வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, May 31, 2007

குரு சீடர் உறவு--குரு என்ற தாய்மை!

வாழ்க வளமுடன்அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக! வாழ்க வளமுடன்!எங்கும் நிறைவாக இருக்கும் நிலையான இறை நிலையுடன் எப்போதும் உறைந்திருக்கும் குருவின் பாதத்தில் சரணடைதலை சமர்ப்பிக்கிறேன்.இந்த உலகம் நிறைவாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று எப்படி அறிவது?உலகமென்பது நமக்கு நம் மனதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.எல்லாமே நிறைவாக இருக்கிறதா? என்று நமக்கு என்றும் ஒரு கேள்வி எழவே செய்கிறது! இதற்கு காரணம் ஆராய்கையில் நமது மனதில் இருக்கும் அசைவுதான் முதலாக இருக்கிறது! இந்த உலகம் நிறைவாக இருக்கிறதா? என்பது நாம் நிறைவாக இருக்கிறோமா? என்றைய கேள்வியின் மறு முனை! நாம் முதலில் நிறைவாக இருக்கிறோமா என்று நாம் அறிய வேண்டும்! எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும் எனில் நாம் என்ன செய்ய வேண்டும்? நிறைவான நிலையுடன் இணைய வேண்டும்! நிறைவாக விளங்கும் குருனாதரிடம் சரணடைய வேண்டும்! எல்லாம் நிறைவாகவே தான் இருக்கிறது என்ற அமைதியானது நமக்கு உணர்வாக வேண்டும்! நமது மனமானது எதனை நோக்கி இருக்கிறது என்ற புரிந்து கொள்ளல் நமக்கு அவசியம் வேண்டும்! குருனாதரின் மலரடியான இறைனிலையில் நாம் லயித்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் அவரவர் அளவில் சரியாக இருக்கிறோம்! ஆனால் அனைவரின் ஆற்றலுக்கும் அனைத்துக்கும் மூலமான இறைனிலை என்ற சரியான வழியில் நாம் இருக்கிறோமா என்று நாம் ஆராய வேண்டும்! நமக்கு மட்டும் நாம் சரியாக இல்லாமல், நமது மனதிற்கு மூலமான இறைனிலையோடு இணைந்து, நம்மை நாம் ஆராய்கையில் நமக்கு எந்த தவறும் எந்த குழப்பமும் இல்லாத நிலையை அடைந்திருப்போம்! அந்த நிலையில் மனமானது, நமக்கு நிகழும் எதற்க்கும் காரணம் செயல் விளைவு என்றாகிய தெய்வ திருச்சட்டம் தான் என்று புரிந்து அமைதியை அடைந்து இருக்கும்! "என் வாழ்வில் எனக்கு அமைதியே இல்லை" என்று நிற்கின்ற அனைவருக்கும் இறைவனின் திருச்சட்டமாகிய செயல் விளைவை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்து விடும்! எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் நமக்கு என்றும் அமைதி தான்! எப்படி எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது? அது தான் நிறைவு! " நிறைவு" என்பதை சொல்வது யார்? எது? ஏன்? நிறைவு என்பதை உணர்வது ஆறாவது அறிவாகிய "மனது". நிறைவு என்பது மனதின் மூலமாகிய அந்த "பேரறிவு"! இறைவன் என்றதும் நாம் உணர வேண்டியதை வார்த்தையாகச்சொன்னால் அது தான் " நிறைவு" ! ஏன் எனில் நிறைவு தான் எப்போதும் இருக்கிறது! இந்த உலகம் சரியாகத்தான் போகும்! நிறைவின்றி வேறு ஏது இறை நிலையின் தன்மையாக நமக்கு சொல்வதற்க்கு இருக்கும்? எண்ணற்ற விசயங்கள் இதற்க்கு எதிராக இருக்கிறது! முதலில் இந்த சமுதாயம், இந்த உலகம் அமைதியாக இல்லை. சுற்றி இருக்கும் எதுவும் சரியாக இல்லை என்ற நிலை நமக்கு முன்! ஆனால்....இதை எல்லாம் நமக்கு சொல்லும் மனதானது, நடப்பதை செயல் விளைவாக ஏற்காத தன்மையுடன் இருக்கிறது! இதை நாம் தன்முனைப்பு என்றும் சொல்லலாம்! ஆனால் மறைவாக இருக்கும் உண்மை எதுவெனில், ஏற்றுக்கொள்ளாத நிலை என்பது "சரணடையாத" நிலை! சரணடைதல் என்பது, எதையும் ஏற்கிற தன்மை தான்! எதையும் மனதால் நாம் எதிர்க்கும் வரை தான் அது நம் முன் நிற்கும்! நிறைவான இறை நிலையுடன் நாம் நிறைந்து நிற்கும் பழக்கம் பெற்றால் நமக்கு எதிலும் என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு வந்து விடும்! அந்த சரணடைதலுக்குத்தான் நமக்கு " குரு" என்ற தாய்மை தேவைப்படுகிறது! தாயிடம் தஞ்சம் புகும் பிள்ளைக்கு எப்படி தேவையானதை தருகிறாளோ, அது போலத்தான் குருவின் கருணையும்! குருவின் முன் " உள்ள " சரணாகதி தான் நமக்கு எல்லாவற்றையும் உணர வைக்கும்! "உள்ள" சரணாகதி எல்லாவற்றையும் தரும் என்றால் எதிர்ப்பார்ப்பு ஆகிவிடாதா?........என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும்! குருவானவரின் முன் நிற்கின்ற சீடனுக்குத்தான், செயல் விளைவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் இறைவன் எல்லாவற்றையும் முறையாக நடத்துகிறான் என்ற உணர்வு மிஞ்சி நிற்கிறது! அந்த பாக்கியம் பெறும் சீடன் எப்போதும், தாயின் மடியில் தலையை சாய்த்து ஆனந்தம் பெறுகிறான்! இறை நிலையின் தன்மையாய் தான் எந்த நிகழ்வும் நடக்கிறது என்ற தன்மை நமக்கு வரவேண்டும்! இறை நிலையை தாண்டி எதுவும் நிகழ வாய்ப்பில்லை! இயற்கைக்குள் எல்லாம் அடங்கிப்போகும்! இயற்கையைத்தாண்டி எதுவும் நிகழாத வகையில் இயற்கை சக்தியுடன் எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது! எல்லாம் சரியாக நிறைவாகவே இருக்கிறது என்ற பேருண்மையை நாம் உணர இறை நிலை தவத்தில் குருவின் ஆனந்தத்தில் உறைய வேண்டும்! குரு என்ற தாய்மையிடம் நாம் முழுவதுமாக சரணடைவோம்! தாயிடம் சரணடைந்த எண்ணற்ற புதல்வர்களில் நாமும் ஒருவராக மாறுவோம்! தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவும் பெறும் வண்ணம் நின்னை சரணடைந்தேன்!என்ற பாரதியின் வரியாய் நம் தாயிடம் சரணடைவோம்!வாழ்க வளமுடன்!

