வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Tuesday, July 21, 2009

Life Of a Software Engineer

I think I am changing the world, I think I am contributing to the Indian economy, I think I am living, I think I love my work, I think I am a cool a person with a zeal to enjoy life.

Yes I am a software engineer.

Life of a Software Engineer A:
- Get up late at 8’o clock A.M.
- Probably No exercise, break fast.
- Get ready and come to office 9 A.M.
- Check mails and work till 1 P.M.
- Go for lunch and have some food, may not be healthy.
- Back to seat and work till 11 P.M. may have tea in between twice.
- May smoke many times in between to reduce the stress.
- Go home at 11 or 12 P.M and chat with friends
- Go to bed probably without proper food at 1 P.M

Life of a Software Engineer B:

- Get up at 6 A.M.
- Do some exercise/yoga and have proper break fast.
- Come to office 8.30 A.M
- Check mails and plan for the day.
- Work till 1 P.M and Go for lunch have proper food.
- Back to seat and work till 6 P.M. and have healthy drink in between if needed
- Go home at 7 P.M and study some books and spend time with family.
- Have healthy food and go to bed at 11 P.M.
Which category of software engineers do you belong to? A or B?

In today’s world spoilt by our profession we are all tending to lead the life of SE A. Quality of life is increasing or decreasing?? Software engineer life is really so soft??

This is my TM speech 3

Word of the day

I have learned one word today.

Word: Incubate
Verb: meaning

1. To sit on (eggs) to provide heat, so as to promote embryonic development and the hatching of young;
2. To maintain (eggs, organisms, or living tissue) at optimal environmental conditions for growth and development.
3. To maintain (a chemical or biochemical system) under specific conditions in order to promote a particular reaction.
4. To form or consider slowly and protectively, as if hatching: incubated the idea for a while, then announced it.

Where i can use:
I often “incubate” a particular concept for a few days before concluding anything.

Thursday, July 09, 2009

ஒழுக்கத்திற்கான சூத்திரம்:

1.தனக்குத் துன்பம் தரக்கூடாது.

2.பிறருக்குத் துன்பம் தரக்கூடாது.

3.உடலுக்குத் துன்பம் தரக்கூடாது.

4.மனத்திற்குத் துன்பம் தரக்கூடாது.

5.தற்காலத்தில் துன்பம் தரக்கூடாது.

6.பிற்காலத்தில் துன்பம் தரக்கூடாது.

இத்தகைய ஆறு முறைகளில் துன்பம் வராமல் செய்யும் செயல்களே ஒழுக்கம் ஆகும். இவ்வாறு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒழுக்கத்திற்கு சூத்திரம் கூறியுள்ளார்.

Recursive Question

There is a question in me which is used to get triggered often. what i am doing is right?
is it something related to the purpose of this life or should i do something else?

At the same time i feel, in everybody's life this question will arise? probably in my case it is often.

let me search and find out answer for this..
sometimes i feel i dont have passion in anything. i can just sit summa all the time.

is this right? i have to do my duties right?
what are my duties as per god/nature?

Wednesday, July 08, 2009

AN EXPERIENCE TO SHARE!!

வாழ்க வளமுடன்.


தாயென்றும் தந்தையென்றும் தனிப்பெரும் காப்பாக அமைந்து நம்மை காத்துக்கொண்டிருக்கும் குருவின் பாதங்களில் சிரம் வைத்து வணங்குகிறேன்.


நமது பிறப்பால் நமக்கு அமைந்திருக்கும் எல்லாமும் நம் பெற்றோர்களால் நம்மை வந்தடைகிறது... இதிலே நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது பெற்றோரின் அனைத்து பதிவுகளும் நம்மைத் தொடர்கிறது...


ஆனால் குரு என்ற தொடர்பு மட்டும் தான் இந்த பிறப்புச்சுழலில் இருந்து நம்மை திருப்பி இறையிடம் கொண்டு செல்லுகிறது. குருவின் உதவி என்பது நாம் கணக்கிட முடியா ஆழ்ந்த நிலையிலே நம்மைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. சரணடைதல் என்பது தான் இந்த பிறப்பிலே உள்ள பயனை அடைய வழியாக இருக்கிறது...


நாம் நிறைய செயல்கள் செய்வோம்.... நல்லது கெட்டது என்று பிரித்துக்கொண்டே போகலாம். ஆனால் நாம் வெகு இயல்பாகவே சில தவறுகள் செய்வோம்... அது நமக்கு தவறாகத் தெரியாது... ஆனால் இந்த தவறுகள் நிச்சயமாக சூழ்நிலைகளாலும், முன் வினைகளால் நமக்கு வந்து கொண்டிருக்கும்....

