுள் அடக்கி மறைபொருளாக நிறைந்து கொண்டு வழி நடத்தும் இறையாற்றலோடு இணைந்து இருக்கும் குரு நாதருக்கு என்றென்றும் சரணங்கள்! உலகில் நிகழும் எண்ணற்ற நிகழ்வு, நாம் மனத்தைக்கொண்டு தான் செய்கிறோம்! எந்த நிகழ்வு நிகழ வேண்டும் என்று தீர்மானிப்பது இறை நிலை ஒன்றே தான்! அதனால் தான் நம் குரு நாதர் செயல் விளைவு தத்துவத்தை நமக்கு நன்றாக விளக்கினார்கள்! கடை பிடிக்கவும் செய்தார்கள்! நாம் சில நேரங்களில் நிகழ்வதை ஏற்கவோ, ஜீரணிக்கவோ இயலாத தருணம் வரும் போது என்ன செய்வது? நம்மை புண்படுத்துகிற மாதிரி செயல் செய்பவர்கள் எல்லாம் எல்லா வசதிகளை பெற்று வாழ்கிறார்களே! என்றெல்லாம் நமக்கு தோன்றும்! உலகத்தை மாயை என்போம்! அது தரும் வசதி வாய்ப்பு அனைத்தும் கூட மாயை தான்! ஏனெனில் தனக்கு முழுமை தருவதற்காகவே ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு என்று ஒரு செயலை செய்து வருகிறார்!இதில் நாம் அறிய வேண்டியது என்னவெனில் நாம் எப்படி இருக்க வேண்டியது என்பது மட்டும் தான்! என்ன தான் வாழ்க்கையில் அவரவர் செயல் செய்து வசதிகளை அனுபவித்தாலும் அவர்களும் தனக்கு முழுமை தரும் பாதை இது தான் என்று தானே செயல்களை துணிந்து செய்கிறார்கள்? மற்றவர் செயல்களை பார்த்து நாம் ஏன் கலங்க வேண்டும்? செயலுக்கு விளைவு என்று இறை நிலை அவரவருக்கு செய்ய வேண்டியதை காலத்தோடு செய்யும் போது நாம் ஏன் பிறர் செயல்களை நோக்க வேண்டும்? எல்லாம் வல்ல குருவின் ஆற்றலானது தீயவைகளை தடுத்து நம்மை வழி நடத்துமா? நிச்சயமாக...வழி நடத்தும்! ஏனெனில் Fraction demands Totality supplies!! என்பது தான் நம் குரு நாதர் நமக்கு சொல்வது! எப்போதெல்லாம் நம்மை தாண்டி சில செயல்கள் நமக்கு நிகழ்கிறதோ அப்போதே நாம் அந்த நிகழ்வுகளை களைய முயற்ச்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது! நம் கட்டுப்பாட்டில் இல்லாத விசயங்களை இயற்கையிடம் தந்து விடுவது நமக்கு நல்லது! புத்தர் பிறந்த போது அவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்கள் கணித்தார்கள் ! முதல் ஜோதிடர்... மூன்று என்று கையை உயர்த்தினார்! இரண்டாம் ஜோதிடர்... இரண்டு என்று கையை உயர்த்தினார்! மூன்றாம் ஜோதிடர் ... ஒன்று என்று கையை உயர்த்தினார்! இதை அறிய ஆவல் கொண்ட மன்னன்... முதல் ஜோதிடரை கேட்டார்... அவர் சொன்னது .... 1. குழந்தை புகழ் பெற்று மக்களை ஆளும் . 2. அதிகாரம் மிகுந்து நாடு முழுவது புகழ் பெற்று ஓங்கும் 3. துறவறம் மேற்கொண்டு மக்களை வழி நடத்தும்! இரண்டாம் ஜோதிடர்.... 1. புகழ் பெற்று நாட்டை ஆளும் 2. துறவறம் மேற்கொள்ளும்.மூன்றாம் ஜோதிடர் சொன்ன ஒரே கருத்து.... 