Tuesday, May 29, 2007

குரு சீடர் உறவு--அன்பின் அதிர்வலை!

உலகத்தில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன்னுள் அடக்கி மறைபொருளாக நிறைந்து கொண்டு வழி நடத்தும் இறையாற்றலோடு இணைந்து இருக்கும் குரு நாதருக்கு என்றென்றும் சரணங்கள்! உலகில் நிகழும் எண்ணற்ற நிகழ்வு, நாம் மனத்தைக்கொண்டு தான் செய்கிறோம்! எந்த நிகழ்வு நிகழ வேண்டும் என்று தீர்மானிப்பது இறை நிலை ஒன்றே தான்! அதனால் தான் நம் குரு நாதர் செயல் விளைவு தத்துவத்தை நமக்கு நன்றாக விளக்கினார்கள்! கடை பிடிக்கவும் செய்தார்கள்! நாம் சில நேரங்களில் நிகழ்வதை ஏற்கவோ, ஜீரணிக்கவோ இயலாத தருணம் வரும் போது என்ன செய்வது? நம்மை புண்படுத்துகிற மாதிரி செயல் செய்பவர்கள் எல்லாம் எல்லா வசதிகளை பெற்று வாழ்கிறார்களே! என்றெல்லாம் நமக்கு தோன்றும்! உலகத்தை மாயை என்போம்! அது தரும் வசதி வாய்ப்பு அனைத்தும் கூட மாயை தான்! ஏனெனில் தனக்கு முழுமை தருவதற்காகவே ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு என்று ஒரு செயலை செய்து வருகிறார்!இதில் நாம் அறிய வேண்டியது என்னவெனில் நாம் எப்படி இருக்க வேண்டியது என்பது மட்டும் தான்! என்ன தான் வாழ்க்கையில் அவரவர் செயல் செய்து வசதிகளை அனுபவித்தாலும் அவர்களும் தனக்கு முழுமை தரும் பாதை இது தான் என்று தானே செயல்களை துணிந்து செய்கிறார்கள்? மற்றவர் செயல்களை பார்த்து நாம் ஏன் கலங்க வேண்டும்? செயலுக்கு விளைவு என்று இறை நிலை அவரவருக்கு செய்ய வேண்டியதை காலத்தோடு செய்யும் போது நாம் ஏன் பிறர் செயல்களை நோக்க வேண்டும்? எல்லாம் வல்ல குருவின் ஆற்றலானது தீயவைகளை தடுத்து நம்மை வழி நடத்துமா? நிச்சயமாக...வழி நடத்தும்! ஏனெனில் Fraction demands Totality supplies!! என்பது தான் நம் குரு நாதர் நமக்கு சொல்வது! எப்போதெல்லாம் நம்மை தாண்டி சில செயல்கள் நமக்கு நிகழ்கிறதோ அப்போதே நாம் அந்த நிகழ்வுகளை களைய முயற்ச்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகிறது! நம் கட்டுப்பாட்டில் இல்லாத விசயங்களை இயற்கையிடம் தந்து விடுவது நமக்கு நல்லது! புத்தர் பிறந்த போது அவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்கள் கணித்தார்கள் ! முதல் ஜோதிடர்... மூன்று என்று கையை உயர்த்தினார்! இரண்டாம் ஜோதிடர்... இரண்டு என்று கையை உயர்த்தினார்! மூன்றாம் ஜோதிடர் ... ஒன்று என்று கையை உயர்த்தினார்! இதை அறிய ஆவல் கொண்ட மன்னன்... முதல் ஜோதிடரை கேட்டார்... அவர் சொன்னது .... 1. குழந்தை புகழ் பெற்று மக்களை ஆளும் . 2. அதிகாரம் மிகுந்து நாடு முழுவது புகழ் பெற்று ஓங்கும் 3. துறவறம் மேற்கொண்டு மக்களை வழி நடத்தும்! இரண்டாம் ஜோதிடர்.... 1. புகழ் பெற்று நாட்டை ஆளும் 2. துறவறம் மேற்கொள்ளும்.மூன்றாம் ஜோதிடர் சொன்ன ஒரே கருத்து.... 1. நாட்டை விட துறவறம் மேற்கொண்டு நல்ல ஞானம் பெறும் என்பது தான்! இந்த மூன்றாம் ஜோதிடரின் ஆணித்தரமான கருத்து மன்னனை நிலைகுலைய வைத்தது... அவர் மீது கோபம் கொண்ட அரசன் அந்த ஜோதிடரை சிறையில் அடைத்தார்! இருப்பினும் முதல் ஜோதிடரின் ஆலோசனையின் படி சித்தார்த்தனை வெளி உலகை அறியாத படி வளர்த்தார் மன்னர்! ஒரு கணத்தில் வெளி உலகையும் அதில் நிலவும் செயல்களும் சித்தார்த்தனுக்கு தான் வாழ்ந்த வாழ்வே ஒரு மாயை தான் என்று உணர நாட்டை விட்டு காட்டை நோக்கி தப்பி ஓடினார்! ஞானம் பெற்ற பிறகே அவர் சீடர்களுடன் காவி உடை அணிந்து அவரின் நாட்டில் நுழைந்தாராம்! இந்த நிகழ்வை நாம் அறிவோம்! இதில் நாம் பார்க்க வேண்டியது... சித்தார்த்தன் துறவறம் தான் மேற்கொள்ளுவான் என்று உண்மையை ஆனித்தரமாக சொல்லியதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடரின் நிலை தான்! அந்த உண்மையை யாரும் ஏற்க வில்லை! யாரும் நம்பவில்லை! ஆனால் அது தானே நடந்தது? உலகில் ஒரு மகான் தோன்றுகிறார் எனில் அதற்க்கு எண்ணற்ற மக்களின் எண்ண அலைகள் தான் காரணமாக இருக்கிறது!தனி மனித அமைதியின் மூலம் உலகம் அமைதியை அடையும் என்று உண்மையை சொன்ன குரு நாதரின் முயற்ச்சியும் ஆசிர்வாதங்களும் சீடர்களாகிய நமக்கு சூக்கும நிலையிலும் கருமையத்தோடு இணைந்தும் வழி நடத்துகிறார்! குருவின் ஆற்றல் ஆனது நம்மை நிச்சயம் வழி நடத்தும். ஆனால் நாம் அந்த ஆசிகளை பெறும் நிலையில் இருக்க வேண்டும்! அமைதியில் இருந்தால் தான் உணர்வுகளை அறிய முடியும்! நம்மை புண்படுத்தும் அன்பர்கள் இருப்பினும் அவர்களையும் நாம் வாழ்த்தியாக வேண்டும்! அப்போது தான் நாம் குருவின் வழியில் வாழ முடியும்! தவத்துணையால் உயர்ந்தார்கள் தனைக்காத்தோர் நலம் செய்தோர் தாய் தந்தை குரு தனியே காப்பின்றி இருப்போர்கள் சிவத்தறிஞர் இவர்கட்கு சிறிதோ பெறிதோ துன்பம் சிந்தனையற்றோர் தந்து மனவருத்தம் விளைவித்தால் பவத்தின் பலன் அவ்வருத்த அலை மோதி அவ்வேகம் பழி செய்தோர் உடல்காந்தம் உயிர்மூளை கேடு செய்யும் அவத்தின் விளைவவருக்கு அகண்ட வான்காந்தமும் அரும் நண்பர் அனைத்து பொருள் அவர்வாழ்வில் எதிர்ப்பாகும்! இந்தக்கவியில் குரு நாதர் சொல்வதை பார்க்கும் போது, எவரும், தவம் செய்பவர்களுக்கும் தவத்தில் உயர்ந்த ஞானிகளுக்கும் துன்பமோ மன வருத்தம் ஏற்படாதவாறு வாழ வேண்டும் என்று விவரிக்கிறது! எதிரியையும் நாம் வாழ்த்த வேண்டும் என்று நம் குரு நாதர் சொன்னது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெளிவாகிறது! நாம் மனத்தை இறை நிலையில் செலுத்திக்கொண்ட நம் கடமையை தொடர்வோம்! எந்த தவறு செய்தாலும் எவருக்கும் இறை நிலையானது செயல் விளைவு தத்துவத்தின் படி தன் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால் நாம் அனைவரும் குருவின் ஆற்றலோடு அவரின் வழிக்காட்டுதலை நெறியை கொண்டு செம்மையாக வாழ்வோம்! இறை நிலையின் தன்மையான கருணை நிலையில் இருந்து அன்பின் அதிர்வலைகளை அனைத்து உயிர்களுக்கும் செலுத்திக்கொண்டே இருப்போம்! வாழ்க வளமுடன்!