இதெல்லாம் ஒரு புறம் இருக்கும்....இருக்கட்டும். இப்போது குருவிடம் சரணடைகிறோம்.... அப்போது, நாம் இது வரை செய்து கொண்டிருந்த செயல்களில் இருந்து நம்மை விலக்கி, இறையின் பக்கம் ஆழமாகச்செல்வோம்... இறை அனுபவம் என்பது கூட சாத்தியப்படும்... அப்படி எனில், வினைப்பயன் என்ன ஆனது என்றால் அது இந்த உடலுக்கு என்று என்னென்ன செய்யவேண்டுமோ அது எல்லாம் செய்து கொண்டே இருக்கலாம், ஆனால் குருவிடம் சரணடைதல் என்ற பந்தமானது, நம்மை அந்த சுழலில் சிக்கா வண்ணம் திருப்பி விட்டுக்கொண்டே இருக்கும்....

ஜாதகம் ஏதோ சொல்லும்... ஆனால் குருவின் ஆற்றலானது நம்மை அந்த கிரக நிலைகளில் இருந்தும் நம்மை தாங்கிக்கொள்ளும்... கிரக அமைப்புகள் என்னென்னவோ சொல்லும், ஆனால் அவைகள் அப்படியே இருக்க, சொல்லப்பட்ட கடினமான நிகழ்கள் எல்லாம் வெகு எளிதாக மாற்றி எளிதாக்கப்பட்டு விடும். அது தான் குருவிடம் கொள்ளும் பந்தத்தின் பயன்.

குருவிடம் கொள்ளப்படும் பந்தத்தின் ஆழம் தான், நாம் தியானத்தின் உச்சக்கட்ட பயனைக் கொள்ளும் வாய்ப்பின் அளவு...

நமது பழக்கங்கள் எல்லாம் நமக்கு பெற்றோரினால் வந்து அமைந்து இருக்கும்... மாறாமல் இருக்கும்.Let it be.... ஆனால் குருவிடம் கொண்டுள்ள பந்தம் தரும் பதிவு அந்த பழைய பதிவுகளை எல்லாம் தொடாமலேயே நம்மை தூக்கி இறை நிலையிலே நிறுத்தி பிறவிப்பயனை அடைய உதவும்....

இதைத்தான் நமது கவிதையாக எழுதினார்...


தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து
தழைத்தொரு உடலாகி உலகில் வந்தேன்
அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ
அளித்த பதிவுகள் எல்லாம் என் சொத்தாச்சு.

இந்த அரும்பிறவியில் முன்வினையறுத்து
எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு
வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை
வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்...


இந்தக்கவியின் மூன்றாவது வரியிலே, அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ.... என்று எழுதி இருக்கிறார் அல்லவா... மற்றோ என்ற ஒரு வார்த்தையிலே எத்தனையோ விதமான வினைகளும் அடக்கம்.

அப்படி இருக்கிற வினைகள் எல்லாம் நம்மால் தீர்த்துக்கொண்டால் தான் நாம் தூய்மை பெற முடியும் என்ற ஒரு எண்ணம் இருப்பின், நாம் இந்த பிறப்பிலே தியானமே செய்ய முடியாது...

குருவின் உதவி என்ற ஆற்றல் என்பது எல்லாவற்றையும் மாற்றி விடும் வல்லமை கொண்டது என்பதால், குருவை அண்டி தியானத்திலே ஆழ்ந்து செல்ல வேண்டியது தான் வழி.

மனதின் ஆழம் வரை மட்டும் தான் இந்த பதிவுகள் வேலை செய்ய முடியும்!... மனதை தாண்டி இருக்கிற குருவின் ஆற்றலிடம் இந்த வினைகள் என்ன செய்து விடும்? புலன் உயர்வை கடந்து விரிந்து இருக்கிற குருவிடம் இந்த வினைகள் எல்லாம் புஸ்வானமாகிப்போகும்! குருவிடம் அந்த வினைகளின் தொகுப்பான மனதை விட்டு விட்டு தவத்தை ஆரம்பிப்போம்... வினைகளின் தூய்மை என்பது நாம் செய்யும் நற்செயலினால் வரும் என்பார்கள். தியானத்தை விட நற்செயல் எதுவும் இல்லை.


வினைப்பதிவுகள் எல்லாம் அப்படியே குருவின் காலடியில் விட்டு விட்டு, நிமிர்ந்து குருவின் கையை பிடித்துக்கொண்டு எழுச்சியுடன் செய்வோம் தவத்தை...