1. நாட்டை விட துறவறம் மேற்கொண்டு நல்ல ஞானம் பெறும் என்பது தான்! இந்த மூன்றாம் ஜோதிடரின் ஆணித்தரமான கருத்து மன்னனை நிலைகுலைய வைத்தது... அவர் மீது கோபம் கொண்ட அரசன் அந்த ஜோதிடரை சிறையில் அடைத்தார்! இருப்பினும் முதல் ஜோதிடரின் ஆலோசனையின் படி சித்தார்த்தனை வெளி உலகை அறியாத படி வளர்த்தார் மன்னர்! ஒரு கணத்தில் வெளி உலகையும் அதில் நிலவும் செயல்களும் சித்தார்த்தனுக்கு தான் வாழ்ந்த வாழ்வே ஒரு மாயை தான் என்று உணர நாட்டை விட்டு காட்டை நோக்கி தப்பி ஓடினார்! ஞானம் பெற்ற பிறகே அவர் சீடர்களுடன் காவி உடை அணிந்து அவரின் நாட்டில் நுழைந்தாராம்! இந்த நிகழ்வை நாம் அறிவோம்! இதில் நாம் பார்க்க வேண்டியது... சித்தார்த்தன் துறவறம் தான் மேற்கொள்ளுவான் என்று உண்மையை ஆனித்தரமாக சொல்லியதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடரின் நிலை தான்! அந்த உண்மையை யாரும் ஏற்க வில்லை! யாரும் நம்பவில்லை! ஆனால் அது தானே நடந்தது? உலகில் ஒரு மகான் தோன்றுகிறார் எனில் அதற்க்கு எண்ணற்ற மக்களின் எண்ண அலைகள் தான் காரணமாக இருக்கிறது!தனி மனித அமைதியின் மூலம் உலகம் அமைதியை அடையும் என்று உண்மையை சொன்ன குரு நாதரின் முயற்ச்சியும் ஆசிர்வாதங்களும் சீடர்களாகிய நமக்கு சூக்கும நிலையிலும் கருமையத்தோடு இணைந்தும் வழி நடத்துகிறார்! குருவின் ஆற்றல் ஆனது நம்மை நிச்சயம் வழி நடத்தும். ஆனால் நாம் அந்த ஆசிகளை பெறும் நிலையில் இருக்க வேண்டும்! அமைதியில் இருந்தால் தான் உணர்வுகளை அறிய முடியும்! நம்மை புண்படுத்தும் அன்பர்கள் இருப்பினும் அவர்களையும் நாம் வாழ்த்தியாக வேண்டும்! அப்போது தான் நாம் குருவின் வழியில் வாழ முடியும்! தவத்துணையால் உயர்ந்தார்கள் தனைக்காத்தோர் நலம் செய்தோர் தாய் தந்தை குரு தனியே காப்பின்றி இருப்போர்கள் சிவத்தறிஞர் இவர்கட்கு சிறிதோ பெறிதோ துன்பம் சிந்தனையற்றோர் தந்து மனவருத்தம் விளைவித்தால் பவத்தின் பலன் அவ்வருத்த அலை மோதி அவ்வேகம் பழி செய்தோர் உடல்காந்தம் உயிர்மூளை கேடு செய்யும் அவத்தின் விளைவவருக்கு அகண்ட வான்காந்தமும் அரும் நண்பர் அனைத்து பொருள் அவர்வாழ்வில் எதிர்ப்பாகும்! இந்தக்கவியில் குரு நாதர் சொல்வதை பார்க்கும் போது, எவரும், தவம் செய்பவர்களுக்கும் தவத்தில் உயர்ந்த ஞானிகளுக்கும் துன்பமோ மன வருத்தம் ஏற்படாதவாறு வாழ வேண்டும் என்று விவரிக்கிறது! எதிரியையும் நாம் வாழ்த்த வேண்டும் என்று நம் குரு நாதர் சொன்னது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெளிவாகிறது! நாம் மனத்தை இறை நிலையில் செலுத்திக்கொண்ட நம் கடமையை தொடர்வோம்! எந்த தவறு செய்தாலும் எவருக்கும் இறை நிலையானது செயல் விளைவு தத்துவத்தின் படி தன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால் நாம் அனைவரும் குருவின் ஆற்றலோடு அவரின் வழிக்காட்டுதலை நெறியை கொண்டு செம்மையாக வாழ்வோம்! இறை நிலையின் தன்மையான கருணை நிலையில் இருந்து அன்பின் அதிர்வலைகளை அனைத்து உயிர்களுக்கும் செலுத்திக்கொண்டே இருப்போம்! வாழ்க வளமுடன்!