comparision of WCSC

வாழ்க வளமுடன். நம்முடைய மனவளக்கலை மன்றம் ஒரு மிகச்சிறந்த முறை. ஏனெனில் ஒரு விதத்திலும் அறிவிற்க்குப்புறம்பான செயல்களில் ஈடுபடாமல் ஆன்மாவை பேரறிவோடு இணைக்க உதவுகிறது. ஒவ்வோர் மகான் வாழ்ந்த போது அவரவர் சுற்றத்தாரின் மன நிலைக்கு ஏற்ப அந்த மகான்களின் உபதேசம் இருப்பதைக் காணலாம்! இது சமுதாயத்தோடு இணைந்து அவர்களை தங்களின் வழிக்கு திருப்பி விடுவது தான் குருவின் நோக்கமாக இருந்தது. ஆனால் வள்ளலார், ரமண மகரிஷி மற்றும் குரு வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்கள் எல்லாம் எந்த விதத்திலும் உண்மையின் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்ததில்லை! மௌனம் என்றும் அத்வைதம் என்றும் அசையாமல் அறிவை பேரறிவில் இணைத்து இந்த மகான்கள் சமுதாயத்தில் இருந்து கொண்டே தான் இருந்தார்கள்! மற்ற ஆன்மீக மார்க்கங்கள் எல்லாம் செல்ல வேண்டிய கடைசி வழியை நமக்கு நேரடியாக தந்தது ஒரு வகையில் ஒரு பாக்கியம் என்றாலும், அதை பெறும் தகுதி என்பது எல்லோருக்கும் இருக்க வில்லை! இதனால் தான் வள்ளல் பெருமான் " கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்றார்கள். ரமண மகரிஷி அவர்களிடம் நீங்கள் ஏன் எப்போதும் அத்வைத நோக்கிலேயே உங்கள் பதிலை சொல்கிறீர்கள் என்று கேட்ட போது, " என்ன செய்வேன், என் புத்தி இருக்கும் இடத்தைப் பொறுத்துத்தானே என்னால் பேச முடியும்! " என்றாராம். நம் குரு நாதரோ, " இறைவெளியோடு எண்ணத்தை கலக்கவிட்டு ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க்க நிறை நிலையே தானாக உணர்வதாகும் " என்றார். இது தான் சமுதாய்த்திற்க்கு இறை நிலை காட்டும் கருணை நிலை! நம் குருனாதரின் கருணை நிலையே தான் நமக்கு நிறைய கவிகளும் தத்துவங்களும் கிடைத்திருக்கின்றன. இவை எல்லாம் புரிந்து கொள்ளும் போது சமுதாயம் அமைதியை பற்றி விடும்! ஆனால் நமது மன்றத்திலோ, வள்ளலார் மற்றும் ரமண மகரிஷி அவர்களின் ஆன்மீக நிலையத்திலோ மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாததற்க்குக் காரணம் குரு நாதர்கள் எல்லாம் பேரறிவில் இருந்து விலகி நில்லாமல் இருந்தது தான் என்று தோன்றுகிறது! இறை நிலையானது, எதை நிகழ்த்துகிறதோ அதாவது நம்மை சுற்றி எது நடக்கிறதோ அது தான் இறைவன் இயற்கையாக இருந்து நடத்துகிறான் என்று ஏற்கும் தன்மை நமக்கு வர வேண்டும். இயேசு நாதர் தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொண்டதைப்போல நம்மை சுற்றி நிகழ்வதை ஏற்கும் தன்மை என்பது, இயற்கையோடு ஒத்து வாழும் தன்மை... நமக்கு கிடைக்கும்! இது கோழைத்தனம் அல்ல! இது எதையும் சந்திக்கும் திறன்! அது நமக்கு அவசியம் வேண்டும்! காலம் தானாக நம் முயற்சிக்கு சரியான பலனைத்தரும்! வாழ்க வளமுடன்.

what is the difference between love and attachment

வாழ்க வளமுடன்.அன்பு என்பது உணரப்படுவது மட்டுமில்லாது செயலில் வருவது இறை தவத்தில் தான்!"பாசமாம் பற்றறுத்து என்னை பாரிக்கும் ஆரியனே" என்று திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்! மனது கொண்டுள்ள எல்லா பற்றுக்களில் இருந்து மனதை விடுவிக்கும் போது மனது என்பது எளிதாக இறைனிலையில் நுழைகிறது! எதுவும் இன்றி எல்லாமாகி விரிந்து இருக்கும் நிலை தானே இறை நிலை!"அன்பே சிவம்" என்ற திருமூலரின் வாக்கு மிக உண்மை!

ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை
பாசத்துள் வைத்து பரிவு செய்வார்களை
!தேசுற்றறிந்து செயலற்று இருந்திடில்
ஈசன் வந்தெம்மிடை ஈண்டி நின்றானே!