குருவே தான் இருப்பு நிலை.... என்று ஆழ்ந்து செல்லவேண்டும். குருவின் ஆற்றலை கண்டால் தாங்க மாட்டோம்... புலன் அறிவிலே நின்று கொண்டு அந்த அபரிமிதமான ஆற்றலிடம் நீர்த்துப் போய் விடவேண்டாம்.

குரு, இருப்பு, நான் என்ற மூன்று நிலைகள் தனித்தனியாக இயங்காமல், குருவின் மூலம் இருப்பை உணர்ந்து நான் என்ற முனைப்பைக் கரைத்து ஆற்றல் வெளியோடு கலந்து விடல் தான் நாம் செய்ய வேண்டியது.


வினைப்பதிவுகள் எல்லாம் குருவிடம் சரணடைந்த சீடனின் பக்கமே செல்லாது ஓடும்.

வாழ்க வளமுடன்.
Sundararajan.R

Tuesday, July 07, 2009

தேவை தவமும் குருவை அணுகுதலும்

வாழ்க வளமுடன்.

குருவின் திருவருளால் எந்த நிலையிலும் ஒருவர் அமைதியை பெற முடியும்.

தேவை தவமும் குருவை அணுகுதலும்.

எண்ணமின்றி எதுவுமில்லை. எண்ணத்திற்கப்பாலும் எதுவுமில்லை என்று அடிக்கடி நம் குரு நாதர் சொல்வார்.

நாம் இயல்பாய்க்காணும் நம் வாழ்வு என்பது நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியதாகவே இருப்பதை அமைதியாக இருந்து விசாரித்தால் தெளிவாகும்.

எப்போதும் நாம் காணும் எண்ணத்தின் அழுத்தமே தான் இரவிலே நமக்கு கனவிலும் தொடர்கின்றது. பகலிலே நம் எண்ண அலை எப்படி இருக்கின்றது? எவ்வளவு நேரம் குருவைப் பற்றி இருக்கின்றது? என்று பார்த்தால் குறை எங்கே என்று புரிந்து போகும்.

ஏந்த தவமும் நன்றாக அமைய எண்ண அலைகள் குறைந்து வர வேண்டும். தவம் மணிக்கணக்கில் செய்தாலும், எண்ணத்தின் அழுத்தம் குறையாமல் இருந்தால் அங்கே தவமே நிகழ வில்லை எனக்கூறலாம். எண்ணத்திலே அழுத்தமாக உள்ளதை குருவின் மேல் திருப்பி விட்டு, கடமையை செய்து வாருங்கள்!

எதையும் அடிக்கடி நினைந்து வர, அதுவாகவே நனவிலும், கனவிலும் வருவதை காணலாம். எல்லாம் பழக்கத்திலே இருக்கின்றது.

சும்மா கடமைக்கு, எங்க வீட்டு ஐயாவும் கச்சேரிக்கு போகிறார் என்பது போல கண்ணை மூடி உட்கார்ந்து, பஞ்ச பூதத் தவம், நவக்ரகத் தவம் என்று மாற்றி மாற்றி செய்து விட்டால் எதுவும் மாறாது.

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்கானும்.

எதை நினைந்தால் உயர்வு உண்டாகுமோ அதையே நினைந்து வர வர, மாற்றம் கண்முன்னே நிகழும்.

எந்த எண்ண அழுத்தத்தையும் விட, குருவே உயர்ந்தவர். அவரின் வழியை முறையாக தொடர்ந்தவருக்கு அமைதி என்றுமே நிலைத்து விடும்.

வாழ்க வளமுடன்.
Sundararajan.R

Monday, July 06, 2009

குரு வணக்கம்

அண்டமதில் உருவெடுத்து அறிவைப்பெற்று
அவ்வறிவு ஒன்றுமுதல் அறதாகிப்
கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்
கோடான கோடி எண்ணி அனுபவித்துக்
கண்டபலன் எனையறிய நினைந்தேனப்போ
கருத்துணர்த்திக் கனல்மூட்டிக் கருவாம் ஞானக்
குண்டலினி எனும் என் மெய்யுணர்வு எழுப்பிக்
குறித்து எனையறிவித்த குருவே அன்பே!

சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறியச் செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப்பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தப்பெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷச் செய்தி இதுவே.

அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வோம்
-வேதாத்திரி மஹரிஷி
ஞானமும் வாழ்வும் (7)