comparision of WCSC

வாழ்க வளமுடன். நம்முடைய மனவளக்கலை மன்றம் ஒரு மிகச்சிறந்த முறை. ஏனெனில் ஒரு விதத்திலும் அறிவிற்க்குப்புறம்பான செயல்களில் ஈடுபடாமல் ஆன்மாவை பேரறிவோடு இணைக்க உதவுகிறது. ஒவ்வோர் மகான் வாழ்ந்த போது அவரவர் சுற்றத்தாரின் மன நிலைக்கு ஏற்ப அந்த மகான்களின் உபதேசம் இருப்பதைக் காணலாம்! இது சமுதாயத்தோடு இணைந்து அவர்களை தங்களின் வழிக்கு திருப்பி விடுவது தான் குருவின் நோக்கமாக இருந்தது. ஆனால் வள்ளலார், ரமண மகரிஷி மற்றும் குரு வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்கள் எல்லாம் எந்த விதத்திலும் உண்மையின் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்ததில்லை! மௌனம் என்றும் அத்வைதம் என்றும் அசையாமல் அறிவை பேரறிவில் இணைத்து இந்த மகான்கள் சமுதாயத்தில் இருந்து கொண்டே தான் இருந்தார்கள்! மற்ற ஆன்மீக மார்க்கங்கள் எல்லாம் செல்ல வேண்டிய கடைசி வழியை நமக்கு நேரடியாக தந்தது ஒரு வகையில் ஒரு பாக்கியம் என்றாலும், அதை பெறும் தகுதி என்பது எல்லோருக்கும் இருக்க வில்லை! இதனால் தான் வள்ளல் பெருமான் " கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்றார்கள். ரமண மகரிஷி அவர்களிடம் நீங்கள் ஏன் எப்போதும் அத்வைத நோக்கிலேயே உங்கள் பதிலை சொல்கிறீர்கள் என்று கேட்ட போது, " என்ன செய்வேன், என் புத்தி இருக்கும் இடத்தைப் பொறுத்துத்தானே என்னால் பேச முடியும்! " என்றாராம். நம் குரு நாதரோ, " இறைவெளியோடு எண்ணத்தை கலக்கவிட்டு ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க்க நிறை நிலையே தானாக உணர்வதாகும் " என்றார். இது தான் சமுதாய்த்திற்க்கு இறை நிலை காட்டும் கருணை நிலை! நம் குருனாதரின் கருணை நிலையே தான் நமக்கு நிறைய கவிகளும் தத்துவங்களும் கிடைத்திருக்கின்றன. இவை எல்லாம் புரிந்து கொள்ளும் போது சமுதாயம் அமைதியை பற்றி விடும்! ஆனால் நமது மன்றத்திலோ, வள்ளலார் மற்றும் ரமண மகரிஷி அவர்களின் ஆன்மீக நிலையத்திலோ மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாததற்க்குக் காரணம் குரு நாதர்கள் எல்லாம் பேரறிவில் இருந்து விலகி நில்லாமல் இருந்தது தான் என்று தோன்றுகிறது! இறை நிலையானது, எதை நிகழ்த்துகிறதோ அதாவது நம்மை சுற்றி எது நடக்கிறதோ அது தான் இறைவன் இயற்கையாக இருந்து நடத்துகிறான் என்று ஏற்கும் தன்மை நமக்கு வர வேண்டும். இயேசு நாதர் தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொண்டதைப்போல நம்மை சுற்றி நிகழ்வதை ஏற்கும் தன்மை என்பது, இயற்கையோடு ஒத்து வாழும் தன்மை... நமக்கு கிடைக்கும்! இது கோழைத்தனம் அல்ல! இது எதையும் சந்திக்கும் திறன்! அது நமக்கு அவசியம் வேண்டும்! காலம் தானாக நம் முயற்சிக்கு சரியான பலனைத்தரும்! வாழ்க வளமுடன்.

what is the difference between love and attachment

வாழ்க வளமுடன்.அன்பு என்பது உணரப்படுவது மட்டுமில்லாது செயலில் வருவது இறை தவத்தில் தான்!"பாசமாம் பற்றறுத்து என்னை பாரிக்கும் ஆரியனே" என்று திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்! மனது கொண்டுள்ள எல்லா பற்றுக்களில் இருந்து மனதை விடுவிக்கும் போது மனது என்பது எளிதாக இறைனிலையில் நுழைகிறது! எதுவும் இன்றி எல்லாமாகி விரிந்து இருக்கும் நிலை தானே இறை நிலை!"அன்பே சிவம்" என்ற திருமூலரின் வாக்கு மிக உண்மை!

ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை
பாசத்துள் வைத்து பரிவு செய்வார்களை
!தேசுற்றறிந்து செயலற்று இருந்திடில்
ஈசன் வந்தெம்மிடை ஈண்டி நின்றானே!

இப்படி பார்க்கும் போது ஈசன் மீது கொண்டுள்ள பாசம் மட்டும் தான் மனித சமுதாயத்திற்க்கு தேவை!அது மட்டும் தான் அன்பை உணர உதவும்! நம்முடைய பெற்றோர் மட்டும் குடும்பத்தின் மீதான பாசம் என்பது பற்று தான்! அதை வைத்துக்கொண்டு நாம் இறைவனை உணர முடியாது! நம் குருனாதர் சொன்ன மாதிரி " நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம் ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும் நுழையா! இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்? " வாழ்க வளமுடன்.

How to identify a true Vethathirian?

1. He will be very clear in Vethathirian philosophy.
2. He will be physically, mentally, socially and spiritually healthy.
3. He will lead a life of knowing the purpose of his birth.
4. He will bless this world for peace and every individual he meets, whole heartely.
5. Sense of love, compassion and respect for others will be in nature.
6. He will be a person with adjustment, tolerance and sacrifice.
7. He will never comment, command (or) demand any body.
8. He will never find faults in others.
9. He will accept people as they are.
10. He will not be egoistic. {He knows very well that if a person has EGO then Everything Goes Out}.
11. He will follow limit and method in everything.
12. His sense organs will be under the control of his consciousness.
13. He will introspect himself each and every minute in his life.
14. He will do an action foreseeing its results before hand (His thought, word and action will be good because he knows that GOD comes as result for every action)
15. He always enjoys in the ocean of ecstasy through deep meditation.
16. He will sacrifice the name and fame which he gets from the society to GURU.
17. He will do his duties properly in such a manner that one duty is not affected by another.
18. He will spread Vethathiriam not only through his selfless service but also being himself a ROLE MODEL OF VETHATHIRIAM.

“LET US ALL BE TRUE VETHATHIRIANS AND SOW THE SEEDS FOR WORLD PEACE”“WIN THE WORLD WITH PEACE”