இப்படி பார்க்கும் போது ஈசன் மீது கொண்டுள்ள பாசம் மட்டும் தான் மனித சமுதாயத்திற்க்கு தேவை!அது மட்டும் தான் அன்பை உணர உதவும்! நம்முடைய பெற்றோர் மட்டும் குடும்பத்தின் மீதான பாசம் என்பது பற்று தான்! அதை வைத்துக்கொண்டு நாம் இறைவனை உணர முடியாது! நம் குருனாதர் சொன்ன மாதிரி " நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம் ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும் நுழையா! இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்? " வாழ்க வளமுடன்.

How to identify a true Vethathirian?

1. He will be very clear in Vethathirian philosophy.
2. He will be physically, mentally, socially and spiritually healthy.
3. He will lead a life of knowing the purpose of his birth.
4. He will bless this world for peace and every individual he meets, whole heartely.
5. Sense of love, compassion and respect for others will be in nature.
6. He will be a person with adjustment, tolerance and sacrifice.
7. He will never comment, command (or) demand any body.
8. He will never find faults in others.
9. He will accept people as they are.
10. He will not be egoistic. {He knows very well that if a person has EGO then Everything Goes Out}.
11. He will follow limit and method in everything.
12. His sense organs will be under the control of his consciousness.
13. He will introspect himself each and every minute in his life.
14. He will do an action foreseeing its results before hand (His thought, word and action will be good because he knows that GOD comes as result for every action)
15. He always enjoys in the ocean of ecstasy through deep meditation.
16. He will sacrifice the name and fame which he gets from the society to GURU.
17. He will do his duties properly in such a manner that one duty is not affected by another.
18. He will spread Vethathiriam not only through his selfless service but also being himself a ROLE MODEL OF VETHATHIRIAM.

“LET US ALL BE TRUE VETHATHIRIANS AND SOW THE SEEDS FOR WORLD PEACE”“WIN THE WORLD WITH PEACE”

Thursday, April 05, 2007

மனம் என்பது என்ன

நம் எண்ன அலைகளின் கூட்டுத் தொகுப்பே. அலை என்பது எண்ன ? நிலை அசைந்தால் அது அலை ! நிலை என்பது எண்ன ? சுத்த வெளி, அதாவது நம்மில் அறிவாக இயங்கும் அந்த சுத்த வெளி. இவ்வளவுதான் விளக்கம் - வேதாதிரியம் என்ன அழகாக ஆதி சங்கரருக்கு விளக்க உரை தருகின்றது பாருங்கள்.
இதில் இனிமை என்னவென்றால் CPS என்று சொல்லக் கூடிய மன அலைச் சுழல் அலகைக் கொண்டும் இந்த உண்மைகளை ஆராய்கின்றது வேதாதிரியம். உங்கள் மன அலைச் சுழல் 15 CPS என்று கொள்வோம். அப்பொழுது உங்களுக்கும் சுத்த வெளிக்கும் உள்ள தூரம் எவ்வளவு? 15 CPS அவ்வளவு தான் - ஏனென்றால் சுத்த வெளியை அறிவாக உணர 0 CPS வரை நீங்கள் செல்ல வேண்டும் . இது தான் இறை நிலைக்கும் உங்களுக்கும் இடையே உள்ள தூரம் வேதாதிரிய இறைப் பாதையில்.

சில சூத்திரங்கள்

1.இறை நிலை என்பது பேரறிவு.
2. இது பருப் பொருட்களில் பரிணாமம், இயல்ப்பூக்கம், செயல்-விளைவு என்ற விதங்களில் தன்னை வெளிப் படுத்துகின்றது .
3. பேரறிவு உயிரற்ற பொருட்களில் 1.pattern 2.precision 3.regularity என்ற மூன்றாக செயல் படுகின்றது .
4. பேரறிவு உயிரினங்களில் 1. Discrimination 2. Experience 3. Cognizance என்ற மூன்றாக செயல் படுகின்றது .
5. மனிதனில் பேரறிவு கரு மையம் என்ற செயலுக்கு ஏற்ற விளைவத் தரும் ஒரு அறிவு மையமாக தன்னை வெளிப் படுத்துகின்றது .


இந்த அறிவியல் விளக்கங்கள் தான் 'இந்த நூற்றாண்டின் தத்துவ ஞானி' தந்த அறிவு களஞ்சியங்கள் . இவை தான் வேதாதிரியத்தை 'logical spritual path' ஆக அடையாளம் காட்டுகின்றன .
இறைவனை அடையாளம் காண்பது வேதாதிரியத்தில் மிக எளிது என்பதை மகரிஷியின் வழி நின்றோர் அறிவார். அவரின் வழி நின்ற மனித மனங்கள் தம் வாழ்வில் உயரும் என்பது மட்டும் திண்ணம்.
வா ழ் க வை ய கம் ! வா ழ் க வ ள மு டன் !

'அறிவே தான் நான்' என்பது எப்படி

ஏன் அறிவு இறைவன்?
இந்த பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களிலும் அறிவு அதன் தன்மையாய், இயக்கமாய் ஒளிந்து இருக்கின்றது.
ஒரு அணுவை எடுத்துக் கொள்வோம். proton ஐ மையத்திலும் electron ஐ வட்டப் பாதையிலும் வைத்து இருக்கும் அந்த அறிவு எது ? சூரியனை நடுவில் வைத்து கிரகங்களை அதைச் சுற்றி ஓட வைத்த அறிவு தான் எது ? 365 நாட்களுக்கு ஒரு முறை தவறாது சூரியனை வட்டம் அடிக்கும் அந்த பூமியின் அறிவு தான் என்னே ? தன்னைத் தானே சுழலும் வேகத்தை சனி கிழமைக்கும் புதன் கிழமைக்கும் ஒன்றாகவே வைத்திருக்கும் பூமியின் அறிவில் என்னே சீர்மை ?
ஆலமரத்திலிருந்து விழும் விதைகள் மிகச் சரியாக ஆலமரமாக அதே விழுது அமைப்புடன் மீண்டும் வருவது எந்த அறிவால் ? தன் சுழைகளை அடுக்கடுக்காக அழகாய் வைக்கும் ஆரஞ்சு பழத்தின் அறிவு தான் என்னே ? அமீபா மனிதனாய் வந்தது எந்த அறிவினால் ? தன் இதழ்களை தானே விரித்து அடுக்கடுக்காய் அவைகளை அடுக்கிக் கொள்ளும் தாமரையின் அறிவாய் விளங்குவது எது ? நாம் வாங்கும் சுவாச காற்றை உயிர் ஆற்ற லாக மாற்றும் அறிவு யார் ? உண்ணும் உணவை தானே செறித்து அடிப்படை ஆற்றல் துகள் ஆக பிரிக்கும் அந்த அறிவு எது ?
இதையெல்லாம் அறிவு என்று ஒப்புக்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா என்று கேட்டால் சிந்திக்கும் திறன் பெற்ற ஒரு நாத்திகரோ ஆத்திகரோ 'இல்லை' என்றே தான் பதில் சொல்வார்.
அவருக்கு ஆக்கினா தீட்சையும் துரிய தீட்சையும் தந்து மன அலை சுழலை குறைக்கும் யுக்தியில் திறன் பெறச் செய்தால் அவர் மனம் 'அந்த அறிவு தான் இறை நிலை - அதை விட மேலான ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை' என்ற நிலைக்கு சீக்கிரமே வந்து விடும். இந்த சூழலில் மட்டும் ஒருவர் 'அறிவே தெய்வம்' என்று ஒப்புக் கொண்டால் போதுமானது. 'அறிவே தெய்வம்' என்று ஒப்புக் கொள்ள தேவையான மனத்தையும் அறிவையும் பெற 1. தத்துவம் 2. யுக்தி என்ற இரண்டும் மிக முக்கியம். தத்துவம் , யுக்தி என்ற இரண்டுமே ஊற்றாய் பொங்கி வரும் இறை பாதையே வேதாதிரியம்.
இதை நாம் பெற்றது நம்மை பெற்றோர் செய்த முன் புண்ணியத்தால். அவர் தம் பதிவு தானே நம்மில் விளைந்து இன்று இப்படி ஒரு குருவின் காலடியில் நம்மை கிடத்தி இருக்கிறது...
வா ழ் க வை ய கம் ! வா ழ் க வ ள மு டன் !

Wednesday, April 04, 2007

The Two-Fold Culture of Maharishi...

நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்... துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்... வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Thursday, March 29, 2007

உங்களுடைய அறிவிற்கு ஒரு சிறு சிந்தனை

அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளேகன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்.உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்... -- குரு.வேதாத்திரி மகரிஷி.

நம் குருனாதர்

மோனத்தில் வாய் மூட எண்ணம் தோன்றும்முனைந்தவன் யார்?மோனத்தின் பெருமை தன்னை எளிதா சொல்ல.?மோனமே எல்லாவற்றுக்கும் அடித்தளமாம்.மிக விரிவு.எல்லை இல்லை.இவை எல்லாம் நம் குருனாதர் நமக்காக எழுதி வைத்தவைகள்.அன்புள்ள நண்பர்களே,குருவின் கவிகளை நம் சிரத்திள் வைப்போம்.வள்ளல் பெருமானார் திருவாசகத்தை தன் சிரத்தில் எப்போதும் வைத்த மாதிரி.சிரத்தில் என்றால் நம் மூளைக்குள் ஏற்றுக்கொள்வோம்.நம் குருவிற்கு நாம் செலுத்தும் அன்பின் அடையாளமாக அவரின் சொல்லை பரப்புவோம்.

உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போலஉயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு.என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன் எனக்கு?என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்....

இவ்வார்த்தைகளை நாம் நம் சிரத்தில் கொள்வோம். மிக நுணுக்கமான விசயம் என்பதால், மிக நீண்ட பயிற்சி அவசியம். வாழ்க்கை முழுவதும் நம் அப்பனிடம்(குருவினிடம்) நம் சரணாகதியை சமர்ப்பிபோம்.ஒரு நாள் வரும்... நம் வாயால் நாம்,

உன்னுள்ளே நான் அடங்க என்னுள்ளே நீ விள ங்கஉனது தன்மை ஒளிர எனது உள்ளத்தூய்மை பெற்றேன்இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேர்று பெற்ற பின்னர்எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை...

என்று நாமே நம் குருவின் பாதத்தில் விழுந்து ...அப்பா...என்னை..இப்பிள்ளையை இன்று போல் என்றும் உங்களின் குழந்தையாகவே வைத்துருங்கள் என்று ஆனந்தத்தால் உருகி அழுவோம்.தன் செயல் எண்ணி தவிப்பது தீர் ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்நின்னை சரணடை ந்தேன் ...என்று பாரதியின் கவியாய் நம் குருவின் பாதத்தில் சரண் புகுவோம்....உஙகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

Wednesday, March 21, 2007

அறிவியல் மனம் பற்றி என்ன சொல்லுகின்றது என்று பார்ப்போம்

பொதுவாக எல்லா விதமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களாலும் ஒப்புக் கொள்ளப் படும் கருத்து இது ஒன்று தான் : 'மனம் என்பது மூளையின் இயக்க நிலை ' . Beyond this, any definition towards reality is always debated. அறிவியல் இதற்கு மேல் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஆனால் சுவாமீஜியோ இங்கே தான் தான் மனம் பற்றிய வரையறையை துவக்குகின்றார்... and he reaches greater heights in his simpler words !நாமும் இதை சற்று ஆராய்ந்து பார்க்கலாம் . சுவாமிஜியின் காந்த தத்துவத்த்திற்கு வருவோம்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள் இப்பொழுது அந்த கிண்ணத்துக்கு க்கு என்ன பெயர்?தண்ணீர் கிண்ணம்.அதே கிண்ணத்தில் எண்ணை இருந்தால்?எண்ணை கிண்ணம்.அப்பொழுது ஒரு களத்தில் நாம் எண்ணங்கள் எல்லாம் இருந்தால்? அந்த களத்துக்கு என்ன பெயர்?எண்ணக் களம் .அப்பொழுது நாம் ஜீவ காந்த களம் முழுவதுமே எண்ணங்கள் / எண்ன அலைகள் இருந்தால்? அதை எப்படி அழைப்பது?எண்ணக் களம் என்று தான் அழைக்க வேண்டும் . இந்த ' எண்ணக் களம் ' என்ற தமிழ் சொல்லுக்கு synonym (மறு பெயர்) தான் ' மனம் ' . இப்படி தான் சுவாமிஜி ஜீவ காந்த களத்துக்கு மனம் என்று ஒரு பெயர் வைக்கிறார்கள்.சரி , அறிவியல் அறிஞர்கள் மூளை பகுதியிலேயே தான் ஆராய்ச்சியை ' பார்க் ' பண்ணி வைத்து விட்டார்களே ? கவலை படவேண்டாம் ... இருக்கவே இருக்கின்றது நாம் vethan - yogon theory. அதைக் கொண்டு விளக்கி விடலாம் !மூளை இயங்கினால் மனம் என்று ஒப்புக்கொள்கின்றார்கள் அல்லவா? மூளையின் இயக்கம் என்பது என்ன ? மூளை ஏதால் ஆக்கப்பட்டது? மூளை என்பதும் ஒரு அணு கூட்டமே! காந்தம் இல்லாத அணு உண்டா பிராபண்சததில் ? மூளை செல்களில் இருந்து காந்த அலைகள் வெளியே வந்து கொண்டே தான் இருக்கும்.இந்த காந்த அலைகள் தான் என்ன ?எண்ணங்கள் ... "Thoughts are the waves sent by brain cells " - இதை அறிவியல் மறுப்பதில்லை.இந்த இடத்தில் நாம் ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்க்கலாம்.காவேரி எங்கு உற்பத்தியாகின்றது?குடகு மலையில்.எங்கெல்லாம் பாய்கின்றது?பல மாநிலங்களில்.பாயும் எல்லா மாநிலங்களிலும் காவேரி என்று தானே அழைக்கப்படுகின்றது?ஆம்.மனம் எங்கு உற்பத்தியாகின்றது?மூளை செல்களில்.எங்கெல்லாம் பாய்ந்து பரவுகின்றது?நமது ஜீவ காந்த களம் முழுவதுமே.அப்பொழுது நாம் ஜீவ காந்த களத்தை எப்படி அழைக்க வேண்டும் ?மனம் என்று தானே அழைக்க வேண்டும் ... அப்படி தான் நாமும் அழைத்துக்கொண்டு உள்ளோம்...இது தான் நம் மனம் பற்றிய வேதததிரிய அறிவியல் கண்டுபிடிப்பு ... சுவாமிஜியின் உள்ளறிவு...அறிவியல் ஒரு நாள் வேததாதிரிய அறிவியலை எட்டிப் பிடிக்கும் என்று நம்புவோம், வாழ்த்துவோம்!

மேலடுக்கு-கீழடுக்கு பதிவுகள்

சில நேரங்களில் நமக்கு இப்படி ஒரு உணர்வு தோன்றுகின்றது: "நம்ம நல்ல குணத்தோட இருக்கோமே, நம்ம பிள்ளை மட்டும் என் இப்படி குரங்கு மாதிரி இருக்கு?' - வேததாதிரியம் இது போன்ற சந்தேகங்களுக்கு அருமையான விடைகளை தருகின்றது.வேததாதிரி மகரிஷி எந்த கேள்விக்கும் தான் அகக் காட்சிகளால் உடனே பதில் அளிப்பவர் . அப்படி சொன்ன விடைகளில் ஒன்று தான் இந்த latent-patent imprints, அதாவது மேலடுக்கு-கீழடுக்கு பதிவுகள்.சற்று ஆய்வோமா?ஒரு பையில் மூன்று பந்துகளை போடுவதாகக் கொள்வோம். ஒன்று சிவப்பு; ஒன்று பச்சை; ஒன்று வெள்ளை . இப்போது ஒரு பந்தை எடுப்போம். என்ன நிறம் வரும்?பச்சை அல்லது சிவப்பு அல்லது வெள்ளை - அதாவது போட்டதில் ஒன்று தான் வரும். இப்படி போட்டதில் ஒன்று வெளியில் வருவது தான் பதிவு வெளிப்படல். அதாவது நம் எண்ன அலைகளின் மையம் ஆன கரு மையம் காலம் நேரம் எல்லாம் பார்த்து தன்னகத்தே உள்ள ஒரு என்ணத்தை சரியாக மலரச் செய்யும். அதாவது இல்லாதது வராது . இது ஒரு அடிப்படை அறிவியல் உண்மை.சரி இப்போ அந்த பையில மேலும் இன்னும் மூன்று நிறமுடைய பந்துகளை போடுவோம். போட்டு உங்கள் மகனிடம் ஒன்றும் சொல்லாமல் கொடுத்து விடுங்கள் . அவர் ஒரு பந்தை எடுக்கிறார். அவருக்கு ஒரு நிறம் கிடைக்கின்றது.அது நீங்கள் போட்ட 6 நிறங்களில் ஒன்று தானே . வேறு ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லையே ? இது தான் சன்சித் கர்மா. உங்கள் பதிவுகள் அவரிடம் வெளிப்படல்.அவரும் மேலும் மூன்று புது நிற பந்துகளை போடுவதாக கொள்ளுவோம். இப்போ மொத்தம் 9 பந்துகள் 9 நிறங்களில். இப்படியே ஒரு பத்தாயிரம் தடவை போட்டு போட்டு கொடுப்பதாக கொள்வோம். கடைசியில் ஒருவர் ஒரு பந்தை அந்த பையில் இருந்து எடுகின்றார்.இந்த சூழ்நிலையில் 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மேலாக உள்ள பந்து எளிதில் வெளியே வந்து விடும். அல்லது கீழுள்ள பந்து கூட சில நேரங்களில் பையிலிருந்து வெளி வந்து விடும்.இப்படி மிக அதிகமான காலத்துக்கு உள் இருந்து உள் இருந்து யாருக்குமே தெரியாத ஒரு பதிவு ஒரு கால கட்டத்தில் கருமையத்தில் இருந்து வெளி வருவது தான் latent imprint அல்லது கீழ் நிலைப் பதிவு. அடிக்கடி தலையைக் காட்டும் மேலுள்ள பந்து தான் 'மேல் நிலைப் பதிவு' அல்லது patent imprint.இந்த latent மற்றும் patent பதிவுகள் தான் நம்மை நல்ல மனிதனாகவும், சில சமயங்களில் நாம் மகனை சற்று தீய குணத்தொடும் உருவாக்கி விடுகின்றது.இது போன்ற கண்டுபிடிப்புகளுக்காகவே 'வேததாதிரி' என்ற மஹான் நம் மனத்தில் ஒரு உயரிய நிலையை அடைகின்றார். நம்மை வழி காட்டவும் செய்கின்றார், இது போன்ற கண்டுபிடிப்புகளால்.

இறை நிலையை நாம் ஏன் இறை நிலை என்று கருத வேண்டும் ?

கீதையில் 'மிக ரகசியமான ஞானம்' என்ற ஒரு தலைப்பில் இந்தக் கருத்து செய்யுள்களில் வருகின்றது."நான் [சுத்த வெளி] உங்களுக்குள்ளாகவும் புறமாகவும் இருப்பினும், உங்களை உருவாக்கியவனாகவும் உள்ளடக்கியவனாகவும் இருப்பினும், நான் உங்களுக்கெல்லாம் மேலே தனித்து இருக்கிறேன் [சிவ களமாக]."சுத்த வெளியை இறைவன் என்றும் அதுவே சிவ களம் என்றும் தன் பாடல்களில் புதைத்த வியாசர்-இன் மூளையை எப்படிப் புகழ்வது ? வேததாதிரி மகரிஷியின் அறிவியலை கொண்டு தான் ! நமக்கு தெரிந்த ஒரே தெளிவான சுத்த வெளி தத்துவம் மகரிஷி கொடுத்தது தானே?இந்த எண்ன ஓட்டங்களில் தான் வேதாதிரி ஒரு முத்திரை பதித்து விடுகின்றார். அது என்னவென்றால் 1.சுத்த வெளியை ஏன் இறை நிலை ஏன் கருத வேண்டும் ? 2.சுத்த வெளி எப்படி பொருளாக வந்தது ? என்ற இந்த இரண்டு புதிர்ககளுக்கும் விடை அளிக்கும் ஒரே மஹான் என்ற உயரிய நிலையை அவர் அடைந்து விடுகின்றார்.முதல் கேள்வியின் விடையை ஆய்வதே இந்த மடலின் உட்கருத்து.1. ஒரு பொருள் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள இயக்கங்களின் அடிப்படை அறிவு என்று கொள்வோம். பூமி சரியாய் சுழன்று ஓடி இயங்குவதும் இந்த அறிவுடைய பொருளால் தான் , நீங்கள் சரியாய் மூச்சு விடுவதும் இந்த பொருள் அறிவாய் இயங்குவதால் தான் .2.எல்லா இயக்கங்களும் அதிலிருந்தே வந்தன என்றும் கொள்வோம். நீங்கள் இருப்பது இந்த பொருளால் தான் நீங்கள் இருக்கும் இந்த பூமி இருப்பதும் இந்த பொருளால் தான் .3.எல்லா இயக்கங்களும் அதனுள்ளேயே நிகழ்கின்றன என்றும் கொள்வோம். நீங்களும் அதற்குள் தான் , பல கோடி மைல்கள் தள்ளி இருக்கும் நட்சத்திரமும் அதற்குள் தான் .இப்பொழுது, அந்த பொருளை இறை நிலை என்று கொள்ளலாம் அல்லவா?இப்படித் தான் வியாசர் தன் நிலை விளக்கம் பெறுகின்றார் வேததாதிரியத்தில் . வியாசர் தன்னை சரி என்று நிரூபிக்க எத்தனை எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டியத்தாய் இருந்திருக்கிறது.இதில் ஒரு சூத்திரம் மலர்கின்றது நம் நவீன சிததரின் மனதில்:"இறை நிலை என்பது1. வற்றா இருப்பு2. பேறாற்ரல்3. பேரறிவு4. காலம்என்ற நான்கின் இணைப்பு - இந்த நான்கும் இணைந்ததால் சுத்த வெளியை நாம் இறைவன் என்று கொள்கின்றோம்." என்பது தான் அது .சூத்திரம் புரிந்து அதை நோக்கி மனத்தை குவித்து , இறை நிலை அடைய முயற்சி செய்வோமா ?மேலும், இந்த சூத்திரம் தந்த சுவாமிஜி 'இந்த நூற்றாண்டின் இறை நிலை அறிவியல் தந்த மஹான்' அல்லவா?

'ஏன் இறை நிலை நீயாகவும் நானாகவும் வந்துள்ளது?'

"இறை நிலை பேரறிவை தனது உள்ளடக்கமாக கொண்டது. அந்த பெரும் அறிவின் ஒரு சிறு பகுதியை நாம் 'இயல்ப்பூக்கம்' என்றும் அழைக்கலாம் . அதாவது 'இயல்பு' ஊக்கம் பெறுவது என்று பொருள்.சுத்த வெளியின் 'இயல்பு' எது ?'தன் அதிர்வு' நிலையும் அதன் விளைவாக 'தன் இறுக்க சூழ்ந்து அழுத்தும் ஆற்றலும்'.'சூழ்ந்து அழுத்தும் ஆற்றல்' என்னும் 'இயல்பு' ஊக்கம் பெற்றால் என்ன வரும்? தினிவு அடைந்து ஒரு இடத்தில் சற்றே உடைந்து துகள்-ஆக வெளிவரும்.அப்பொழுது இறை நிலை துகள்-ஆக வந்தது எப்படி?இறை நிலையின் பேரறிவு, இயல்பூககமாக செயல் படடதால் தானே.சர்க்கரை ஏன் இனிக்கின்றது?அதன் இயல்பு ஆகிய காந்தம் சுவையாக ஊக்கம் பெறுவதால். இதுவும் இயல்ப்பூககமே!பாகற்காய் ஏன் கசகின்றது?அதன் இயல்பு ஆகிய காந்தம் சுவையாக ஊக்கம் பெறுவதால். இதுவும் இயல்ப்பூககமே!இப்பொழுது சொல்லுங்கள்:இறை நிலை என் நாமாக வர வேண்டும் ?பேரறிவு உள்ள அந்த இறைநிலை எப்படி சும்மா இருக்க முடியும்? அதனால் தான் அதன் உள்ளே இருந்த இயல்பூகக நியதிப்படி எழுச்சி பெற்று நீயாகவும்

DNA and கருமையம்

நான்: இந்த DNA என்பது வேததாதிரிய அறிவியலில் என்ன ஐய்யா?நம் வேததாதிரிய

அன்பர் : அது ஒண்ணும் இல்லப்பா. கருமையம் மாதிரி தான் ...

நான்: சும்மா சொல்லாதீங்கயா...

நம் வேததாதிரிய அன்பர் : நம்ப மாட்டியா? அப்போ இப்படி வெச்சிக்கலாம், நான் ஐந்து கேள்வி கேக்குறேன், DNA ன்னா என்னான்னு உன் வாயிலிருந்தே வரும், தெரியுமா?இந்த deal எனக்கு பிடிச்சிருந்தது சரி என்று சொல்லி விட்டேன். கேள்விகள் வந்தன , நம் வேததாதிரிய அன்பரிடம் இருந்து. ஒரு பிடி பிடித்து விட்டார் என்னை !நம் வேததாதிரிய அன்பர் : கேள்வி 1 - ஒரு செல் உயிரி யில் காந்தம் உண்டா ?

நான் : உண்டு, அதுவும் அணு கூட்டமே, அதனால் உண்டு.

அன்பர் : கேள்வி 2 - சரி காந்தம் இருந்தால், அந்த ஒரு செல் உயிரி யில் காந்தம் தினிவு பெற்ற மையம் ஒன்று உண்டா ?

நான் : உண்டு, காந்தம் இருக்கும், அது துல்ளிய சம தள சீர்மை ஆற்றலினால் ஒரு மையத்தை பெற்று இருக்கும். சுவாமிஜி இதை specific gravity principle என்று கூட அழைகின்றார்களே!நம் வேததாதிரிய

அன்பர் : சரி தான் . இப்போ கேள்வி 3 - காந்தம் , தான் தினிவு பெற்ற மையத்தில் ஒரு அழுத்த புள்ளியை , அதாவது ஒரு காந்த பதிவை (magnetic imprint) ஏற்படுத்துமா இல்லயா?

நான் : ஏற்படுத்தத் தான் செய்யும். அப்படித் தானே சுவாமிஜி சொல்றாங்க...

நம் வேததாதிரிய அன்பர் : அப்படி வாய்யா வழிக்கு , இப்போ கேள்வி 4 - அந்த காந்த பதிவை பெற்ற ஒரு சிறு பகுதி அந்த செல்லின் blue print மாதிரி செயல் படத் தானே செய்யும். சரி தானே?

நான் : நிச்சயமாக. அப்படித் தானே சுவாமிஜி சொல்லி இருக்காங்க!நம் வேததாதிரிய அன்பர் : கேள்வி 5 - ரொம்ப எளிமையான கேள்வி இது : அறிவியலில் ஒரு செல்லின் blue print ன்னு எதை அழைக்கிறார்கள் ?நான் : DNA யை.

நம் வேததாதிரிய அன்பர் : இப்போ சொல்லுங்க, ' DNA என்பது ஒரு செல் உயிரியின் கரு மையம் ' என்று சொன்னால் அது சரி தானே!

நான் : நூற்றுக்கு நூறு சதவீதம் சரி தான் ஐயா!நம் வேததாதிரிய அன்பர் : நாம எல்லாருமே அந்த ஒரு செல் உயிரின் பரிணாம தோற்றங்கள் தானே...செல்கள் multiphy ஆனதால் தானே நாம் வந்தோம். அப்பொழுது நம்முடைய எல்லா செல்களிலுமே DNA இருக்கத் தானே செய்யும்.நான்: சரி தான் ஐய்யா. எப்படி ஐயா இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க ?நம் வேததாதிரிய அன்பர் : நல்லா ஆழமா தவம் செய்யுங்க தம்பி - இதை எல்லாம் சுவாமிஜி ரொம்ப நல்லாவே குடுப்பாங்க - எல்லாருக்கும்.நான் :நன்றி ஐய்யா ! மிக்க நன்றி!! உரையாடலை படித்து முடித்து விட்டீர்களா, இதையெல்லாம் சொல்லக் கூடிய மகான் நம் கரு மையத்திலும் வர வேண்டும் ன்னு ஒரு ஆசை எழுகின்றது அல்லவா...வாங்க ஐய்யா தவம் ஆழமா செய்யலாம்...

வா ழ் க வ ள மு ட ன் .

Thursday, March 15, 2007

Kayakalpa Yoga

Restructuring the body in a natural way, Kaya Kalpa helps cure and prevent diseases.
It relieves the practitioner of many of the troubles of aging.Kayakalpa Yoga is an ancient wonderful technique of the Siddhas(saints) of South India for the enhancement of life energy.

In Sanskrit, the term "Kaya" means "body and "Kalpa" means "immortal". The Science of Kayakalpa delineates the manner in which the human body can be immortalised.It has a three fold objective1
1. Maintaining youthfulness and physical health;
2. Resisting and slowing down the aging process;
3. postponing death until one reaches spritual perfection.

Benefits
Activates the brain cells to its fullest functional levels.* Increases memory power and grasping ability.* Develops the immunity system.* Reduces the effect of hereditary diseases.* Intensity of chronic diseases like piles, diabetes, asthma and skin diseases is reduced and cured.* Strengthens the uterus. Menstrual problems are reduced to a great extent.* Brings about proper arrangement of polarity of body cells.* Brings about reformation of character.* Helps in removing unwanted thoughts and habits.

Kayakalpa gives significant physical, mental as well as spiritual benefit by intensifying our life-force. As this practice is a restructuring process of the body in a natural way, no medicines or herbs are involved. Significant results have been observed in various types of chronic diseases and in overall improvement of general health. Kaya Kalpa helps cure and prevent diseases and relieves the practitioner of many of the troubles of aging.

Learning* The Kayakalpa can be learnt by those who have attained physical maturity (age above 14).* We need to spend only 3 minutes every morning and evening.*

These exercises is taught in about 3 hours time by the SKY Professors.

Tuesday, March 06, 2007

கடமை

நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள். உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Thursday, March 01, 2007

Choose Feelings

If your days seem filled with unwanted negative feelings, there is only one cure. When they come, choose them. Don't ask why, don't wonder how, don't fight them and never put yourself down for having them. But most of all never blame someone else for how you feel. If you do, it means you are still fast asleep and your choice is to be a victim. When the feelings come, even big disturbing emotional feelings say, "I choose this feeling" and know it comes because of something you have thought or done in the past, perhaps a certain belief that you have learned or an attachment that is threatened. Choice does not mean you want the feelings, but it does mean you are taking responsibility for them. And that is the beginning of self mastery. It is the first step to the healing and resolving of your emotions. But only the first step. Try this today and then ask yourself what the next step might be. If you are really interested to know, you will come to know!

Wednesday, February 07, 2007

SKY Exercises

Yogiraj Shri Vethathiri Maharishi after years of intense research has systematized a series of exercises that is suitable for all climates and all sections of the human community in the contemporary age.In the human physical system, the subtle life-force and the gross body are linked by three media: blood, heat and air. If the normal quantity and quality of these media and their circulation are adversely affected, the harmony between the body and life-force is disturbed and the result is pain.For maintaining good health one must guard against disturbances in the body, life-force and the three media of blood, heat and air.Neglect, improper or over-indulgence in food, sleep, work, sex and use of thought-force cause disturbance to the normal functioning of the body in various ways. Natural causes such as climatic changes, hereditary imprints and changes in the planetary configurations and radiation also can disturb the health and mind. It is not possible to change any of these natural forces, but we can always be cautious in our own actions and thus avoid harmful results, and practice regular exercise to maintain the required fitness.If spiritual development is to take place, the body must be free of diseases and pain to the maximum extent. Therefore, all spiritual aspirants are first and foremost advised to take up this system of physical health that would enable one to reap much more benefits in spiritual practices.The benefits of different stages of Simplified Physical Exercise are as follows

Hand Exercise

* Hands and shoulders are strengthened.* Arthritis, Numbness, Trembling of hands, pain in the joints etc. are reduced in a few days and cured with prolonged practice.* Improves the functioning of lungs.

Leg Exercises*
Legs are strengthened and flexible.* Blood circulation is regulated in the lower abdomen.* Curative and preventive for sciatica and arthritis in feet and legs.* Foot reflexology activates and benefits all the organs of the body.

Neuro-muscular breathing exercises*

Regulates the endocrine system and oxygenates the blood.* Ventilates the lungs fully, purifies the blood and increases vital energy.* Helps cure chronic headache, migraine, asthma, allergies and sinus conditions.

Eye Exercise

Helps correct and prevent defective eyesight by toning the muscles around the eyes.Prevents strain and other eye ailments.

Kapaalabhati*

Clears the congestion in the nasal passage.* Helps to cure sinusitis.

Makarasana*

Regulates the endocrine system.Massages the abdominal organs gently – liver, spleen, intestines, kidneys, pancreas.* Reduces the excessive sugar in urine and blood* Reduces kidney stones.* Relieves menstrual discomfort.* Keeps the spine and spinal nerves flexible and healthy.* Strengthens the backbone and the spinal cord.* Removes unwanted flesh and strengthens the body.* Regulates the menstrual system.

Acu-Pressure*

Blockages due to short-circuit of electrical energy are removed.* A preventive for heart ailments.* Helpful in alleviating insomnia.

Massaging*

Refreshes and tones the sense organs, facial nerves and vital organs.

Relaxation*
Removes tension and relaxes muscles all over the body.* Brings down blood pressure.* Removes recurrence of heart trouble.* Gives a wholesome rest to the entire system.